என் மலர்
நீங்கள் தேடியது "ரகானே"
- ரகானே இந்திய அணிக்காக கடைசியாக 2023ல் விளையாடினார்.
- உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ரகானே, மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். உள்ளூர் பேட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், தேர்வாளர்கள் அவரை பரிசீலனை செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.
37 வயதாகும் ரகானே, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில், 2024-25 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என படுதோல்வியடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு நான் தேவை என உணர்ந்ததாக ரகானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-
வயது வெறும் நம்பர்தான். ஒரு வீரராக உங்களுக்கு அனுபவம் இருந்தால், இன்னும் உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தால், உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்துக் கொண்டிருந்தால், தேர்வாளர்கள், உங்களை இந்திய சீனியர் அணிக்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
தேர்வு வயதை பற்றியது அல்ல. அது நோக்கத்தை பற்றியது. அது ரெட்பால் கிரிக்கெட்டின் பேரார்வம் பற்றியது. நீங்கள் ஆட்டத்தில் கொடுக்கும் கடின உழைப்பை பற்றியது. இதனால் வயதை நான் முற்றிலுமாக நம்பவில்லை.
ஆஸ்திரேலியாவை பார்த்தீர்கள் என்றால், மைக் ஹசி 30 வயதிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனார். அதன்பின்பும் அவர் ரன்கள் குவித்தார். ரெட்பால் கிரிக்கெட்டில் அனுபவம்தான் விசயம். தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நான் தேவை என்று நினைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.
இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.
ரகானே தலைமையில் இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் 2-1 என தொடரை வென்றது.
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரகானேவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
- கருண் நாயர் 174 ரன்கள் விளாசினார்.
- ருதுராஜ் கெய்க்வாட் 116 ரன்கள் சேர்த்தார்.
ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கோவா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 174 ரன்கள் விளாசினார். இதனால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர், சண்டிகாருக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன்.
- வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில்:-
இங்கிலாந்து மண்ணில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வெளிப்படையான ரகசியம் தான். லார்ட்ஸ் மைதானத்திலும் இந்திய அணி தடுமாற அதுவே காரணம். அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று இந்திய அணி செய்யும் மிகப்பெரிய தவறு யாதெனில் இங்கிலாந்து மைதானங்களில் முறையான பவுலர்களுடன் விளையாட வேண்டும்.
கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன். ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை. இவர்களில் யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்க அவர் நிச்சயம் ஆலோசித்தாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் குல்தீப் யாதவின் தேவை அதிகமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
என ரகானே கூறினார்.
- இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் விரும்புகிறேன்.
- அது என்னுடைய விருப்பம். அந்த தீ இன்னும் உள்ளே எரிந்து கொண்டே இருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் ரகானா. வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
ஆனால் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் விருப்பத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் விரும்புகிறேன். அது என்னுடைய விருப்பம். அந்த தீ உள்ளே இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. உடற்தகுதியை பொறுத்தவரை, நான் அதற்கு தகுதியானவனாக இருக்கிறேன். தற்போது ஐபிஎல் போட்டியை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதன்பின் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
நான் ஒரு வீரராக ஒருபோதும் இந்திய அணிக்கு திரும்பும் விருப்பத்தை கைவிடமாட்டேன். மைதானத்தில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எப்போதுமே முயற்சிப்பேன். 100 சதவீதத்திற்கு மேலான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். தற்போதைய நிலையில் என்னுடைய ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.
இவ்வாறு ரகனே தெரிவித்தார்.
- ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம்.
- தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக கேகேஆர் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டி குறித்து விளக்க ஒன்றுமில்லை. அங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்களுடைய முயற்சியில் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதனால் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தேன். மேற்கொண்டு அதற்கு நான் மேல்முறையீடு செய்யாமலும் இருந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
ஏனெனில் எனக்கு உறுதியாக தெரியாததன் காரணமாக நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம். நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.
பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களில் கட்டுப்படுத்தினர்.
இந்த போட்டியில் நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம். முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இது எங்களுக்கு எளிதான சேசிங்காக இருந்திருக்க வேண்டும். அதனால் நான் முதலில் இந்த தோல்வியில் இருந்து என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் அணி வீரர்களிடம் என்ன சொல்வது என்று யோசிக்க வேண்டும். தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
என்று ரகானே கூறினார்.
- கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச் மேற் பார்வையாளர் சுஜன் முகர்ஜி இதை நிராகரித்துள்ளார்.
- ஆடுகள மேற்பார்வையாளரின் இந்த கருத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிருப்தி அடைந்தது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கவுகாத்தியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா மைதானத்தில் தோற்றதால் அதன் ஆடுகள தன்மையை மாற்றி அமைக்குமாறு ஈடன் கார்டன் பிட்ச் அமைப்பாளரிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே கோரிக்கை வைத்தார். பிட்ச்சை மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்குமாறும், தங்கள் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச் மேற் பார்வையாளர் சுஜன் முகர்ஜி இதை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக 70 வயதான அவர் கூறியதாவது:-
நான் இங்கு இருக்கும் வரை ஈடன் கார்டன் ஆடுகளம் மாறாது. ஐ.பி.எல். விதிகளின்படி ஒரு அணி அதன் பிட்ச்சினை மாற்றும்படி கூறக்கூடாது. நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஆடுகளம் இப்படித் தான் இருக்கிறது. கடந்த காலங்களில் பிட்ச் இப்படித்தான் இருந்தது. இப்போது எதுவும் மாறவில்லை. எதிர்காலத்திலும் பிட்ச் மாறப்போவதில்லை.
பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள் எத்தனை விக்கெட் எடுத்தார்கள்? குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுயாஷ் சர்மா பந்தினை திருப்பி ரஸ்சலின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவ்வாறு சுஜன் கூறி உள்ளார்.
ஆடுகள மேற்பார்வையாளரின் இந்த கருத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிருப்தி அடைந்தது. கடந்த ஆண்டும் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தங்களது அணிக்கு சொந்த மண் சாதகமாக இல்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரகானே அரைசதம் விளாசினர்.
- குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.
ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.
4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் கொல்கத்தா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். ரகானே விக்கெட் இழந்த பின்னர் கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரகுவன்ஷி ஒரு பக்கம் விக்கெட்டை காப்பாற்ற மறுமுனையில் வெங்கடேஷ் அய்யர் 7 பந்தில் 6 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்தும், ரசல் 3 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா 15.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே எடுத்திருந்தது.
7-வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஓவர் (டெத் ஓவர்) என அழைக்கப்படும் கடைசி 4 ஓவரில் அதிரடியாக ஆட கொல்கத்தா அணியில் வீரர்கள் இல்லாமல் போனது.

லிவிங்ஸ்டன் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 4 ரன்களே கிடைத்தது. 18-வது ஓவரை ஹெசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ரகுவன்ஷி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் 10 ரன்கள் கிடைத்தது.
19-வது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 22 பநதில் 30 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க 4 ரன்கள்தான் கிடைத்தது.
கடைசி ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 174 ரன்கள் அடித்துள்ளது. கடைசி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடித்தது.
ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். குருணால் பாண்ட்யா 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யாஷ் தயால், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி விளையாடி வருகிறது.
- கொல்கத்தா பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
- ரகானே 26 பந்தில் அரைசதம் விளாசிய நிலையில், 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.
ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.
4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இதனால் ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.
- ரகானே, டி காக், குர்பாஸ், சுனில் நரைன் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.
- ஹர்ஷித் ராணா, வரண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு.
ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
சாம்பியன் பட்டத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடம் ஒரு அணியை மதிப்பிட இயலாது. ஏனென்றால் மெகா ஏலம் நடைபெற்ற பல வீரர்கள் மாறியுள்ளன.
பேட்ஸ்மேன்கள்
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் குறித்து ஒரு பார்வை...
ரகானே தலைமையில் கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது. அந்த அணியில் ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள்
வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள்
அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்ந்தெடுப்பதுதான் அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தொடக்க வீரர்கள்
தொடக்க வீரராக ரகானே, குர்பாஸ், டி காக் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களுடன் சுனில் நரைன் உள்ளார். இவரை தொடக்க வீரராக களம் இறக்கி பவர் பிளேயில் முடிந்த அளவிற்கு ரன்கள் குவிப்பதுதான் கொல்கத்தா அணியின் நோக்கம். கடந்த பல சீசன்களில் அவர் அதை சரியாக செய்துள்ளார்.
ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினால் பவர் பிளேயை சரியாக பயன்படுத்திக் கொள்வார். மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவாரா? என்பது ஆடும்போதுதான் தெரியும்.
டி காக் தொடக்க வீரராக களம் இறங்கக்கூடியவர். இவர் விக்கெட் கீப்பர் பணியையும் செய்வதால் குர்பாஸ், டி காக் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இரவரிடையே கடும் போட்டி நிலவும்.
ஒருவேளை ரகானே தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டால், சுனில் நரைன் கடைநிலை வீரரான களம் இறங்குவார்.
மிடில் ஆர்டர் வரிசை
மிடில் ஆர்டர் வரிசையில் துணைக் கேப்டன் வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மணிஷ் பாண்டே, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், ஆந்த்ரே ரஸல் என ஒரு பட்டாளத்தை கொண்டுள்ளது. அவர்களுக்கு மிடில் ஆர்டரில் எந்த சிரமும் இருக்க வாய்ப்பில்லை.
வேகப்பந்து வீச்சு
இந்திய வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, சக்காரியா ஆகியோரில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா ஆடும் லெவனில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஹர்ஷித் ராணா ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியிலும் சிறப்பான விளையாடினார். இதனால் அவருக்கு கூடுதல் அனுபவம் ஏற்பட்டிருக்கும். விக்கெட் வீழ்த்தும் திறன் அவருக்கு உள்ளது. வைபவ் ஆரோராவும் நல்லவிதமாக உள்ளார்.
அன்ரிச் நோர்ஜே, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இவர்களுடன் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரசல் உள்ளார்.
இதனால் மூன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். இவர்களுடன் தேவைப்பட்டால் ஆந்த்ரே லஸல், வெங்கடேஷ் அய்யராலும் பந்து வீச முடியும். வெங்கடேஷ் அய்யர் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.
சுழற்பந்து வீச்சு
சுழற்பந்து வீச்சில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் என அழைக்கப்படும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தியை கொண்டுள்ளது.
இதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூடுதலாக இரண்டு ஆல்-ரவுண்டர் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இருப்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிக சமநிலை கொண்ட அணியாக திகழும் என்பதில் எந்த ஐயம் இல்லை..
ஆனால், பந்து வீச்சாளர்கள் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் அணிக்கு கைக்கொடுப்பார்களா? என்பது சற்று சந்தேகம்தான்.
இதனால் நடப்பு சாம்பியமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்ல ஆர்வமாக களம் இறங்கும்.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
- சென்னை அணி நிர்வாகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் 2023-ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெறுகிறது. கடந்த சீசன் முதல் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் மாஸ்டர் படத்தில் விஜய் பஸ்சில் ஏறுவது போல உள்ள காட்சியில் விஜய்க்கு பதிலாக ரகானே இடம் பெற்றுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சி.எஸ்.கே. குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
- டோனியின் கேப்டன்ஷிப் கீழ் மீண்டும் விளையாட ஆவலுடன் இருக்கிறேன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்க்யா ரகானே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறேன். ஆனால் நிர்வாகமும், கேப்டனும் என்னிடம் என்ன கேட்டாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை எப்போதும் அணிதான் முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்படுவேன். எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.
டோனியின் கேப்டன்ஷிப் கீழ் மீண்டும் விளையாட ஆவலுடன் இருக்கிறேன். இது நான் கற்று கொள்ள சிறந்த வாய்ப்பு. அவரது தலைமையின் கீழ் இந்திய அணியில் விளையாடி இருக்கிறேன்.
முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறேன். சி.எஸ்.கே. குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.
முதல் போட்டியில் அரை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம்சன் இந்த போட்டியில் எடுத்து 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சஞ்சு சாம்சன் : 3138* ரன்கள் (118 போட்டிகள்) 2. ரகானே : 3098 ரன்கள் (106 போட்டிகள்) 3. ஷேன் வாட்சன் : 2474 ரன்கள் (84 போட்டிகள்) 4. ஜோஸ் பட்லர் : 2378* ரன்கள் (60 போட்டிகள்) 5. ராகுல் டிராவிட் : 1324 ரன்கள் (52 போட்டிகள்)
குறிப்பாக கடந்த வருடம் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் 2008-ல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ராஜஸ்தானை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையும் படைத்தார்.






