search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gambhir"

    • பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான்.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் 'ஜவான்' திரைப்படம் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் அறிமுகமான இவர் படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். 1992-ஆம் ஆண்டு 'தீவானா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.


    இவர் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருந்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.


    இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், "ஷாருக்கான் பாலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல, அனைவர் மனதிலும் அவர் ராஜாதான். நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.


    • விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல.
    • தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.

    புதுடெல்லி:

    சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

    இந்த நிலையில், மைதானத்தில் விராட் கோலி - கம்பீர் இடையேயான மோதல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்:-

    விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல. தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.

    வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். ஏன் வார்த்தை போரில் ஈடுபட வேண்டும்?. இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள். இது போன்ற செயல்களால் இவர்களை பின் தொடரும் பல கோடி இளைஞர்கள், சிறார்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

    என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    அவதூறு துண்டு பிரசுரம் செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று ஆம் ஆத்மி வேட்பாளருக்கு காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி எம்.பி. தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷியும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங் லல்வியும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் காம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் கூறி இருந்தார். காம்பீர் வினியோகித்த துண்டு பிரசுரத்தில் தன்னை பற்றி மோசமாக அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    காம்பீர் சார்பில் வெளியிடப்பட்ட லட்சக் கணக்கான துண்டு பிரசுரத்தில் தனது ஒழுக்கம் குறித்து மோசமான வகையில் அவதூறு வார்த்தையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக அதிஷி கண்ணீர் மல்க தெரிவித்தார். இத்தகைய எண்ணத்துடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று காம்பீர் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-


    கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறாரா?

    இவ்வாறு காம்பீர் கூறினார்.

    மேலும் தன் மீது அவதூறு கூறியது தொடர்பாக அவர் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #Gambhir #bjp #parliamenetelection
    டெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் தோனி தலைமயிலான 2011, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடினார். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம். ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருந்தார்.

    பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக இவர் தெரிவித்தார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் லோக்சபா தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். #Gambhir #bjp #parliamenetelection
    ஐபிஎல் கோப்பையை வீராட் கோலி வெல்லவில்லை என்று கவுதம் காம்பீர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதற்கு கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார். #kohli #Gambhircomment

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது இந்திய அணி கேப்டன் வீராட்கோலியை விமர்சனம் செய்து இருந்தார்.

    அவர் கூறும்போது, கோலி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வில்லை. ஆனால் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் காம்பீர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீராட்கோலி அளித்த பேட்டி வருமாறு:-

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.

    எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.


    நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.

    நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம் என்றார். #kohli #Gambhircomment

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி வீரர் கம்பீர் சதம் அடித்தார். #RanjiTrophy #Gambhir
    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லியில் நடந்து வரும் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 3-வது நாள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்து 19 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவுதம் கம்பீர் 185 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் கம்பீர் முதல் தர போட்டியில் பதிவு செய்த 43-வது சதம் இதுவாகும்.

    இந்தூரில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஜய் ரோஹேரா 267 ரன்கள் (21 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை 21 வயதான அஜய் ரோஹேரா படைத்தார். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டில் மும்பை வீரர் அமோல் முஜூம்தார் 260 ரன்கள் எடுத்ததே முதல் தர போட்டியில் அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. ரோஹேராவின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியுடன் மத்திய பிரதேச அணி இன்னிங்ஸ் வெற்றியை வசப்படுத்தியது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் ( பிரிவு) கேரள அணி முதல் இன்னிங்சில் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 116 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பாபா இந்திரஜித் (92 ரன்), கவுசிக் காந்தி (59 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. #RanjiTrophy #Gambhir
    விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் கவுதம் காம்பிர் சதம் அடிக்க ஹரியானாவிற்கு எதிராக டெல்லி எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒரு ஆட்டத்தில் பீகாரை மும்பை அணி எளிதில் வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹரியானா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பிஷ்னோய் 117 பந்தில் 85 ரன்களும், சண்டிலா 88 பந்தில் 59 ரன்களும் சேர்க்க 49.1 ஓவரில் 229 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது ஹரியானா. டெல்லி அணி சார்பில் சைனி 3 விக்கெட்டும், கெஜ்ரோலியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக கவுதம் காம்பிர் களம் இறங்கினார். நேற்று அவருக்கு பிறந்த நாளாகும். 37 வயது முடிவடைந்து 38-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் காம்பிர் பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு வேடிக்கை நிகழ்த்துவாரா? என்ற எதிர்பார்த்து இருந்தது.

    இந்த எதிர்பார்ப்பை சற்று கூட வீணடிக்காமல் காம்பீர் 72 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது சதத்தால் டெல்லி அணி 39.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



    காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    ×