என் மலர்
நீங்கள் தேடியது "Eden Garden"
- கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச் மேற் பார்வையாளர் சுஜன் முகர்ஜி இதை நிராகரித்துள்ளார்.
- ஆடுகள மேற்பார்வையாளரின் இந்த கருத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிருப்தி அடைந்தது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கவுகாத்தியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா மைதானத்தில் தோற்றதால் அதன் ஆடுகள தன்மையை மாற்றி அமைக்குமாறு ஈடன் கார்டன் பிட்ச் அமைப்பாளரிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே கோரிக்கை வைத்தார். பிட்ச்சை மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்குமாறும், தங்கள் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச் மேற் பார்வையாளர் சுஜன் முகர்ஜி இதை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக 70 வயதான அவர் கூறியதாவது:-
நான் இங்கு இருக்கும் வரை ஈடன் கார்டன் ஆடுகளம் மாறாது. ஐ.பி.எல். விதிகளின்படி ஒரு அணி அதன் பிட்ச்சினை மாற்றும்படி கூறக்கூடாது. நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஆடுகளம் இப்படித் தான் இருக்கிறது. கடந்த காலங்களில் பிட்ச் இப்படித்தான் இருந்தது. இப்போது எதுவும் மாறவில்லை. எதிர்காலத்திலும் பிட்ச் மாறப்போவதில்லை.
பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள் எத்தனை விக்கெட் எடுத்தார்கள்? குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுயாஷ் சர்மா பந்தினை திருப்பி ரஸ்சலின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவ்வாறு சுஜன் கூறி உள்ளார்.
ஆடுகள மேற்பார்வையாளரின் இந்த கருத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிருப்தி அடைந்தது. கடந்த ஆண்டும் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தங்களது அணிக்கு சொந்த மண் சாதகமாக இல்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
- மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் போது மழை பெய்ததால் மைதானத்தில் நீர் சூழ்ந்தது.
மழையால் பிரதான ஆடுகளத்தின் பக்கத்தில் இருந்த இரண்டு பயிற்சி ஆடுகளங்கள் மழையால் ஈரப்பதத்துடன் இருந்தது. தொடர்ந்து அதை உலர செய்யும் பணிகளை மைதான பராமரிப்பு ஊழியர்கள் மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை இந்தப் பணி நீடித்தது.

ஸ்பாஞ்ச் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.
இந்நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதற்குள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இருப்பது போல முழு ஆடுகத்தையும் மூடக்கூடிய அளவுக்கு கவர் வசதியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என குஜராத் கிரிக்கெட் வாரியத்திற்கு, பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சேஹாஷிஷ் கங்குலி வலியுறுத்தி உள்ளார்.






