என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai super kings"

    • அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
    • அஷ்வினின் ஆவணப்படம் நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் வெளியாகிறது.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது

    இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று IPL, TNPL போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் எதிரான போட்டியில் சென்னை அணி 230 ரன்கள் குவித்தது.
    • 83 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை சென்னை அணி சந்தோசப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, "அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்" என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அதற்கு அவர் பெயர் S-ல் தொடங்குமா?

    என்று சக வர்ணனையாளர் சோப்ரா, கிரிக்கெட் கேட்க, அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சுரேஷ் ரெய்னா சிரித்தபடியே பதில் கூறினார்.

    • எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன.
    • ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, "எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன். ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை. கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "வைபவ் சூர்யவன்ஷி உங்கள் காலைத் தொட்டு வணங்கியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த தோனி, "வயதாகிவிட்டதைப் போல உணர்ந்தேன். எங்கள் அணி வீரர் ஆண்ரே சித்தார்த்திடம், உனக்கு என்ன வயது? எனக் கேட்டேன். அவர் என்னை விட 25 வயது இளையவராம். இதைக் கேட்டபோதுதான் 'ஆம் நமக்கு நிஜமாகவே வயதாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது" என்று கூறினார்.

    • 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
    • புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் சி.எஸ்.கே. அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் சி.எஸ்.கே. அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.

    இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் கடைசி இடத்தில் சென்னை அணி நிறைவு செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
    • நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்ட போகிறேன்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, "எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன். கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஆயுஷ் மாத்ரே - கான்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கான்வே அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    • அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஆயுஷ் மாத்ரே - கான்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கான்வே அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    • சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    • ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை அணி கடைசி இடத்தில நிறைவு செய்தது கிடையாது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி இன்று தீவிரம் காட்டும்.

    அதே சமயம் 5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை அணிகடைசி இடம் பெற்றது கிடையாது. இந்த போட்டியில் பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம். 43 வயதான கேப்டன் தோனிக்கு இதுவே ஐபிஎல் இல் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    • முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
    • 5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்து விட்ட அந்த அணி முந்தைய ஆட்டத்தில் லக்னோவிடம் 33 ரன் வித்தியாத்தில் தோல்வி கண்டது. அந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்றில் உத்வேகத்துடன் களம் இறங்கும் முனைப்புடன் உள்ள குஜராத் அணி டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க தீவிரம் காட்டும்.

    5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, லக்னோ, கொல்கத்தாவுக்கு எதிராக) 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் அந்த அணி கடைசி இடம் பெற்றது கிடையாது. பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம். 43 வயதான டோனிக்கு இது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய வெற்றியோடு நிறைவு செய்து கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி போராடும். ஆனால் வலுவான பேட்டிங் மற்றும் பந்து வீச்சை கொண்ட குஜராத் அணியின் சவாலை சமாளிப்பது எளிதானது கிடையாது என்பதில் சந்தேகமில்லை.

    • ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஊர்வில் படேல் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அஸ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இதனையடுத்து பிரேவிஸ் மற்றும் துபே ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் தோனியும் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். துபே 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதிவரை போராடிய தோனி 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் சென்னை அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    • இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

    12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம். அடுத்த சீசனுக்கு அணியை வலுப்படுத்தும் நோக்குடன் வீரர்களை பயன்படுத்துவோம் என கேப்டன் டோனி கூறியுள்ளார். இதனால் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் சூரர்களின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த சாம் கர்ரன், ஜாமி ஓவர்டான் மறுபடியும் இந்தியா வரவில்லை. மற்றபடி சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, வேகப்பந்து வீச்சாளர் பதிரானா தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளனர். தனது கடைசி லீக்கில் கொல்கத்தாவை தோற்கடித்த சென்னை அணி 13 நாள் இடைவெளிக்கு பிறகு களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி நெருங்கி வந்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த சீசனில் 9-வது ஆட்டங்களில் இலக்கை நோக்கி ஆடியதில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதில் 5 ஆட்டங்களில் 11 ரன்னுக்கும் குறைவான வித்தியாசமாகும். அதாவது ஒன்றிரண்டு பெரிய ஷாட்டுகள் அடித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். அதை செய்ய முடியாமல் போய் விட்டதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனையுடன் குறிப்பிட்டார். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (6 அரைசதத்துடன் 523 ரன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல் உள்ளிட்டோர் கைகொடுத்தாலும் பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-20 இடங்களில் ஒரு ராஜஸ்தான் பவுலர் கூட இல்லை. எனவே பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஏற்கனவே லீக்கில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்ய ஆர்வம் காட்டுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஆயுஷ் மாத்ரே, டிவான் கான்வே, உர்வில் பட்டேல், பிரேவிஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), நூர் அகமது, அன்ஜூல் கம்போஜ், கலீல் அகமது, பதிரானா.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, கிவெனா மபாகா, துஷர் தேஷ் பாண்டே, ஆகாஷ் மத்வால், பசல்ஹக் பரூக்கி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×