என் மலர்
நீங்கள் தேடியது "Ashwin"
- அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார்.
- இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும். இந்நிலையில், ஏலத்தில் அஷ்வினை எந்த அணியும் எடுக்கவில்லை.
அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BBL தொடரில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
- பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உடன் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே இருப்பதால், அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இலங்கைக்கு எதிராக 4 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினாலும், சூப்பர் ஓவரை அட்டகாசமாக வீசினார். இவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் டி20-யில் அர்ஷ்தீப் சிங்தான பிரீமியர் பவுலர் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பே, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவன் அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏன் இந்தியாவின் பிரீமியர் பவுலர்களில் ஒருவர் என்பதை அவர் காட்டினார்.
இந்திய அணியில் பும்ரா இருக்கும்போது, மக்கள் அர்ஷ்தீப் சிங்கை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரீமியர் பவுலர் என்று கூறுவேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது.
- 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
குக் வித் கோமாளி' மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது. அ.ப. இராசா வரிகளில், சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து இருந்தார். 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
மிக விரைவிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்த இப்படம் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின்.
அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது.
- இந்த டி20 லீக்கை தொடர்ந்து அஸ்வின் BBL-க்கு செல்ல உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்த டி20 லீக்கை தொடர்ந்து அவர் BBL-க்கு செல்ல உள்ளார். அங்கு நான்கு அணிகள் அவரை தங்கள் அணிக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
- கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக நடுவரை பாகிஸ்தான் பகடையாக பயன்படுத்தியது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 'சூப்பர்4' சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.
ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தியிருந்தது. ஆகவே இப்போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேட்டி அளித்த அஸ்வின், "இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமை மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிசிசி-ஐ ஒன்றும் சொல்ல முடியாமல் நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை பகடையாக பயன்படுத்தியது,
பாகிஸ்தானுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்யாதீர்கள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் போட்டியை சுவாரசியமற்றதாக மாற்றுகிறீர்கள். நீங்கள் 150 ரன்களுக்கு அவுட்டாகி, இரண்டாவது இன்னிங்சில போட்டியை பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் ஆக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.
- ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என முடிவு எடுத்த நிழைலயில் ILT20 ஏலத்தில் பெயர் பதிவு செய்துள்ளார்.
- ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என அறிவித்தார். இந்திய அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடாத வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி20 (சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடுவது உறுதியானது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ டோட் க்ரீன்பெர்க், அஸ்வினுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் பிக் பாஷ் லீக்கில் விளையாட முன்வந்தால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவது முதல் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார்.
- 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியிருந்தார்.
அந்த வகையில் 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்து விளையாடினார். அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் சில போட்டிகள் அவர் விளையாடவில்லை. இதனால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிர்வரும் ஐ.எல்.டி டி20 சீசனுக்காக என்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐ.எல்.டி டி20 லீக் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர்களான யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது.
- ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.
சென்னை:
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின். இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார்.
ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது:-
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என அவர் கூறினார்.
பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார்.
- மஞ்ச சொக்காவை போட்டுக்கொண்டு பாகுபலி மீண்டும் இறங்குவார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.
மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெவால்ட் ப்ரீவிஸ் சி.எஸ்.கே. அணியில் சேர்க்கப்பட்டது குறித்து அந்த அணியின் வீரர் அஸ்வின் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "டெவால்ட் பிரேவிஸை சரியான நேரத்தில் அணியில் எடுத்தது சிஎஸ்கேவின் MASTERSTROKE என பொருள்படும் வகையில்தான் நான் பேசியிருந்தேன். ஐபிஎல் விதிமுறைகளை எந்த வகையிலும் CSK மீறவில்லை. அடுத்த சீசனுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். மஞ்ச சொக்காவை போட்டுக்கொண்டு பாகுபலி மீண்டும் இறங்குவார்" என்று தெரிவித்தார்.
- குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்டு ப்ரீவிஸ்-ஐ 2.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது.
- அதிக தொகை கொடுத்திருக்கலாம் என்ற வகையில் அஸ்வின் பேசியிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.
மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்னதாகவே அறிவிப்பு.
- முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா, அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் பங்கேற்றார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என டிரா செய்ய முடியும் என்ற நிலையில் கூட பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என உறுதியாக கூறப்பட்டது. முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் விளையாடினார்.
4ஆவது போட்டிக்கும் 5ஆவது போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பும்ரா ஓய்வு குறித்து அஸ்வின் கூறுகையில் "இது கடந்த கால இந்திய அணியாக இருந்திருந்தால், பும்ராவை இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாட வற்புறுத்தியிருப்பார்கள். இப்போது கூட, அணி நிர்வாகம் இதைப் பார்த்திருக்கலாம். ஆனால் பும்ராவின் பார்வையில், இது ஒரு சரியான முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தொடர் முழுவதும் விளையாட தகுதியாக இருந்தால் மட்டுமே இனிமேல் பும்ராவை டெஸ்ட் தொடரில் சேர்க்க இருப்பதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






