என் மலர்
நீங்கள் தேடியது "ஐஎல்டி20"
- அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார்.
- இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும். இந்நிலையில், ஏலத்தில் அஷ்வினை எந்த அணியும் எடுக்கவில்லை.
அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BBL தொடரில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது.
- இந்த டி20 லீக்கை தொடர்ந்து அஸ்வின் BBL-க்கு செல்ல உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்த டி20 லீக்கை தொடர்ந்து அவர் BBL-க்கு செல்ல உள்ளார். அங்கு நான்கு அணிகள் அவரை தங்கள் அணிக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்.
- தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.
திருப்பதி:
கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார்.
இதனையடுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது. குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டதாக கூறப்படுகிறது.
அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது.
இந்த நிலையில் துபாயில் நடைபெற உள்ள ஐ.எல்.டி. 20 போட்டியில் பங்கேற்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகியதாக அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன். மேலும் தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.
- இந்த போட்டியில் பொல்லார் 36 ரன்களை விளாசினார்.
- அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.
துபாயில் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ்- எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார் 36 ரன்களையும், தொடக்க வீரர் குசல் பெரேரா 33 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஜமான் 52 பந்துகளில் 67 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19.1 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்சர்களை நிறைவு செய்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் 2-வது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19-வது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.
அதிக சிக்ஸ்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:-
கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1056 சிக்சர்கள் (455 இன்னிங்ஸில்)
கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 901 சிக்சர்கள் (613 இன்னிங்ஸ்)
ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 727 சிக்சர்கள் (456 இன்னிங்ஸில்)
நிக்கோலஸ் புரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 592 சிக்சர்கள் (350 இன்னிங்ஸில்)
காலின் முன்ரோ (நியூசிலாந்து) - 550 சிக்சர்கள் (415 இன்னிங்ஸில்)






