search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ILt20"

    • சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.
    • இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    துபாய்:

    சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. பங்கேற்று விளையாடிய 6 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ப் ஜெய்ண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. நிகோலஸ் பூரன் 57 ரன்னும், பிளட்சர் 53 ரன்னும், முகமது வசீம் 43 ரன்னும், குசால் பெரேரா 38 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து ஆடிய துபாய் கேபிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும் தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்.
    • தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

    திருப்பதி:

    கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார்.

    இதனையடுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது. குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டதாக கூறப்படுகிறது.

    அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் துபாயில் நடைபெற உள்ள ஐ.எல்.டி. 20 போட்டியில் பங்கேற்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகியதாக அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன். மேலும் தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

    ×