என் மலர்
நீங்கள் தேடியது "குக் வித் கோமாளி"
- படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
- இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி.
சின்னத் திரையில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஷாலின் ஜோயா. மேலும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியாற்றிய ஷாலின் ஜோயாவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். மலையாளம் கலந்த தமிழில் அவர் பேசுவது, போட்டியாளர்களாக பங்கேற்ற வடிவுக்கரசி, நளினி ஆகியோரிடம் நகைச்சுவை உரையாடல் நிகழ்ச்சியையே கலகலப்பாக்கி வந்தது.
இந்நிலையில் ஷாலின் ஜோயா முதன் முதலாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிராமத்து பின்னணியில் 90 கால கட்டத்தில் நடக்கும் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தில் அருண், பிரிகிடா, ஜாவா சுந்தரேசன், தேவதர்ஷினி, அருள்தாஸ், அஷ்வின் காக்கு மனு ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.கே.இண்டர் நேஷனல் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இது குறித்து ஷாலின் ஜோயா கூறியதாவது:- 90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடைபெறும் இக்கதையின் படி ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது.
அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் பேண்டசி கலந்து சொல்ல இருக்கிறோம். இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. தரமான படைப்புகளை ரசிக்கும் தமிழ் ரசிகப் பெருமக்கள் எங்கள் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷாலின் ஜோயா ஏற்கனவே மலையாளத்தில் இயக்கிய 'திபேமிலி ஆக்ட்' படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- 2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது.
- 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
குக் வித் கோமாளி' மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது. அ.ப. இராசா வரிகளில், சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து இருந்தார். 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
மிக விரைவிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்த இப்படம் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
- மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
- திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.
அது மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில், வெங்கடேஷ் பட்டின் இடத்தை மாற்றி அவர் நீதிபதியாக இணைந்தார். தற்போது 6வது சீசனிலும் அவர் நடுவராக பணியாற்றுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இவர் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஜாய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
மேலும் திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார். திருமணம் செய்துகொண்ட உடனே 6 மாத கால கர்ப்பமா? என்று இந்த விவகாரம் நெட்டிசன்களிடையே பேசுபொருளானது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.
ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்ட நிலையில், தற்போது அவர் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்
- மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று அவரது இரண்டாவது திருமணத்தை செய்துக் கொண்டார்.
- தற்போது 6வது சீசனிலும் அவர் நடுவராக பணியாற்றுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.
அது மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில், வெங்கடேஷ் பட்டின் இடத்தை மாற்றி அவர் நீதிபதியாக இணைந்தார். தற்போது 6வது சீசனிலும் அவர் நடுவராக பணியாற்றுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று அவரது இரண்டாவது திருமணத்தை செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இவர் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஜாய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

மேலும் தற்பொழுது மாதம்பட்டி ரங்கராஜ் அவரது மனைவி கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. நேற்று திருமணம் இன்று 6 மாதம் கர்ப்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் முதல் திருமணம் ஸ்ருதியுடன் நடைப்பெற்றது மேலும் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மீடியா மேசன்ஸ்” நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
- சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த media masons நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பல ஹிட்டான ஷோக்களான "சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr.Mrs சின்னத் திரை, சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், சூப்பர் மாம்" போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியது மீடியா மேசன் என்ற நிறுவனம்தான்.
இதுகுறித்து "மீடியா மேசன்ஸ்" நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
அதில், "தனது 25 வருட தொலைக்காட்சி பயணத்தை நாங்கள் விஜய் டிவியிடம் பணியாற்றினோம். விஜய் டி.வி எங்களின் இன்னொரு வீடு என்றும், துரதிஷ்ட்டவசமாக , சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை. இது வரைக்கும் எங்கள் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார், யார் அதை தயாரிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி
- குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வரவுள்ளார்.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
Cooku with Comali 5 ?? | Coming Soon | Launch Promo | #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty pic.twitter.com/gUuUmFoe6z
— Vijay Television (@vijaytelevision) March 18, 2024
- இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை.
- புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.
சின்னதிரையில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராகா வாரந்தோரும் மகிழ்விக்கவும் மிக நகைச்சுவை பாணியில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சி. கடந்த 4 சீசன்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் தற்பொழுது புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.
இதற்குமுன் இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை. அவருக்கு பதில் சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கிறார். மற்றொரு நடுவராக தாமு இருக்கிறார்.
இந்த சீசனில் குக்காக - யூடியூபர் இர்பான்,வசந்த் வசி, நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா, நடிகை ஷாலின் சோயா, நடிகர் அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பாடகியான பூஜா வெங்கட் இதில் பங்கேற்க உள்ளனர்.
கோமாளியாக புகழ், ராமர், சுனிதா, வினோத், சரத், திவாகர் மற்றும் சிலர் இதில் பங்கேற்கவுள்ளனர். மற்ற சீசங்களைப் போலவே இந்த சீசனும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி.
- அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.
'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் . இதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!' என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் 'நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி' எனக் கூறி வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இவர் இந்த பதிவின் மூலம் காதலை உறுதி படுத்தியுள்ளாரா, எனப்து புரியாத புதிராகவே உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது. எனக்கு அது கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன்.
- இந்த சீசனில் பெண் தொகுப்பாளர் ஒருவர் தான் ஒரு போட்டியாளர் என்பதையே மறந்து என் பணிகளில் அதிகம் இடையூறு செய்தார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 5 அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இனிமேல் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப்போவதில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்மையுடனும், கடின உழைப்புடனும் எனது 100% உழைப்பைப் போட்டு இந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன்.
சுயமரியாதையை விட இங்கு எதுவும் பெரிதில்லை. பிரபலம், பணம், வாய்ப்புகள், தொழில் இவையெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் தான். சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது. எனக்கு அது கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். அதன் காரணமாகவே 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியிருந்து வெளியேறுகிறேன்.
இந்த சீசனில் பெண் தொகுப்பாளர் ஒருவர் தான் ஒரு போட்டியாளர் என்பதையே மறந்து என் பணிகளில் அதிகம் இடையூறு செய்தார். நிகழ்ச்சியில் அவரது ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக எனது உரிமையைக் கேட்பதும், எனக்காக நான் குரல் கொடுப்பதும் இந்நிகழ்ச்சியில் தவறாக மாற்றப்பட்டது. எனக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் அதை நான் நிறுத்தமாட்டேன். இப்போது நடப்பது முன்பு இருந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியாக இல்லை.முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
2010-ம் ஆண்டு முதல் நான் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது 15 ஆண்டுகால இந்தப் பயணத்தில் இப்படியொரு முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை. ஆனால் எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் இன்னும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவளுக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழுங்கள், வாழ விடுங்கள். என்னை ஆதரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்காவை தான் மணிமேகலை குறிப்பிட்டு பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






