என் மலர்
நீங்கள் தேடியது "madhampatty rangaraj"
- ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
- கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஜாய் கிரிசில்டா அளித்த மனுவில்,
மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்துதல் மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தேன். ஆனால் தற்போது ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறை விசாரணை திருப்திகரமாக இல்லை. கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தாததால் தான் மகளிர் உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன். இதனால் ரங்கராஜ் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோருகிறேன் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு வரும் 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
- என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.
- மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?” என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். 'ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?" என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் முன்பு பேசிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார் .
வீடியோவை வெளியிட்டு ஜாஸ் கிரிசில்டா கூறியிருப்பதாவது:- இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி...
நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் கணவர் என்று சொல்லப்படுபவர் இந்த வீடியோ எனக்கு அனுப்பினார். நாங்கள் பிரிந்திருக்கும்போதோ அல்லது நேரில் சந்திக்க முடியாதபோதோ அவர் தினசரி இதுமாதிரியான வீடியோக்களை எனக்கு அனுப்புவார் என்று கூறியுள்ளார்.
- மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
- ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 16-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார். ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.
- மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 16-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
- ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை ஐகோர்ட்டை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்", என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
- சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும்.
- பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை.
சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் என்பதையெல்லாம் தாண்டி தற்போது நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடுத்துள்ளார். சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை ஐகோர்ட்டை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்", என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திருமண மோசடி புகார் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
- சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர்.
- சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி என்.செந்தில்குமார் முன் நடைபெற்றது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும் எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜயை நீதிமன்றம் விமர்சித்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல்துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
- எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை.
- இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த துணை ஆணையர் வனிதா இன்று ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தன்னுடைய இரண்டு வருட வாழ்க்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கமிஷன் அலுவலகத்தில் கொடுத்த புகாரை இங்கே அனுப்பி வைத்துள்ளனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். முதல் திருமணம் முடிந்த நிலையில் என்னை திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதனால்தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டுகிறேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என யாரும் என்னை மிரட்டவில்லை. அது தொடர்பாக அணுகவில்லை. எனது குழந்தைக்கு மிரட்டல் இருப்பதாக கேள்ளவிப்பட்டேன். அதற்கான பாதுகாப்பை எடுப்பார்கள்.
எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை. அவர் வெளியே ஜாலியாக சுற்றலாம். நான் போராடுவேன். புகார் நான் கொடுத்துள்ளதால் என்னை முதலில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மாதம்பட்டி ரங்கராஜை அழைத்து விசாரணை நடத்துவார்கள். கண்டிப்பாக அவர் மீது எப்ஐஆர் போடுவார்கள். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். இதனால் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பாசிட்டிவ் ஆன ரிப்ளை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். என்ன மாதிரியான ஆதாரங்கள் கொடுத்துள்ளேன் என்பதை தற்போது கூற இயலாது.
இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
- மாதம்பட்டி ரங்கராஜ் கிரிஸ்ல்டா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துக் கொண்டார்.
- அவர் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.
அது மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக.
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் 2-வது திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இவர் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஜாய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
மேலும் திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார். திருமணம் செய்துகொண்ட உடனே 6 மாத கால கர்ப்பமா? என்று இந்த விவகாரம் நெட்டிசன்களிடையே பேசுபொருளானது.
இதனையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கிரிஸ்ல்டா இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படம் மற்றும் இருவரும் லிப் லாக் செய்து கொள்ளும் புகைப்படத்தையும் சேர்த்து ஒரு வீடியோவாக கிரிஸ்ல்டா பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் எனக்காக பிறந்தாயே எனதழகி என்ற பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்காக வைத்துள்ளார். இந்த வீடியோவை எடிட் செய்தது தனது கணவர் ரங்கராஜ் எனவும் இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.
இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசின்கள தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை.
- புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.
சின்னதிரையில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராகா வாரந்தோரும் மகிழ்விக்கவும் மிக நகைச்சுவை பாணியில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சி. கடந்த 4 சீசன்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் தற்பொழுது புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.
இதற்குமுன் இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை. அவருக்கு பதில் சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கிறார். மற்றொரு நடுவராக தாமு இருக்கிறார்.
இந்த சீசனில் குக்காக - யூடியூபர் இர்பான்,வசந்த் வசி, நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா, நடிகை ஷாலின் சோயா, நடிகர் அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பாடகியான பூஜா வெங்கட் இதில் பங்கேற்க உள்ளனர்.
கோமாளியாக புகழ், ராமர், சுனிதா, வினோத், சரத், திவாகர் மற்றும் சிலர் இதில் பங்கேற்கவுள்ளனர். மற்ற சீசங்களைப் போலவே இந்த சீசனும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றது.
- இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.

சீனுராமசாமி
இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ்
அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.






