என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema News"

    • ஒரு படத்தையே ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.
    • ஒரு புதிய முயற்சியாகத்தான் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

    உலக சினிமா பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஒலி இல்லாத படமாக வெளிவந்து, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து பேசும் படம் உருவானது. கருப்பு-வெள்ளை படத்தில் இருந்து ஈஸ்மெண்ட் கலர், பின்னர் கலர் திரைப்படங்கள் உருவாகின. சினிமாவை எடுக்கும் தொழில்நுட்பங்களிலும் பல்வேறு வளர்ச்சியை திரைத்துறை கண்டிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளிலும் பல்வேறு படிநிலைகளை கடந்து வந்து விட்டோம். ஒரு படத்தையே 'ஏ.ஐ.' தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.

    இந்த காலகட்டத்திலும் விருதுக்காகவும், பாராட்டுக்காகவும் மெனக்கெடும் திரை கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்கள் படத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி, அதன் மூலம் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகத்தான் 'மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்' திரைப்படம் உருவாகியிருக்கிறது.


    மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்:

    ஊமைப்படம், பேசும்படம் தொடங்கி, ஏ.ஐ. தொழில்நுட்ப சினிமா வரை வந்திருந்தாலும், இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை. அந்தப் புதுமையை 'மெட்டா' திரைப்படம் செய்திருக்கிறது.

    இது ஒரு இந்திய திரைப்படம், அவ்வளவுதான். இந்தப் படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமெண்ட், திரில்லர், கற்பனை ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் ஒற்றை கதாபாத்திரம்தான். அந்தப் பெண் கதாபாத்திரமும் முகம் காட்டாதபடி வந்துபோகிறது. படத்தில் எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் உலக அரங்கில் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். இதுதான் முதல் முறையாம். அதைப் பெருமையாக படத்தின் தொடக்கத்திலேயே 'கார்டு' போட்டு சொல்லவும் செய்திருக்கிறார்கள். 'இந்தப் படம் உலகின் முதல் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற, ஒற்றை கதாபாத்திரம் உயிர்வாழும் படம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்பதை பதிவு செய்கிறார்கள்.


    இந்தப் படத்தின் கதைப்படி, மெட்டா என்ற இளம்பெண், தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில், பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தைக் காண்கிறாள். அங்கே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக்கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை, ஒரு மாயப் பானையில் சிக்க வைக்கிறது. அந்தப் பெண், தன்னை அறியாமல் செய்த கர்ம விணை இயற்கை அளித்த பதிலடியாக இது அமைகிறது. ஒரு சாதாரண நாளில் அவளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மெட்டா எடுக்கும் அறிவு சார்ந்த மற்றும் சாகச முயற்சிதான், இந்தப் படத்தின் கதை.

    இந்தப் படத்தை பிரசாந்த் மாம்புல்லி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒற்றை நபராக, எந்த காட்சியிலும் முகத்தை பதிவு செய்யாத கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட, இந்தப் பெண்ணின் தலையில் பானையை கவிழ்த்தி, அவர் முகம் தெரியாத வகையில்தான் அறிமுகம் செய்தனர். அதனால் அந்தப் படத்தில் நடித்த பெண் யார் என்பதில் கூட இன்றும் ஒரு தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள இந்தத் திரைப்படம், முன்னதாக உலக திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.


    'மெட்டா: திடேஸ்லிங் கேர்ள்' திரைப்படத்தை இயக்கியவர், பிரசாந்த் மாம்புல்லி. இவர் கேரள மாநிலம் குருவாயூரை பூர்வீகமாகக் கொண்டவர். 2009-ம் ஆண்டு மோகன்லாலை கதாநாயகனாக வைத்து, 'பகவான்' என்ற படத்தை இயக்கி, திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை அவர் 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்திருந்தார்.

    அடுத்ததாக கன்னடத்தில் அறிமுகமான இவர், அங்கு சிவராஜ்குமாரை நாயகனாக வைத்து 'சுக்ரீவா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை 18 மணி நேரத்தில் எடுத்து முடித்தார். இதன் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். இந்த சாதனையானது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    இப்படி இதுவரை பிரசாந்த் மாம்புல்லி இயக்கிய 7 படங்களும் ஏதோ ஒரு வகையில் சாதனைக்குரிய படமாகவே அமைந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் இப்போது 'மெட்டா' திரைப்படம் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

    ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'

    சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.

    அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.

    ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.

    • தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்?
    • இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள்

    வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.

    வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ''வ. கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.

    இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.

    மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.

    ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

    இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், '' ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

    இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் 'படையாண்ட மாவீரா'.

    இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.

    என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.

    தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.

    அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார். 

    • நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்று தகவல் வெளியானது.
    • நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளி யாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித் துள்ளார்.

    இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

    அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.

    நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.

    அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.

    விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
    • 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது ஒருவர் ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது. அவர் யார்? என விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர்.


    அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஓட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும் என்றார்.

    சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாக சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.
    • யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை.

    நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. தொடர்ந்து மலையாள திரை உலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

    பிரபல நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வரும் நஸ்ரியா, சினிமா, பொதுநிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருபவர்.


    இந்நிலையில் சில மாதங்களாக நஸ்ரியா சினிமா, சமூக வலைதளங்கள் என எந்த தொடர்பில்லாமல் இருந்து வந்தார்.

    இது குறித்து நஸ்ரியாபகத் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நான் ஏன் இவ்வளவு நாள் வெளியே வரவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். சினிமா உள்பட என்னை சார்ந்த அனைவரோடும் தொடர்பில் இருப்பேன்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.

    என் 30-வது பிறந்தநாள், புத்தாண்டு, நான் நடித்த 'சூக்ஷூமதர்ஷினி' படத்தின் வெற்றி என எல்லாவற்றையும் நான் கொண்டாட தவறி விட்டேன்.

    யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன். அதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
    • செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி இளைய மகள் குஷி கபூர். இவரும் இந்தி திரை உலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார்.


    குஷி கபூரும், நடிகர் வேதாங் ரெய்னாவும் 'ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் உருவாகி காதலித்து வருவதாகவும், பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.


    இந்நிலையில் குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் நெக்லசில் 'வி' என்ற எழுத்தும், 'கே' என்ற எழுத்தும் இரண்டுக்கும் நடுவில் 'லவ்' சிம்பிளும் உள்ளது.

    இதை அடுத்து குஷி கபூர் தனது காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

    • பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.
    • பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

    'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

    ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு 'இலை' என்ற ஆண் குழந்தை இருக்கிறது.


    இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    'சிந்து சமவெளி' படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

    நாம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் செய்யக்கூடாது என்பதை அந்த படம் வெளியான பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போது கேவலம் எனக்கு 17 வயது மட்டும் தான். இளம் நடிகை என்பதால் இயக்குனர் சொன்னதை கேட்டு குருட்டுத்தனமாக சம்மதித்து நடித்தேன்.

    இதனால் நான் வேதனைக்கு உள்ளாகியது மட்டுமின்றி, எனது சினிமா வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நான் நடித்த 'மைனா' பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.


    அதன் பிறகு எனக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற மாபெரும் நடிகர்கள் கூட போன் செய்தார்கள். விபரீதமான எதிர்ப்பு காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

    நான் அதன்பிறகு சினிமாவில் வெற்றி பெற்று சாதித்தேன். ஆனால் அந்த விவாதத்துக்குரிய படம் மீண்டும் ரீலீஸ் ஆனது. அப்பொழுது கூட புரமோஷனல் மெட்டீரியல் தவறான வழியில் சென்று விவாதத்தை ஏற்படுத்தியது.

    இவற்றுக்கெல்லாம் பின்னணி சினிமா கேவலம் வியாபாரத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.

    இதை கருத்தில் கொண்டு ஒரு நடிகை எவ்வளவு பலமான அடி விழுந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை எனக்கு புரிய வைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
    • சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார்.

    இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் கடந்த 25-ந் தேதி மாரடைப்பால் காலமானார். 48 வயதில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மறைவு பாரதிராஜாவை நிலை குலைய செய்துள்ளது. மிகுந்த சோகத்தில் இருக்கும் பாரதிராஜாவை திரை உலக பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் பாரதிராஜாவை இசையமைப்பாளர் கங்கை அமரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். பாரதிராஜாவை சந்தித்த கங்கை அமரன் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவர் எழுதிய சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார்.

    தொடர்ந்து பாரதிராஜாவிடம் கங்கை அமரன் இதெல்லாம் நியாபகம் இருக்கா இந்த பாட்டை 10 நிமிடங்களில் எழுதினேன். பாம்குரோவ் ஓட்டலில் இருக்கும் போது பாட்டை எழுதி கொண்டு வா என்று சொன்னீர்கள்.

    நானும் வெளியில் போய்விட்டு 10 நிமிடத்தில் எழுதி கொண்டு வந்தேன். பாடலை பார்த்து விட்டு, "நீ நல்லா எழுதியிருக்கடா" என பாராட்டினீர்கள். நான் ரொம்ப லக்கிமேன். இதுபோல் எத்தனை பேரை உருவாக்கி இருக்கீங்க என கூறினார்.

    பழைய நினைவுகளோடு பாடலை பாடி பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் இரங்கல்.
    • தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

    கே.பாலச்சந்தரின் 'அவர்கள்', 'பகலில் ஒரு இரவு' படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார் (வயது 71).


    இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவ மனையில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    • குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
    • ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.


    பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.

    கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.

    கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
    • ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார்.

    ஈரோடு:

    நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடிகர் விக்ரம், படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வீர தீர சூரன் படம் திரையிடப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மாலை நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்து பேசினர்.


    பின்னர் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திரையரங்கில் வீர தீர சூரன் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களில் மக்களின் ஆதரவு இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்கு தான் படம் எடுத்தோம்.

    வீர தீர சூரன் படத்தின் பகுதி ஒன்று விரைவில் வரும். இயக்குனர் ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார். ரசிகர்களுக்காக எடுத்த இந்த படம் இந்தளவிற்கு மக்களிடையே சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடினார்.இதில், ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்றார். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் தெரிவித்து படம் எப்படி இருந்தது எனக்கேட்டார்.

    ரசிகர்கள் "ஐ லவ் யூ" எனக் கூறியதற்கு, விக்ரமும் "ஐ லவ் யூ" என்றார். தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து ரசிகருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

    அப்போது கூட்டத்தில் ஒரு ரசிகர் நடிகர் விக்ரமனை நோக்கி உங்களைப் போன்று வயசாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய விக்ரம், வயதாவது நல்லது தான்.

    வயசாகாமல் இருக்க சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிக்க வேண்டும் என நகைச்சுவையாக பதில் அளித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சாமி, அந்நியன் பட வசனத்தை ரசிகர்களிடம் பேசி விக்ரம் அங்கிருந்து கிளம்பி சென்றார். 

    ×