என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cinema News"
- தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
- இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான குறிகிய காலத்தில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.
பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதில் கலந்து கொண்ட மாளவிகா சிவப்பு நிற சேலையில் ஜொலித்தார்.
இப்படியாக படங்களில் பிஸியாக இருக்கும் மாளவிகா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருவார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/25/3575894-malavika.webp)
அந்தவகையில் தற்போது இவர் சிகப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- மதன் கார்க்கி ‘முடிவிலி’ என்னும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
- முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது 'முடிவிலி' என்னும் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது பற்றி மதன் கார்க்கி கூறியதாவது:-
நான் உருவாக்கியுள்ள முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடலை பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
வருகிற 26-ந் தேதி ஸ்பார்ட்டி பைவ் மற்றும் சில வலைதளங்களில் இந்த இசை ஆல்பம் வெளியாகிறது. என் தந்தை வைரமுத்து ஆல்பத்தை கேட்டு விட்டு நன்றாக பாராட்டினார்.
மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருப்பது பற்றி வியந்து கேட்டார்.
ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் ஆபத்து கிடையாது. கிராம போன் வரும்போது பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதிர்ப்புகளை மீறி கிராமபோன் அறிமுகமானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் அதில் பண்ணி விட முடியாது. அதற்கும் மனிதன் தேவைப்படுகிறான்.
மனிதனின் கட்டளைப்படி தான் ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் எதையும் உருவாக்க முடியும். புதிதாக அனிமேஷன் கிராபிக்ஸ் பணிகளுக்கு அடையாறில் 'பா' என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கியுள்ளேன்.
திரைப்படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் இங்கு நடைபெறுகிறது. புராண கதையில் இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன். படத்தில் சூர்யா, ஜான்வி கபூர் இணைந்து நடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
- இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.
மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.
ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார்.
- கொட்டுக்காளி, விடுதலை-2 ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் நகைச்சுவை காட்சியில் நடித்து பிரபலமானவர் சூரி. தொடர்ந்து பல படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்தார்.
இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை அடைந்தது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/15/3328286-newproject22.webp)
அடுத்ததாக சமீபத்தில் வெளியான கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் கொட்டுக்காளி, விடுதலை-2 ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/15/3328288-newproject23.webp)
இந்நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சூரி சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்சில் கூலிங் கிளாஸ் போட்டபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, இது நம்ம புரோட்டா சூரியா? என கேட்டு ஏராளமான பார்வையாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
- இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. .
இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இப்படத்தை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்ற படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
- நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரை உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நெப்போலியன். அரசியலில் ஈடுபட்டு மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.
நெப்போலியனுக்கு திருமணமாகி மனைவி ஜெயசுதா மற்றும் தனுஷ், குணால் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இயற்கை முறை சிகிச்சை பெற்றார்.
தனுசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அக்சயா என்பவருடன் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோகால் மூலம் நடந்தது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/12/3254157-newproject24.webp)
நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருகிறார்.
திருமண விழாவில் திரை உலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.
- அனுபமா பரமேஸ்வரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்ரன். தொடர்ந்து தனுசுடன் கொடி, அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே, ஜெயம் ரவி ஜோடியாக சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் தெலுங்கு மொழியில் பல புதிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு திரை உலகில் அனுபமா பரமேஸ்வரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.
இந்தநிலையில் அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வில்லியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
சில நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்களை பார்க்கும் போது நமக்கு ஏன் இது போன்ற கதாபாத்திரங்கள் அமைவதில்லை என ஏங்குவேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் நடிக்க நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
- மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/10/3205052-23.webp)
நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத் பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
- ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/09/3184844-36.webp)
முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ள பகத்பாசில் 'கூலி' படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
இதையொட்டி படக்குழுவினர் பகத்பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் பகத்பாசிலின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/09/3184845-37.webp)
இதைத்தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத்பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மலையாளத்தில் தயாராகி பகத்பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
- உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.
இந்திய திரை உலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் உஷா உதுப். 1960-ம் ஆண்டு தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/09/3184180-31.webp)
சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. உஷா உதுப், ஜானி சாக்கோ என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
உதுப் கணவரான ஜானி (வயது 78) நேற்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் உடலுக்கு அசவுகரியமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. ஜானி சாக்கோ, உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் திரைக்கு வர இருக்கிறது.
- தனுசுக்கு மிகப்பெரிய ரசிகைநான்.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் துஷாரா விஜயன். தொடர்ந்து அநீதி, தனுசுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன், விக்ரமுடன் வீர தீர சூரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/09/3181233-17.webp)
இந்நிலையில் துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
ராயன் படத்தில் நடித்ததை சாதனையாக உணர்கிறேன். இந்த உணர்வை விவரிக்க முடியாது.
தனுசுக்கு மிகப்பெரிய ரசிகைநான். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இயக்குனர்களில் தனுஷ் வித்தியாசமானவர். அவர் இயக்குனராக பணியாற்றுவதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆக்ஷன் என அவர் சொல்லிவிட்டு கேமரா முன்பு ஓடி செல்லும் தருணம் வியக்க வைத்தது. வடசென்னையில் பிறந்து வளர்ந்து இறக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். எந்த படத்தில் நடிக்கும் போதும் என் கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். 35 வயதிற்குள் நான் நடிப்பை விட்டு விடுவேன் என நினைக்கிறேன்.
அதன்பிறகு உலகம் முழுவதும் பயணம் செய்ய நினைத்துள்ளேன். 35 வயதிற்கு மேல் நான் பயணம் செய்யாத நாடுகள் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
- மனரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தேன்.
இந்தி திரை உலகில் பிரபல தயாரிப்பாளராகவும் வர்ணனையாளராகவும் தொகுப்பாளராகவும் திகழ் பவர் கரண் ஜோகர். முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். காபி வித் கரண் ஜோகர் நிகழ்ச்சி மூலம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கரண் ஜோகர் பாடி டிஸ் மார்பியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/08/3160733-25.webp)
இதுபற்றி கரண் ஜோகர் கூறியதாவது:-
எனக்கு 8 வயதில் இருந்தே பாடி டிஸ் மார்பியா என்ற நோய் இருக்கிறது. என் தோற்றத்தை பற்றி எதிர்மறை சிந்தனை ஆக இருக்கும். இதையடுத்து பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொண்டேன் மனரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தேன்.
உடல் தோற்றத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக தளர்வான உடைகளை எல்லாம் அணிந்து கொள்வேன். உடல் ரீதியாக நான் நன்றாக இருப்பதாக பலர் சொன்னாலும் மனரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)