என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samantha"

    • இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
    • சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.

    நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.  லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது. 

    அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  


    • யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
    • சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இப்படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், 'அஞ்சான்' படம் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. தற்போது ரீ எடிட் செய்து தயாராகி உள்ள 'அஞ்சான்' படத்தின் ப்ரிவ்யூ ஷோ நடந்தது. இந்த ப்ரிவ்யூ ஷோவில் சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் கலந்து கொண்டார். அவருடன் இயக்குநர் சரணும் ரீ எடிட் செய்த படத்தை பார்த்துள்ளார்.

    இதையடுத்து இயக்குநர் லிங்குசாமியை இருவரும் பாராட்டியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். 



    • இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

    சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.

    இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

    தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
    • சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் ‘பேபி குயின்’ என்று அழைக்கப்படுகிறார்.

    திரை உலகில் 'ஹிட்' படங்கள் கொடுத்து வருமானத்தை பெருக்கி கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் பல நடிகைகள் முதலீடு செய்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் முன்னணி கதாநாயகிகள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர்.

    நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து சென்னையில் அபார்ட்மென்ட், ஐதராபாத், கொச்சியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    சமந்தா: சினிமா உலகில் உச்சத்தை தொட்டுள்ள சமந்தா ஐதராபாத்தில் பலகோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கி 'பிராபர்டி குயின்' என்று பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.

    காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையான காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டிலும் பேரரசியாக இருக்கிறார். மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வணிக வளாகங்களில் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.



    ஹன்சிகா: தமிழ் சினிமா ரசிகர்களால் 'சின்ன குஷ்பு' என்று வர்ணிக்கப்படுபவர் ஹன்சிகா. சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு, அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் 'பேபி குயின்' என்று அழைக்கப்படுகிறார்.

    ராஷ்மிகா: ராஷ்மிகா ஐதராபாத், பெங்களூரு, மும்பையில் அபார்ட்மென்ட்கள், வீடுகள் வாங்கி இருக்கிறார். 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படும் 'பிராபர்டி கிரஷ்' ராஷ்மிகா மந்தனா.

    ஷில்பாஷெட்டி: ஷில்பா ஷெட்டி மும்பையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்கள், பங்களாக்கள் மட்டுமின்றி துபாயிலும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து வணிக வளாகங்களிலும் பங்கு வைத்துள்ளார்.

    கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானி மும்பையில் அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்.

    தமன்னா: தமன்னா மும்பை ஐதராபாத்தில் வீடுகள் மட்டுமின்றி சில தொழில் அதிபர்களுடன் இணைந்து பிசினஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    வித்யாபாலன்: நடிகை வித்யாபாலன் மும்பையில் பல அபார்ட்மெண்ட்கள் வாங்கி 'ஸ்மார்ட் இன்வெஸ்டர்' என புகழ் பெற்று வருகிறார்.

    • பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.
    • வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன்.

    பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தெலுங்கில் அவர் தயாரித்து வெளியிட்ட 'சுபம்' படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    தற்போது சினிமாவில் இருந்து விலகப்போவதாக சமந்தா கூறியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், "ரசிகர்கள் எனக்கு தந்த ஆதரவை என்றுமே நான் மறக்க மாட்டேன். அதேவேளை பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.

    வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன். எனவே நடிப்பதை நிறுத்தலாமா? என்றும் யோசிக்கிறேன்" என்று சமந்தா குறிப்பிட்டார்.

    சமந்தாவின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்தாலும், 'சமந்தா விளையாட்டுக்காக இதை சொல்லியிருக்கலாம்' என்று மனதை தேற்றி வருகிறார்கள்.

    • சமீபகாலமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் ‘ஸ்லிம்' ஆக மாறியிருக்கிறார், சமந்தா.
    • காய்கறி மட்டுமே உணவாக எடுத்து வருகிறார்.

    பல்வேறு சோதனைகளைத் தாண்டி, மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ள 'சுபம்' என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறினார் சமந்தா. தற்போது புதிய படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

    சமீபகாலமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் 'ஸ்லிம்' ஆக மாறியிருக்கிறார், சமந்தா. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வருகிறார். காய்கறி மட்டுமே உணவாக எடுத்து வருகிறார்.

    இதனால் சமந்தாவின் 'டயட்' என்னவென்று அவர் செல்லும் இடங்களிலும், அவரது சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனாலும் சமந்தா வாயைத் திறப்பதே இல்லையாம்.

    ஏற்கனவே சமந்தா சொன்ன ஒரு மருத்துவ சிகிச்சை (நெபுலைசர்) ஆபத்தானது என்று பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தமுறை சமந்தா 'அலர்ட்' ஆகிவிட்டார். இதனால் யார் கேட்டாலும், 'பிடித்ததை சாப்பிடுங்க' என்று கும்பிடு போடாத குறையாக கூலாக சொல்லி தப்பித்து விடுகிறார்.

    ஏற்கனவே பட்ட 'அடி', கண் முன் வந்து போகுமா இல்லையா...

    • சமந்தாவின் டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தது.
    • இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.

    பிரபல நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்கள் பலரால் இப்படம் ரசிக்கப்பட்டது. அப்படத்தில் சமந்தா ஒரு கேமியோ கதாப்பாத்திரம் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சமந்தா மீண்டும் 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.

    இவர் இதற்கு முன் ஓ பேபி என்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. சமந்தா தொடர்ந்து இந்தி படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஃபேமிலி மான் சீசன் 2, சிட்டாடெல்; ஹனி பனி. மேலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரக்த் பிரமந்த் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
    • திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களமாகும்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிடாடெல் ஹனி பனி என்ற வெப் தொடரில் சமந்தா நடித்தார்.
    • இந்த தொடரை பிரபல இயக்குனரான ராஜ் இயக்கினார்.

    தென்னிந்திய சினிமா நடிகைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சில மாத காலங்களாக திரைப்படம் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது.

    அதற்கு முன் சிடாடெல் ஹனி பனி என்ற வெப் தொடரில் சமந்தா நடித்தார். இந்த தொடரை பிரபல இயக்குனரான ராஜ் இயக்கினார். இந்நிலையில் இயக்குநர் ராஜும் சமந்தாவும் லிவ்-இன் ரெலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும். விரைவில் இருவரும் ஜோடியாக மும்பையில் குடியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சமந்தாவின் மேலாளர் பதிலளித்துள்ளார். சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் இனி திருமணமே வேண்டாம் என கூறி இருந்தார். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். அவர்களுக்கு இடையே அவ்வாறு எந்த ஒரு பந்தமும் இல்லை என கூறியுள்ளார், 

    • சமந்தா ட்ரலாலா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
    • சுபம் திரைப்படம் வரும் மே 9 வெளியாகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான சிடாடெல்: ஹனி பனி வெப் தொடரில் நடித்து இருந்தார். இத்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சமந்தா ட்ரலாலா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் மே 9 வெளியாகிறது.

    படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தா மேடையில் பாடும் பாட்டை கேட்டு எமோஷனலாகி கண் கலங்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

    அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமாக கமெண்ட்ஸை பதிவிட்டு வந்தனர். சமந்தா மிகவும் பாவம், அவரது மனதில் நிறைய வலி இருக்கிரது போன்ற செய்திகள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

    இதனை தெளிவு படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளார் அதில் " நேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. விசாகப்பட்டின மக்களுக்கு நன்றி. நீங்கள் என்மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. நான் கண்கலங்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. நான் ஏற்கனவே பல இடத்தில் கூறியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன், என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானது. பிரகாசமான லைட்டுகளை பார்த்தால் என் கண்ணில் இருந்து தண்ணீர் வடியும் இதனை பலரும் நான் எமோஷனலாகி அழுகிறேன் என புரிந்துக் கொள்கின்றனர். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன், மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    • டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார் சமந்தா
    • சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

    நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

    சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. தற்பொழுது திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற காட்சிகள் நகைச்சுவையாக டிரெய்லரில் அமைந்துள்ளது.

    டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோ பாடலாக ஜன்ம ஜன்மல பந்தம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் சமந்தா நடனம் ஆடிருப்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது
    • திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

    சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. தற்பொழுது திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற காட்சிகள் நகைச்சுவையாக டிரெய்லரில் அமைந்துள்ளது.

    டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ×