search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samantha"

    • புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
    • இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

    விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில்  பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
    • ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.

    தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    தற்போது அல்லுஅர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

    அவருக்கு திரை உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமந்தா தெரிவித்த வாழ்த்து பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புள்ள ராஷ்மிகா உங்களுக்கு இது மற்றொரு அழகான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.

     

    தமன்னா வெளியிட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஷ்மிகா. உங்களுக்கு இது சிறந்த ஆண்டாகவும் நிறைய அன்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    சக நடிகையான ராஷ்மிகாவுக்கு எனது வாழ்த்துக்கள் என நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

     

    இவ்வாறு ஏராளமான நடிகர், நடிகைகள் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    பிறந்த நாளையொட்டி புஷ்பா 2 படக் குழுவினர் படத்தில் ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு படமாகும்.
    • சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

    பிரபல இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து 'ராஜா ராணி' மூலம் இயக்குனராகி பிரபலமானவர் அட்லி. நடிகர் விஜய்யுடன் இணைந்து தொடர் வெற்றிப் படங்கள் கொடுத்தார்.

    இதையடுத்து பாலிவுட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' படத்தை இயக்கினார்.'ஜவான்' திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தை அட்லி இயக்க இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்த தினமான ஏப்ரல் 8- ந் தேதி வெளியாகுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

    தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. புஷ்பா - 2 வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




    இந்நிலையில் அட்லீயின் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் நடிகை சமந்தா ஈடுபட்டு உள்ளார்.அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்ஷன், பொழுதுபோக்கு படமாகும்.இப்படத்தில் சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.அட்லீ -அல்லு அர்ஜுன் புதிய படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார்
    • மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. 'நுவ்விலா' படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு சினிமா துறையில் விஜய் தேவரகொண்டா அறிமுகமானாலும். 2016 ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் இவரை மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்.

    இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விஜயதேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    அர்ஜூன் ரெட்டி புகழ் உலகமெங்கும் பரவியது. விஜய் தேவரகொண்டாவை ஒரு ரக்கட் பாய்-க்கு முன்னுதாரணமாக வைத்து இருந்தனர். அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

    பின் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் , கெமிஸ்டிரியும் மிக அழகாக அமைந்து இருக்கும். பின் 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையெ எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

    இந்நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா கோவிந்தத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன், பரசுராம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் மிருணாள் தாகுர் ஜோடியும் வெற்றி பெறும் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார்.
    • நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார்

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி இந்திய திரை பிரபலங்கள் பலர் ஒருவருக் கொருவர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரன்களுடன் 'ஹோலி' கொண்டாடினார்.

    ரஜினி முகத்தில் அவரது பேரன்கள் மகிழ்ச்சியாக கலர் பொடிகளை பூசினர். பதிலுக்கு ரஜினியும் பேரன்கள் முகத்தில் வர்ணங்களை பூசி மகிழ்ந்தார்.

    இதுபோன்று நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ராய்லட்சுமி, கியாரா அத்வானி, ரித்திகாசிங், நிமிஷா சஜயன், திஷா பதானி, ரவீனா தாண்டன், அவரது மகள் ராஷா உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ் மகள் மால்டி மேரியுடன் இணைந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த பண்டிகையை கொண்டாட பிரியங்கா சோப்ரா கணவரும், ஹாலிவுட் பாடகருமான நிக்ஜோனாஸ் வெளிநாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்பே மும்பை வந்திருந்தார்.

     

    நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார். இதுபோன்று அமிதாp பச்சன், சிரஞ்சீவி, சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷய்குமார், டைகர் ஷெராப், விஜய் தேவரகொண்டா உள்பட பலர் ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
    • இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை  சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.

    அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்வை விவாகரத்து செய்தார்.அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் டான்ஸ் ஆடினார்.அதன்பின் 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.




    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடினார்.
    • வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன?

    தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திடீரென மயோடிசிஸ் எனும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.

    அந்த வகையில் உரையாடிய போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்தார். சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த சமந்தா, "என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் அறியாமல் இருந்தது தான் என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு," என்று தெரிவித்தார்.

    • சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார்.
    • நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. தெலுங்கு மொழியில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டார். இதையொட்டி சிகிச்சைக்கு பின் சினிமாவில் இருந்து விலகி சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.

    அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள்.

    விரைவில் சினிமாவில் நடிக்க திரும்ப இருக்கிறேன்.

    ஆனால் அதற்கு முன்பு உடல் நலம் பற்றிய பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.

    • நடிகை சமந்தா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


    சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, இவர் ' ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் ' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சமந்தா, "ட்ரலாலா பிக்சர்ஸ் புதிய தலைமுறை யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல இது ஒரு தளமாகும் " எனக் குறிப்பிட்டு உள்ளார்.


    மேலும், தான் சிறுவயதில் கேட்ட 'பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்' என்ற ஆங்கிலப் பாடலில் உள்ள ட்ரலாலா என்ற வார்த்தையில் இருந்து தான் இந்தப் பெயர் வந்ததாக சமந்தா விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமந்தா, எம் டிவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை சமந்தா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மயோசிட்டிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


    சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார்.


    சமந்தா நடிப்பது மட்டுமல்லாமல் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சமந்தா ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை இந்த அமைப்பின் மூலம்  தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் அவரைப் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'குஷி'.
    • இப்படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'குஷி'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன் என்றும் இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.


    இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சொன்னது போன்று 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘குஷி’.
    • இப்படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் பேசியதாவது, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை எங்கள் குடும்பங்களுக்கு தருகிறேன். அடுத்த பத்து நாட்களில் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்குவேன். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்தத் தொகை வழங்கப்படும். அப்போது தான் குஷியின் வெற்றி எனக்கு முழுமையடையும் என்று பேசினார்.





    ×