என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Samantha"
- ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது.
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளார். இதனையடுத்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நெபுலைசர்' கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் "ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து, பலரும் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பேட்மிட்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், 'மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இறுதியாக இத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய சொந்த அனுபவத்தை தான் நான் பகிர்ந்தேன். இருப்பினும் பொதுவெளியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
- உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
- சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.
இந்தி நடிகையான ஹினா கான் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். நோயில் இருந்து விரைவில் மீள்வேன் என்றும், இந்த கஷ்ட நேரத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஹினா கான் விரைவில் குணமாக வேண்டி பலரும் வாழ்த்தினர்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவும் ஹினா கான் குணம் அடைய வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து சமந்தா கூறும்போது, "நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைய உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இரு. ஹினாகான் ஒரு போராளி'' என்று கூறியுள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/04/3065553-hinakan.webp)
இதையடுத்து சமந்தாவுக்கு நன்றி தெரிவித்து ஹினா கான் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை. வாழ்க்கையில் வரும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.
உங்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டு வருகிறேன். உங்கள் அன்புக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார்
- விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது அதைத்தொடர்ந்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பாடலான சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகியது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சமீபத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்த அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
- வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/29/2954621-6.webp)
தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.
இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷாருக் கான் ஏற்கனவே ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்துள்ளார்.
- சமந்தா முதன்முறையாக ஷாருக்கான உடன் நடிக்க உள்ளார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த டங்கி படம் வெற்றி பெற்றது. இந்த படம் விசா இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்பவர்களின் அவலை நிலையை காட்டுவதை கருவாக கொண்டதாகும். இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் புதுப்படம் மூலம் இணைய இருக்கிறது.
இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஷாருக் கான் ஏற்கனவே ஜவான் படத்தில் தென்இந்திய நடிகையான நயன்தாராவுடன நடத்தியுள்ளார். தற்போது சமந்தா உடன் நடிக்க இருக்கிறார்.
அதிரடியான தேசபக்தி கொண்ட படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா கடைசியாக 2023-ல் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறா
- தனது பூனையுடன் சமந்தா ரெட் லைட் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வரும் சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருந்தார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/08/2537395-untitleddesign-2024-06-08t123435822.webp)
இதற்கிடையில் தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட்காஷ்டில் சொல்லப்படும் மருத்துவ குறிப்புக்கள் தவறானவை என்று சமீபத்தில் சர்ச்சையும் எழுந்து அடங்கியது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/08/2537412-untitleddesign-2024-06-08t123522494.webp)
இந்நிலையில் சருமத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தனது மயோசிடிஸ் நோயை குணப்படுத்த வெளிநாடுகளில் பல்வேறு தெரபிகளை எடுத்து வரும் சமந்தா, தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த தெரபியை தனது பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'ரெட் லைட் தெரபி டேட் ' என தனது பூனையுடன் சென்ற டேட்டிங் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.
- எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.
- இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/07/2517630-7.webp)
இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம். நானும் அப்படித்தான்.
மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப்போல் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 'ஐஎம்டிபி'யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13-வது இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்''என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
- இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.
நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
- ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.
இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/08/2175291-5.webp)
அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18 கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/08/2175313-7.webp)
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/08/2175314-8.webp)
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/08/2175315-9.webp)
நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.
- விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
- பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.
2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. படம் வசூலில் அள்ளி குவித்தது. விஜயுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
எந்தளவுக்கு படம் வரவேற்பு பெற்றதோ. அதேயளவு மாளவிகா மோகனனின் நடிப்பு கேலி செய்யப்பட்டது.
அவர் காட்சியில் அளவு கடந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கிறார் என்று கேளி பொருளானார்.
பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அதைதொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் " அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க?" என்று கேட்ட கேள்விக்கு " உங்களுக்கு எப்பொழுது இந்த கேள்வி கேட்க ஒரு தகுதி வருகிறதோ அன்று நான் ஆக்டிங் கிளாஸ் சேருவேன்" என்று கூலாக பதிலளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஒரு ரசிகர் 'எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு?' என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன்,
"கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா? இப்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் , பிடித்த நடிகை குறித்த கேள்விக்கு அனுஷ்கா ஷெட்டி மற்றும் சமந்தா என்று மாளவிகா மோகனன் பதிலளித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம்.
- உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம். பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பகத் பாசிலுடன் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு , மன்சுர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தின் பாடலான இலுமினாட்டி பாடல் இணைய தளத்தில் வைரலாகியது. பின் பகத் பாசில் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் பகத் பாசிலின் 'எடா மோனே' வசனம் மிகவும் பிரபலமானது.
சமீபத்தில் திரைப்பிரபலமான சமந்தா , சைத்திரா மற்றும் பலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து நயன்தாரா இப்படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தாண்டுக்கான சிறந்த படமாக ஆவேஷம் அமையும், ஜித்து மாதவனின் இயக்கம் கமர்சியல் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும், ஃபாஃபா - தி சூப்பர் ஸ்டார், வாட் எ கில்லர் பெர்ஃபாமன்ஸ், கேங்க்ஸ்டர் சாகா மாஸ்ஸென பகத் பாசிலின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
அதைத்தொடர்ந்து படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரையும் பாராட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.
- இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து சமந்தா நடித்துள்ளார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.. இப்படம் மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்றது. ஏப்ரல் 28 ஆம் தேதி { இன்று} 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கும் பல திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் " மா இண்டி பங்காரம்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக்குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)