search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samantha"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன்
    • நானும் சமந்தாவும் தங்களது சொந்த காரணங்களுக்காக விவாகரத்து முடிவை எடுத்தோம்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே 2021 இல் அறிவித்தனர்.

    இதனையடுத்து கடந்தாண்டு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்தார்.

    இந்நிலையில், நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தது தொடர்பாக நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார்.

    அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய நாக சைதன்யா, "நானும் சமந்தாவும் தங்களது சொந்த காரணங்களுக்காக விவாகரத்து முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். இதற்கு இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை.

    திருமண உறவில் இருந்து பிரிந்து நாங்கள் இருவரும் எங்களது சொந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஏன் என்னை கிரிமினல் போல நடத்துகிறீர்கள்?

    நான் 'உடைந்த' குடும்பத்திலிருந்து வந்தவன். எனவே அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன், ஏனென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி நான் நன்றாக அறிவேன். இது இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பள்ளியில் நடந்த ‘ராக்கிங்’ கொடுமையில் மிஹிர் அகமது என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சமந்தா பதிவு செய்துள்ளார்.

    கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த 'ராக்கிங்' கொடுமையில் மிஹிர் அகமது என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், 'ராக்கிங்' கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி என் மனதை முற்றிலும் நொறுக்கி விட்டது. இது 2025, ஆனாலும் ஒரு சில தனி நபர்கள் ஒருவருக்கு இழைத்த கொடுமையில் மற்றொரு இளைஞரின் வாழ்க்கையை நாம் இழந்து இருக்கிறோம்.

    ராக்கிங்குக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ளன. இருப்பினும் மாணவர்கள் பேச பயப்படுகின்றனர். ஏனெனில் புகார் செய்வதால் பின்னால் ஏற்படும் விளைவுகளுக்கு பயப்படுகிறார்கள். யாரும் கேட்க மாட்டார்கள் என்ற பயத்தால் மவுனமாக பாதிக்கப்படுகிறார்கள். மிகிருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது பெற்றோருக்கு முடிவு கிடைக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு கருணை, பயம், அடிபணிதல் ஆகியவற்றை கற்பிப்போம். 'ராக்கிங்' கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் மரணம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும். இந்த விவகாரத்தில் கிடைக்கும் நீதி என்பது வேறு எந்த மாணவர்களுக்கும் இதே வலியை ஏற்படுத்தக் கூடாத வகையில் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எங்களின் திருமணத்திற்கு திட்டமிட்டோம்.
    • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் முறையாக தனிப்பயணம் சென்றோம்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்களாக ஆண்டனி தட்டிலை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் காதலை அறிவித்தார். ஆனால் கீர்த்தி சுரேஷ் காதல் குறித்து சில நண்பர்களுக்கு மட்டும் முன்பே தெரியும் என கூறியுள்ளார்.

    இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-

    என்னுடைய காதல் குறித்து யாருக்கும் தெரியாது. என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும். மேலும் நடிப்புத்துறையில் சமந்தா, ஜெகதீஷ் (ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார்), அட்லீ, ப்ரியா, கல்யாணி, ஐஸ்வர்யா லெஷ்மி, விஜய் சார் என வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எங்களின் திருமணத்திற்கு திட்டமிட்டோம்.



    எங்கள் காதல் விவகாரம் முன்பே வெளிவரும் என்று நான் நினைத்தேன், ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்துவிட்டோம். நாங்கள் இருவரும் எங்கள் தனிப்பட்ட விஷயங்களை முடிந்தவரை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறோம்.

    எங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம் கூட 2017-ம் ஆண்டு ஜெகதீஷ் எங்களை பாங்காக் அழைத்துச் சென்றபோதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் முறையாக தனிப்பயணம் சென்றோம் என்றார்.



    மேலும், தான் 12-ம் வகுப்பு படிக்கும் போது ஆண்டனியை காதலிக்க தொடங்கியதாக கூறும் கீர்த்தி, அவர் தன்னை விட ஏழு வயது மூத்தவர் என்றும் கத்தாரில் வேலை செய்வதாகவும் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
    • அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.

    அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் [டிசம்பர் 13] அவரை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

     

    அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ் அவரை நோக்கி ஓடிச் செல்வதும், அதன்பின் தன்னுடைய மகனை அல்லு அர்ஜுன் ஆராதழுவி நெகிழ்ச்சி அடைந்தது, அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.

    இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா 'நான் ஒன்றும் அழவில்லை' என்று ஆறுதல் கூறி கண் கலங்கியுள்ளார்.

     

    மேலும் தமிழ் இயக்குனரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'இதை பார்க்க தான் காத்திருந்தேன்' என அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

     

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.
    • நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.

    இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளானது. அந்த வீடியோவில் ஒரு சிறுவனும் சிறுமியும் குத்துச்சண்டை போட்டியில் விளையாடுகின்றனர். அப்போட்டியில் சிறுவனை தோற்கடித்து சிறுமி வெற்றி பெறுகிறார். அந்த வீடியோவிற்கு #FightLikeAGirl என்று அதாவது பெண்களை போல சண்டையிட வேண்டும் என்று சமந்தா கேப்சன் எழுதியுள்ளார்.

    நாகா சைதன்யா - சோபிதா திருமண நாள் அன்று சமந்தா பகிர்ந்த வீடியோ ரசிகர்களிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • சமந்தா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
    • சிட்டாடெல் ஹனி பனி என்ற இணையத் தொடரில் சமந்தா நடித்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது தந்தை ஜோசப் பிரபு சற்று முன் உயிரிழந்தார். தந்தை உயிரிழப்பு குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "நாம் மீண்டும் சந்திக்கும் வரை அப்பா." என குறிப்பிட்டுள்ளார்.

    நடிகை சமந்தா சென்னையில் ஜோசப் பிரபு - நினெட் பிரபு தம்பதிக்கு பிறந்தவர் ஆவார். இவரது தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு பேசும் ஆங்கிலோ இந்தியன் ஆவார். திரையுலக பயணத்திற்கு தன் தந்தை அதிகளவு ஒத்துழைப்பை கொடுத்ததாக சமந்தா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்.

     


    இந்த நிலையில், சமந்தாவின் தந்தை திடீர் உயிரிழப்பு தகதவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமந்தா தந்தை ஜோசப் பிரபுவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.
    • சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு, இந்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தி நடிகை மலைகா அரோராவுடனான காதலை அர்ஜுன் கபூர் முறித்துள்ள நிலையில், சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.



    சமந்தாவிடமும் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது யாருடனாவது காதலில் இருக்கிறீர்களா? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியபோது, 'விரைவில் நீங்களே பார்ப்பீர்கள்' என்று பதில் அளித்தார்.

    சமந்தா மும்பை செல்லும் போதெல்லாம் அர்ஜுன்கபூர் வீட்டில் தங்குவதாகவும், விருந்துகளுக்கும் இருவரும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவும், அர்ஜுன் கபூரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கிசுகிசுக்கின்றனர். ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ஷோபித்தா துலிப்பா - வை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் அண்ணன் நாக சைதன்யா.
    • ஓவியக்கலைஞரான ஜைனப்பும், அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நாகார்ஜுனா. இவரது முதல் மனைவி லட்சுமி. அவரை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நாக சைதன்யா [38 வயது]. இரண்டாவது மனைவியான அமலாவுக்கு பிறந்தவர் அகில் அக்கினேனி [30 வயது]. இருவருமே தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்துள்ளனர்.

    அண்ணன் நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தாவுடன் திருமணம் ஆகி பின் விவாகரத்து ஆனது. தற்போது நடிகை ஷோபித்தா துலிப்பா - வை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் அண்ணன் நாக சைதன்யா.

     

    இந்நிலையில் நாக சைத்னயா திருமண வேலைகளுக்கு மத்தியில் தம்பி அகில் அக்கினேனிக்கும் நேற்று சிம்பிளாக நிச்சயத்தர்தம் செய்து வைத்துள்ளார் அப்பா நாகார்ஜுனா. அதன்படி அகில் நீண்ட காலமாக காதலித்து வந்த ஜைனப் ரவ்ஜீ என்ற பெண்ணை கரம் பிடிக்கிறார்.

     

    இஸ்லாமியப் பெண்ணான ஜைனப், மும்பை தொழிலதிபரின் மகள் ஆவார். ஓவியக்கலைஞரான ஜைனப்பும், அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயமே நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் தொடர் சில நாட்களுக்கு முன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
    • சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அதோடு படங்களிலும் நடிக்கிறார்.

    சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் தொடர் சில நாட்களுக்கு முன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த படப்பிடிப்பில் சமந்தா மயங்கி விழுந்த சம்பவத்தை பற்றி சக நடிகரான வருண் தவான் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து நடிகர் வருண் தவான் கூறும்போது, "சிட்டாடல் ஹனி பன்னி படப்பிடிப்பில் நானும், சமந்தாவும் தொடர்ந்து இரண்டு மணிநேரம் நடித்துக் கொண்டு இருந்தோம். அப்போது சமந்தா திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

    எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே சமந்தாவுக்காக ஒரு ஆக்சிஜன் டேங்க் வந்தது. அவரது நிலைமையை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. படப்பிடிப்பை ரத்து செய்யும்படி சொன்னேன். உடல்நலம் சரியில்லை என்றால் படப்பிடிப்புக்கு வராமல் ஓய்வு எடுத்து இருக்கலாம். ஆனால் சமந்தா அப்படி செய்யவில்லை. தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    செர்பியாவில் நடந்த படப்பிடிப்பிலும் திடீரென தரையில் மயங்கி விழுந்தார். நான் பதறினேன். கொஞ்ச நேரத்தில் சகஜ நிலைக்கு வந்துவிடுவார் பதற்றம் வேண்டாம் என்று இயக்குனர் சொன்னார். அந்த நிலையிலும் சக்தியை ஒன்று திரட்டி நடித்தார். அவரை பாராட்ட வேண்டும்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரியங்கா சோப்ரா நம்மை பெரியளவில் சிந்திக்கவும் தூண்டுகிறார்.
    • ஆளுமைமிக்கவர்களின் நட்பு சிறிது நேரம் கிடைத்தாலும் நல்லது.

    பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான 'சிட்டாடல்' வெப் தொடர் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தது. இதன் முந்தைய பாகமாக 'சிட்டாடல் ஹனி பன்னி' தற்போது வெளியாகி இருக்கிறது.

    மயோசிடிஸ் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் சமந்தா கலந்து கொண்டு தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசினார்.

    சமந்தா பேசும்போது, "சிட்டாடல் உலகளவில் ரசிகர்களை கவர்ந்த வெப் தொடர். இதில் நானும் முக்கிய பங்கு வகித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பிரியங்கா சோப்ரா பெண்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடல் ஆவார். அவர் நம்மை பெரியளவில் சிந்திக்கவும் தூண்டுகிறார். அவர் போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது.

    திறமைமிக்கவர்களுடன் பழகும்போது, நமது சவாலும் பெரிதாகி கொண்டு போகிறது. எனவே ஆளுமைமிக்கவர்களின் நட்பு சிறிது நேரம் கிடைத்தாலும் நல்லது. வாழ்க்கையில் சவால்கள் எப்போதுமே முக்கியமானது", என்றார்.

    சமந்தா தற்போது 'தும்பத்' என்ற இன்னொரு வெப் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தயவு செய்து மற்றவர்கள் பற்றி மதிப்பிடுவதை நிறுத்துங்கள்.
    • எனது உடல் எடை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்.

    நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் சமந்தாவிடம் உங்கள் உடல் எடையை கொஞ்சம் கூட்டுங்கள் மேடம் என்று கூறினார். இப்படி அவர் சொன்னது சமந்தாவை எரிச்சலூட்டியதால் அந்த ரசிகரை சமந்தா சாடினார்.

    ரசிகருக்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, "மீண்டும் மீண்டும் எனது எடை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். எனது உடல் எடை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்.

    தற்போது நான் அழற்சி எதிர்ப்பு உணவுகளை எடுத்து வருகிறேன். அதனால் எனது உடல் எடை இருக்க வேண்டிய அளவில் இருக்கிறது. எனது ஆரோக்கிய நிலைமைகள் காரணமாக நான் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    தயவு செய்து மற்றவர்கள் பற்றி மதிப்பிடுவதை நிறுத்துங்கள். அடுத்தவர்களை வாழவிடுங்கள்'' என்றார்.

    சமந்தா தற்போது சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா.
    • விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா. இவர் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட என்ற பாடலில் சிறப்பு நடனம் ஆடினார்.

    தற்பொழுது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தக் லைஃப் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா மற்றும் மலையாளத்தில் ஐடன்டிட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து படும் பிஸியாக உள்ளார் திரிஷா.

    இந்நிலையில் மிக பிரபல வெளிநாட்டு நாளிதழான நியூ யார்க் டைம்ஸ் -இல் இடம் பெற்ற புதிர் வினாக்கு விடையாக திரிஷா இடம்பெற்றுள்ளார். அந்த புதிரின் க்ளூ தென்னிந்திய நடிகை என இருந்தது. இதை நடிகை திரிஷா பெருமையுடன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவை நடிகை சமந்தா அவரது பக்கத்தில் குவீன் என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×