search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kajal Agarwal"

    • காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் பதிவிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழில் பழனி, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கோஸ்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்தநாளான நேற்று அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காஃபி கப்பில் அவர் எகிரி குதித்து குளிப்பது போன்று இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி'.
    • இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'குலேபகாவலி, 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     

    கோஸ்டி

    கோஸ்டி


    சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற மார்ச் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'கோஸ்டி' டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.



    • காஜல் அகர்வால்-கவுதம் கிச்சலு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    • இந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் சூட்டினர்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் தனது நீண்ட கால நண்பரான தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து 2020-ல் திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தனர்.

     

    காஜல் அகர்வால்

    காஜல் அகர்வால்

    குழந்தை பிறந்து 6 மாதம் ஆன நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளில் காஜல் அகர்வால் பங்கேற்று நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 108-வது படத்திலும் நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.



    இந்நிலையில் காஜல் அகர்வால் தனது குழந்தை நீலை தூக்கி கொண்டு திருப்பதி கோவிலுக்கு வந்தார். அங்கு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். காஜல் அகர்வாலுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள். திருப்பதி கோவிலுக்கு வந்த காஜல் அகர்வாலை காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் பாதுகாப்பு ஊழியர்கள் காஜல் அகர்வாலை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தனது மகன் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

    தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவர் தனது மகன் குறித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    காஜல் அகர்வால்

    அதில், " இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது.

    ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இப்போது நீ புரண்டு படுக்கிறார், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது.


    காஜல் அகர்வால்

    இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.
    • இவர் கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.


    கவுதம் கிச்சலு - காஜல் அகர்வால்

    தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது.


    கவுதம் கிச்சலு - காஜல் அகர்வால்

    இவர் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் காஜல் அகர்வாலுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கணவருடன் இணைந்து முதல்முறையாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். 

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    காஜல் அகர்வால்

    இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்புக்கு தன்னை தயார் செய்துகொண்டிருக்கும் இவர் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குதிரையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர் அதனுடன் பதிவை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், ``நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து நான் வேலைக்கு திரும்பி உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு முன்பு என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியும். ஜிம்மில் வொர்க்அவுட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு பின்பு முன்பிருந்த அதே எனர்ஜி லெவலை கொண்டு வருவது என்பது கடினமாக உள்ளது.


    காஜல் அகர்வால்

    குதிரை மேல் சவாரி செய்வது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்முடைய உடல் மாறலாம், மாற நேரம் எடுக்கலாம். ஆனால், நம்முடைய எல்லையில்லாத ஆர்வமும், ஆசையும் என்றும் மாறாதது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றும் நாம் கவலைப்படக் கூடாது.

    'இந்தியன்2' படத்தில் மீண்டும் நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. வேலையின் பொருட்டு புதிய திறமைகளை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. என்னை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்' என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.



    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.
    • இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் "பாகுபலி" கட்டப்பா பாணியில் இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    காஜல் அகர்வால்

    பாகுபலிக்கு தான் அடிமை என்பதை குறிக்கும் வகையில் கட்டப்பா, பாகுபலியின் காலை தனது தலையில் வைப்பார். அது போன்று தன் குழந்தையின் காலை காஜல் அகர்வால் தன் தலை மீது வைத்து, " ராஜமவுலி சார்.. இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Indian2
    சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். 

    படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா படத்தில் தனக்கு போதிய முக்கியத்துவம் இருக்காது என்று எண்ணி மறுத்துவிட்டார் என்கிறார்கள். 



    தற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். தென்னிந்திய மொழியின் முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார். இப்போது கமலுடனும் நடிக்க இருக்கிறார்.
    முன்னணி நடிகைகளாக வலம் வரும் காஜல் அகர்வால், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் பிரியாணிக்கு அடிமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kajal #Trisha #AishwaryaRajesh
    தென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.

    தமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.



    காஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார். ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், இந்த முறை அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்தே ஆவேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார். #KajalAggarwal
    மும்பை அழகியான காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தித் திரைப்படமான ‘கியூன் ஹோ கயா நா’வில் 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார்.

    பின்னர் தெலுங்கில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்திலும், தமிழில் ‘பழனி’ என்ற படத்திலும் நடித்தார். ராஜ மவுலி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

    அதிலிருந்து இப்போது வரை அவருக்கான கிரேஸ் குறையாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

    பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது.



    ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.

    ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார். தனி ஒருவன் வெளியாகி 3 ஆண்டுகள் முடிவடைவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ParisParis
    குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 

    தமிழில் "பாரிஸ் பாரிஸ்", தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி", கன்னடத்தில் "பட்டர்ப்ளை", மலையாளத்தில் "ஜாம் ஜாம்" என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பாவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

    தயாரிப்பாளர் மனுகுமரன், "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார். 



    இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் "பட்டர்ப்ளை" படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில், "இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது" என்றார். 

    அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

    அக்டோபர் மாதம் "பாரிஸ் பாரிஸ்", "தட்ஸ் மஹாலக்ஷ்மி", "பட்டர்ப்ளை", "ஜாம் ஜாம்" படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால், அடுத்ததாக சரித்திர, புராண படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #KajalAgarwal
    சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது. ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவந்த பத்மாவத் படம் வசூல் சாதனை படைத்தது. அடுத்து ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கை மணிகர்னிகா என்ற பெயரில் தயாராகிறது.

    இந்தியில் மகாபாரதம் கதையை படமாக்கும் வேலைகள் நடக்கின்றன. இதுபோல் ராமாயணமும் சினிமா படமாகிறது. இதை அனிமேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற பார்கவ் டைரக்டு செய்கிறார். மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்கின்றனர்.

    பார்கவ் கூறும்போது, “ராமாயண கதையை ஏற்கனவே நிறைய பேர் படமாக்கி உள்ளனர். நான் அதில் வரும் ராவணன் சகோதரி சூர்ப்பனகை அத்தியாயத்தை மட்டும் பிரதானமாக வைத்து புதிய படத்தை எடுக்கிறேன். இளவரசியாக வாழ்ந்த சூர்ப்பனகையின் வாழ்க்கை, ராமன் மீதான ஆசை, இதனால் சீதை கடத்தப்பட்ட சம்பவம், ராமன்-ராவண யுத்தம் போன்றவை படத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சூர்ப்பனகை கதாபாத்திரம் அழகாக காட்டப்படும்” என்றார்.

    இந்த படத்தில் சூர்ப்பனகை வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. காஜல் அகர்வாலை சந்தித்து கதை சொல்லி உள்ளனர். அவருக்கும் கதை பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்டோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



    காஜல் அகர்வாலுக்கு இன்னும் அதுபோல் கதைகள் அமையவில்லை. சூர்ப்பனகையாக நடிக்க அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது ‘குயின்’ இந்தி படத்தின் தமிழ் பதிப்பான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.
    ×