என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுபம்"

    • பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.
    • வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன்.

    பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தெலுங்கில் அவர் தயாரித்து வெளியிட்ட 'சுபம்' படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    தற்போது சினிமாவில் இருந்து விலகப்போவதாக சமந்தா கூறியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், "ரசிகர்கள் எனக்கு தந்த ஆதரவை என்றுமே நான் மறக்க மாட்டேன். அதேவேளை பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.

    வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன். எனவே நடிப்பதை நிறுத்தலாமா? என்றும் யோசிக்கிறேன்" என்று சமந்தா குறிப்பிட்டார்.

    சமந்தாவின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்தாலும், 'சமந்தா விளையாட்டுக்காக இதை சொல்லியிருக்கலாம்' என்று மனதை தேற்றி வருகிறார்கள்.

    • நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
    • திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களமாகும்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமந்தா ட்ரலாலா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
    • சுபம் திரைப்படம் வரும் மே 9 வெளியாகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான சிடாடெல்: ஹனி பனி வெப் தொடரில் நடித்து இருந்தார். இத்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சமந்தா ட்ரலாலா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் மே 9 வெளியாகிறது.

    படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தா மேடையில் பாடும் பாட்டை கேட்டு எமோஷனலாகி கண் கலங்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

    அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமாக கமெண்ட்ஸை பதிவிட்டு வந்தனர். சமந்தா மிகவும் பாவம், அவரது மனதில் நிறைய வலி இருக்கிரது போன்ற செய்திகள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

    இதனை தெளிவு படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளார் அதில் " நேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. விசாகப்பட்டின மக்களுக்கு நன்றி. நீங்கள் என்மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. நான் கண்கலங்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. நான் ஏற்கனவே பல இடத்தில் கூறியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன், என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானது. பிரகாசமான லைட்டுகளை பார்த்தால் என் கண்ணில் இருந்து தண்ணீர் வடியும் இதனை பலரும் நான் எமோஷனலாகி அழுகிறேன் என புரிந்துக் கொள்கின்றனர். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன், மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    • டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார் சமந்தா
    • சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

    நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

    சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. தற்பொழுது திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற காட்சிகள் நகைச்சுவையாக டிரெய்லரில் அமைந்துள்ளது.

    டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோ பாடலாக ஜன்ம ஜன்மல பந்தம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் சமந்தா நடனம் ஆடிருப்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது
    • திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

    சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. தற்பொழுது திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஒரு நண்பர் கூட்டம் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களது மனைவி அனைவரும் குறிப்பிட்ட சீரியலை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அவர்களின் கட்டுபாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்துக் கொள்கின்றனர். கணவர்கள இதனால் பயந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த ஊரில் உள்ள பெண்களுமே இப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற காட்சிகள் நகைச்சுவையாக டிரெய்லரில் அமைந்துள்ளது.

    டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ×