search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samantha Ruth Prabhu"

    • கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.
    • இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து சமந்தா நடித்துள்ளார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.. இப்படம் மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்றது. ஏப்ரல் 28 ஆம் தேதி { இன்று} 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கும் பல திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் " மா இண்டி பங்காரம்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுக்குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏப்ரல் 28 சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா.  முதன்முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவரது முன்னாள் கணவனான நாக சைத்தன்யாவுடன் இணைந்து 'யே மாயா சேசாவே' என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சில நாட்களுக்கு முன் அவர் கலந்துக் கொண்ட 'எல்லே சஸ்டெயினபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் அவர் கருப்பு நிற கவுனை அணிந்திருந்தார். அவரது திருமண கவுனை மறு ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறத்தில் மாற்றி அணிந்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    ஏப்ரல் 28 { இன்று} சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலமான சமந்தா, சின்மயி , விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
    • இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

    விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில்  பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை தன்னுடன் இணைத்து கொண்டார்
    • தனது பதிலுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை இணைத்து பதிவிட்டார் சமந்தா

    தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.

    4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya).

    சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.

    ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

    சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

    2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது ஒரு பயனர் அவரிடம், "மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?" என கேட்டார்.

    அதற்கு சமந்தா, "அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.

    சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×