என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிங்குசாமி"

    • யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
    • சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இப்படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், 'அஞ்சான்' படம் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. தற்போது ரீ எடிட் செய்து தயாராகி உள்ள 'அஞ்சான்' படத்தின் ப்ரிவ்யூ ஷோ நடந்தது. இந்த ப்ரிவ்யூ ஷோவில் சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் கலந்து கொண்டார். அவருடன் இயக்குநர் சரணும் ரீ எடிட் செய்த படத்தை பார்த்துள்ளார்.

    இதையடுத்து இயக்குநர் லிங்குசாமியை இருவரும் பாராட்டியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். 



    'பைசன்' படக்குழுவுக்கு இயக்குநர் லிங்குசாமி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

    இப்படம் தீபாவளி முன்னிட்டு கடந்த 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த இயக்குனர் லிங்குசாமி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," பைசன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் உலகத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை.

    துருவ் விக்ரமின் அசாத்திய முயற்சியும், அமீர், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அற்புதமாக எழுதப்பட்டு இருந்தன.

    நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும், இசையும் படத்திற்கு உயிரூட்டி உள்ளன. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

    • ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது. 



    • காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    • வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    அந்த வரிசையில், மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'ரன்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

    கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் 'ரன்'. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு 'ரன்' திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் விரைவில் வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    • பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'.
    • இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

     

    துடிக்கும் கரங்கள்

    துடிக்கும் கரங்கள்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, "சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும் போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

    நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

    லிங்குசாமி

    லிங்குசாமி

     

    தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது. வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு தான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்" என்றார்.

    • இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.
    • இப்படத்தின் சரிவை சந்திப்பதற்காக தற்போது கமல் நடித்து உதவுள்ளதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

     

    உத்தமவில்லன்

    உத்தமவில்லன்

    இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் 'பாபநாசம்' படத்தை தயாரிக்கத்தான் முடிவு எடுத்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் 'உத்தமவில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

     

    கமல்

    கமல்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகன் விஜயா இயக்கியுள்ள 'பிகினிங்' படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பிகினிங்' படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இனிமேல் திரைப்பட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன். இரண்டு மூன்று மாதங்களில் அந்த படத்தை இயக்குவேன்'' என்றார்.




    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்ற திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

     

    லிங்குசாமி

    லிங்குசாமி

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் துணிவு படத்தை ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கிய லிங்குசாமி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணிவு திரைப்படம் அஜித் சாரின் மங்காத்தா மற்றும் வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாகும். அது இறுக்கமாகவும் திடமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் போனிகபூர் சார் மற்றும் படக்குழுவினருக்கு. இந்த பொங்கலுக்கு மாபெரும் வெற்றியடைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’.
    • இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.


    பையா

    'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பையா' படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதில் கார்த்தி பதில் ஆர்யாவும் தமன்னாவிற்கு பதிலாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது.


    ஜான்வி கபூர் - ஆர்யா

    எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகிவில்லை. இருப்பினும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது.

    லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருவதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

     

    ஜான்வி கபூர் - ஆர்யா

    ஜான்வி கபூர் - ஆர்யா


    ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பையா’.
    • இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.


    பையா

    'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதில் கார்த்திக்கு பதில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'பையா 2' படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.


    பையா

    அதன்படி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி 'பையா2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

    இயக்குனர் லிங்குசாமி கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


    கார்த்தி - சமந்தா - லிங்குசாமி

    கார்த்தி - சமந்தா - லிங்குசாமி

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.


    லிங்குசாமி

    லிங்குசாமி

    இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி உட்பட அவரது சகோதரர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் மேல் முறையீடு செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டது. அதன்பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை லிங்குசாமி செலுத்தினார்.


    லிங்குசாமி

    லிங்குசாமி

    தற்போது இம்மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், வட்டியுடன் சேர்த்து கடனை திருப்பி செலுத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் கடந்த ஆகஸ்டு மாதம், சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.


     


    லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

    லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

    இந்நிலையில் இதுகுறித்த தன்னிலை விளக்கத்தை அறிக்கையின் வாயிலாக இயக்குனர் லிங்குசாமி தரப்பு வெளியிட்டுள்ளது. அதில், இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று இயக்குனர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    • செக் மோசடி வழக்கில் தண்டனையை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி செய்த மேல்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
    • லிங்குசாமிக்கு நிபந்தனையுடன் விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை காசோலையாக அவர்கள் திருப்பி வழங்கினர்.



    அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. அதையடுத்து லிங்குசாமி, அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம், கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.


    லிங்குசாமி

    லிங்குசாமி

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது காசோலை தொகையில் ஏற்கனவே 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளதாகவும், மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராகவுள்ளதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 20 சதவீதத்தை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் லிங்குசாமிக்கு விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×