என் மலர்
நீங்கள் தேடியது "Arya"
- சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
- இப்படத்தில் ஆர்யா ஒரு ஸ்பை அதிகாரியாக நடித்துள்ளார்.
- இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்
F.I.R படத்தை தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அதுல்யா ரவி, ரைஸா வில்சன், அனாகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தியாவிற்காக வேலை செய்த ஸ்பை அதிகாரி அமைப்பை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆர்யா ஒரு ஸ்பை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரின் பிறந்தநாளை முன்னிட்டு, Mr.X படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
- சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- இதனையடுத்து குட் நைட் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யாவை படக்குழு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹூரோவாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆர்யாவை, வில்லனாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் எவ்வித என்பதில் சந்தேகம் இல்லை.
- சீஷெல் ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
- தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் வருமான வரி சோதனை நடக்கும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான இந்த ஓட்டல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி மூசா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
கேரளா தலசேரியை சேர்ந்த குன்ஹி மூசா என்பவருக்கு சொந்தமான சீஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
சென்னை தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
- வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.
அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யா ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்
- இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆர்யா ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டைட்டில் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் விஷால் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.
- சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார்.
- மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும்மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
இந்த படங்களை தொடர்ந்து ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
- DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
- DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
- DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் சந்தானம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். அவரை எனக்கு கல்லூரியின் கதை திரைப்படத்தில் இருந்து தெரியும். முதல் படத்தில் நடிக்கும் போதே என்னை அவர் காமெடி சூப்பர் ஸ்டார் என அழைப்பார். அதே மாதிரி சேட்டை திரைப்படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பை டைட்டில் கார்டில் என்னை கேட்காமலே போட்டு விட்டார்.
நான் லிங்கா திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினி சார் என்னை பார்த்து நீதான் காமெடி சூப்பர்ஸ்டாரா? என்று கேட்டார். சார் அது ஆர்யா என்ன கேட்காமலே போட்டுட்டான் என கூறினேன். அதற்கு அவர் நீ சொல்லமயா போட்டிருப்பான்"என் கூறினார். என்னை மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலையில மாட்டி விட்டுட்டான் ஆர்யா. என நகைச்சுவையா பேசினார்.
- கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் படத்தில் செல்வராகவன் ஹிச்காக் இருதயராஜ் கதாப்பாத்திரத்தில்ந் நடித்துள்ளார். அவரது இண்ட்ரோ பாடலான சினிமாக்காரன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ஒரு கானா பாடலாக உருவாகியுள்ளது. இப்பாடலை தமிழ் ஆதவன் வரிகளில் விக்கி பாடியுள்ளார்.
- ப்ரேம் ஆனந்த் DD Next Level படத்தை இயக்கியுள்ளார்
- இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்படமேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கினார்
- வேட்டுவம் படத்தில் கெத்து தினேஷ், ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
இவர் கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வேட்டுவம் படக்குழுவினரை சந்தித்தது விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.






