என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தானம்"

    • இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என ரஜினி தெரிவித்தார்.
    • ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகின்றனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.

    'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.



    அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

    'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் 'ஜெயிலர்2' படப்பிடிப்பிற்காக சந்தானம் அடுத்த மாதம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில்  வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் சந்தானம் ஒரு திரைப்படம் விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு அமானுஷ்ய சக்தி மூலம் ஒரு திரைப்படத்திற்குள் குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். அங்கு இருந்து எப்படி வெளி வருகிறார் என்பதே படத்தின் கதையாகும்.இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்.
    • படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
    • தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

    ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

    இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக தங்களை தக்க வைத்துள்ளனர்.

    காமெடியில் மட்டும் நாங்கள் கில்லாடிகள் இல்லை, கதாநாயகராகவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மூன்று பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இன்று ரிலீஸ் ஆன மூன்று படங்களில் மக்கள் மனதை கவர்ந்த கதாநாயகன் யார் என்று பார்ப்போம...

    சூரி நடித்து வெளியான மாமன் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் உணர்வுப்பூவமான கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடுத்ததாக, சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் த்ரில்லர் காமெடி திரைப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்.

    தொடர்ந்து, யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

    • கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாகிறது.
    • ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரன், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.

    ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் நகைச்சுவை நடிகர்களாக களம் இறங்கி வெற்றிப் பெற்றவர்கள். தற்பொழுது இவர்கள் மூவரும் கதாநாயகர்களாக உருமாறி நடித்துள்ளனர். அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. திரைத்துறையில் நகைச்சுவையில் கலக்கிய இவர்கள் கதாநாயகர்களாகவும் வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.
    • ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.

    இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்தது.

    இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கியுள்ளது.

    • DD Next Level திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
    • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

    படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சந்தானம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " பொல்லாதவன் திரைப்படத்தில் முதலில் என்னை வேண்டாம் என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.பின் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியில்தான் என்னை படத்தில் சேர்த்தார். எனக்கு அந்த திரைப்படத்தில் கதாப்பாத்திரமே கிடையாது. நன் வெறும் கருணாஸ் நண்பராக அவர் உடன் ஒன்லைன் பஞ்ச் வசனங்களை பேசினேன் அது அதற்கு பிறகு ஹிட்டானது. அதேப்போல் இயக்குநர் ராஜமவுலி நான் ஈ படத்தில் வசனமே இல்லாமல் ஒரு கதாப்பாத்திரத்தை கொடுத்தார். ஆனால் நான் டப்பிங்கில் சில வசனங்களை பேசினேன். அதை பார்த்து வியந்து என்னை பாராட்டினார்" என கூறியுள்ளார்.

    • படத்தில் வரும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    • திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்துள்ளனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.



    இந்த நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் நடிகர் சந்தானம், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

    • நட்பு ரீதியாக என்னால் இதெல்லாம் பண்ண முடியும், முடியாது என்று இருக்கிறது.
    • அது அவருக்கு ஒகே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என சந்தானம் கூறியுள்ளார்.

    சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகியுள்ளது. நடிகர் ஆர்யா தயாரித்துள்ள இப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    2026 தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா என சந்தானத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது குறித்து சந்தானம் கூறியதாவது:-

    நான் எப்போதும் ஒன்றுதான் சொல்வேன். நீங்கள் உழைத்தால் உங்களுக்கு சாப்பாடு, நான் உழைத்தால் தான் எனக்கு சாப்பாடு. இந்த படத்தில் சிம்பு என்னை நடிக்க அழைத்தாலும் அவர் மறுபடியும் பழைய மாதிரிதான் நான் நடிக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தவில்லை. படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதை அவர் பார்த்துக் கொண்டார்.

    அதேபோல் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் நட்பு ரீதியாக என்னால் இதெல்லாம் பண்ண முடியும், முடியாது என்று இருக்கிறது.

    உதயநிதி சார் அழைத்தால் என்னால் இதெல்லாம் முடியும், முடியாது என்று சொல்வேன். அது அவருக்கு ஒகே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என சந்தானம் கூறியுள்ளார். 

    • DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
    • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.

    DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது அந்த வகையில் நடிகை கஸ்தூரி , தேவகி & ஷில்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    லொள்ளு சபா மாறன் ஆல் லாங்குவேஜ் ஆறுமுகம் மற்றும் ரெடின் கிங்ஸ்லி-கோபால் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    • DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.

    DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

    • DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.
    • DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.

    DD Next Level படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் சந்தானம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். அவரை எனக்கு கல்லூரியின் கதை திரைப்படத்தில் இருந்து தெரியும். முதல் படத்தில் நடிக்கும் போதே என்னை அவர் காமெடி சூப்பர் ஸ்டார் என அழைப்பார். அதே மாதிரி சேட்டை திரைப்படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பை டைட்டில் கார்டில் என்னை கேட்காமலே போட்டு விட்டார்.

    நான் லிங்கா திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினி சார் என்னை பார்த்து நீதான் காமெடி சூப்பர்ஸ்டாரா? என்று கேட்டார். சார் அது ஆர்யா என்ன கேட்காமலே போட்டுட்டான் என கூறினேன். அதற்கு அவர் நீ சொல்லமயா போட்டிருப்பான்"என் கூறினார். என்னை மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலையில  மாட்டி விட்டுட்டான் ஆர்யா. என நகைச்சுவையா பேசினார்.

    ×