என் மலர்
நீங்கள் தேடியது "சந்தானம்"
திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சந்தானம் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இயக்குநர் சுதமான் கிருஷ்ணா எழுதி, இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
K7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே செல்லையா மற்றும் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் டைம் லூப் சார்ந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பூஜை படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சந்தானம் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. K7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே செல்லையா மற்றும் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படம் டைம் லூப் சார்ந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சுதமான் கிருஷ்ணா எழுதி, இயக்கும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு பணிகளை ரிச்சர்ட் எம் நாதன் மேற்கொள்ள பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை ஜேக்சன் மேற்கொள்ள திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி அளிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சந்தானம் சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சந்தனத்தை ரசிகர்கள் செல்லமாக சாண்டா என்று கூப்பிடும் நிலையில், சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டா என்று ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள்.
- செல்லும் பாதையில் உறுதியாக இருந்தாலே போதும், சினிமாவில் சாதிக்கலாம்.
படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கூல் சுரேஷ், தற்போது 'உள்ளே செல்லாதீர்கள்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ரெட் புளூ ஸ்டூடியோஸ் சார்பில் ஜி.முத்துமனோகரன் தயாரித்து, சி.இளையராஜா இயக்கியுள்ளார்.
படத்தின் 'பர்ஸ்ட் லுக்'கை கூல் சுரேசின் நண்பரும், முன்னணி நடிகருமான சந்தானம் சென்னையில் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார். விழாவில் அவர் பேசும்போது, ''படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள். பேய்க்கதை என்பதால் நிச்சயம் நம்பி பார்க்கலாம்.
நானும், கூல் சுரேசும் டி.ராஜேந்தரின் 'காதல் அழிவதில்லை' படத்தில் துணை நடிகர்களாக நுழைந்தோம். நிறைய பேர் சினிமாவில் வந்து போராடிவிட்டு முடியவில்லை என்று மனரீதியாக சோர்வு அடைந்து சென்றிருப்பதை பார்த்துள்ளோம். ஆனால் கூல் சுரேஷ் கேலி, கிண்டலுக்கு கவலைப்படாமல் இந்த நிலைக்கு வந்துள்ளார்.
வாழ்க்கையில் விழும் அடிகளுக்கு கவலைப்பட்டாலோ, சோர்ந்து போனாலோ நாம் பிழைக்க முடியாது. அடிகளை தாங்கி, தாண்டி எழுந்து ஓடும்போது தான் உண்மையான வெற்றி கிடைக்கும். செல்லும் பாதையில் உறுதியாக இருந்தாலே போதும், சினிமாவில் சாதிக்கலாம். சினிமா பயணம் சாதாரணம் அல்ல'', என்றார்.
- அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
சின்னத்திரையில் ஜொலித்த சந்தானம், சிம்புவின் 'மன்மதன்' படம் மூலமாக வெள்ளித்திரையில் எட்டிப் பார்த்தார். அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கிய அவர், தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.
இதற்கிடையில் வெள்ளித்திரையில் தனக்கு அறிமுகம் தந்த சிம்பு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் நடிக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்-2' படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய... படம் தானே... சொல்லிட்டு தான் செய்வேன்'' என சந்தானம் தெரிவித்தார்.
- இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என ரஜினி தெரிவித்தார்.
- ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.
'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் 'ஜெயிலர்2' படப்பிடிப்பிற்காக சந்தானம் அடுத்த மாதம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் சந்தானம் ஒரு திரைப்படம் விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு அமானுஷ்ய சக்தி மூலம் ஒரு திரைப்படத்திற்குள் குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். அங்கு இருந்து எப்படி வெளி வருகிறார் என்பதே படத்தின் கதையாகும்.இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்.
- படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
- ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
- தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக தங்களை தக்க வைத்துள்ளனர்.
காமெடியில் மட்டும் நாங்கள் கில்லாடிகள் இல்லை, கதாநாயகராகவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மூன்று பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று ரிலீஸ் ஆன மூன்று படங்களில் மக்கள் மனதை கவர்ந்த கதாநாயகன் யார் என்று பார்ப்போம...
சூரி நடித்து வெளியான மாமன் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் உணர்வுப்பூவமான கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக, சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் த்ரில்லர் காமெடி திரைப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்.
தொடர்ந்து, யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.
- கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாகிறது.
- ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரன், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.
ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.
இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் நகைச்சுவை நடிகர்களாக களம் இறங்கி வெற்றிப் பெற்றவர்கள். தற்பொழுது இவர்கள் மூவரும் கதாநாயகர்களாக உருமாறி நடித்துள்ளனர். அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. திரைத்துறையில் நகைச்சுவையில் கலக்கிய இவர்கள் கதாநாயகர்களாகவும் வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.
- ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கியுள்ளது.
- DD Next Level திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
- முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சந்தானம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " பொல்லாதவன் திரைப்படத்தில் முதலில் என்னை வேண்டாம் என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.பின் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியில்தான் என்னை படத்தில் சேர்த்தார். எனக்கு அந்த திரைப்படத்தில் கதாப்பாத்திரமே கிடையாது. நன் வெறும் கருணாஸ் நண்பராக அவர் உடன் ஒன்லைன் பஞ்ச் வசனங்களை பேசினேன் அது அதற்கு பிறகு ஹிட்டானது. அதேப்போல் இயக்குநர் ராஜமவுலி நான் ஈ படத்தில் வசனமே இல்லாமல் ஒரு கதாப்பாத்திரத்தை கொடுத்தார். ஆனால் நான் டப்பிங்கில் சில வசனங்களை பேசினேன். அதை பார்த்து வியந்து என்னை பாராட்டினார்" என கூறியுள்ளார்.






