என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soori"

    • மண்டாடி படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார்.
    • சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

    மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் `மண்டாடி' இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். படத்தின் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    இப்படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படத்தின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது.

    • மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
    • தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி பகிர்ந்திருந்தார்

    நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவில் ஒருவர், "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று கிண்டல் அடித்திருந்தார்.

    அவருக்கு பதில் அளித்த சூரி, " திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.

    நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். சூரியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர்
    • விபத்தில் படகில் இருந்த இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர்.

    மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் `மண்டாடி' இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

    மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.

    இப்படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

    படத்தின் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி கடற்கரைப் பகுதியில் 'மண்டாடி' படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் நேற்று, படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கேமராக்கள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களுடன் ஒரு படகில் கடலுக்குள் சென்றனர்.

    இருப்பினும், அவர்கள் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தபோது, படகு எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படகில் இருந்த இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்த படக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் உடனடியாக அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

    இருப்பினும், இந்த சம்பவத்தில், சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான உபகரணங்கள் கடலில் மூழ்கியது.    

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
    • கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.

    மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.
    • அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று எனக்கும், என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன், லட்சுமணனாக நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறியிருக்கிறது. எனது உணவகம் வளர்ச்சிக்கு சூரி என்று சொல்வார்கள். ஆனால் எனது தம்பிகள், அண்ணன்கள் தான் முழு காரணம், அதுவே எனக்கு பெருமை.

    மாமன் படப்பிடிப்புக்கு பிறகு அடுத்த படம் மண்டாடி படம் பிடிப்பு நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதேபோல் கடலில் போட் ரேசிங் கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.

    திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள். திரையில் காமெடிகள் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க, நல்லா வந்திருக்கேன். அதே போல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்.

    மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர், தமிழக முதலமைச்சர் குறித்த விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் கூற விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும்.

    இன்றைக்கு விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றிருக்கிறார். அடுத்து திரும்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம் என்றார்.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
    • திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார். திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் சூரியின் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் சூரி மற்றும் ஐஷ்வர்யா லட்சுமி கலந்து கொண்டனர். மக்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டும், நடன கலைஞர்களுடன் ஜாலியாக வைப் செய்தனர். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



     


    • சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு சேர்ந்து கும்மி அடித்து உற்சாக நடனம் ஆடியுள்ளார்.

    ஊர்த்திருவிழாவில் பெண்களுடன் சேர்ந்து சூரி கும்மி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
    • இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை ஒருமனதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    • சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இன்று வெளியான திரைப்படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் 3 BHK மற்றும் பறந்து போ ஆகும்.

    3 BHK

    சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

    பறந்து போ

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களையும் பாராட்டி நடிகர் சூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! ❤️??

    பறந்து போ : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.

    3BHK : ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும்.

    இந்த இரு படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்களால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இயக்குநர் ராம் சார் அவர்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டும், கலைநயமிக்க, தனித்துவமான பார்வை தனது படத்திற்கு உயிரூட்டி, இதயங்களை ஆழமாகத் தொடும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

    அதேபோல், இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான, நேர்த்தியான படைப்பாற்றல் தனது படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும், நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! " என பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
    • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு விரைவில் வெளியிடப்போவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

    • சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார்

    சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    '3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் உருக்கமாக எமோஷனலாக இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பம் 2 தலைமுறைகளாக ஒரு சொந்த வீடு வாங்க முயற்சி செய்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் படக்குழுவை வாழ்த்தி நடிகர் சூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "ஒரு வீடு… ஒரு கனவு…

    தனக்கு ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இனிய இடம்!

    தம்பி அருண் விஷ்வா அவர்களுக்கும், அவருடைய அருமையான குழுவுக்கும், இந்த "3BHK" உணர்ச்சி நிறைந்த பயணத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும்! ❤️

    ஜூலை 4 அன்று, நம் இதயங்களை ஆழமாக தொடப்போகும் இந்த நல்ல கதை,வெற்றியின் வானில் பிரகாசமாக ஒளிரட்டும்!

    உங்கள் கனவு நிஜமாகி, உயர்ந்த வெற்றியை தொடட்டும்! " என பதிவிட்டுள்ளார்.

    • இவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது.
    • சூரி தற்போது மண்டாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் சூரி தமிழ் திரையுலகில் கதாநாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சூரி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்க இருக்கிறார்.

     

    லிஜோ ஜோஸ் இதற்கு முன் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற மாஸ்டர்பீஸ் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்க போகும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாக இருக்கும்,இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ×