என் மலர்
நீங்கள் தேடியது "women"
- முற்போக்கு கழக மாநாட்டில் தீர்மானம்
- பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் புதுவை மாநில 9-வது மாநாடு புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு மல்லிகா, மீனாட்சி, அற்புத மேரி தலைமை வகித்தனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுவை மாநில செயலாளர் விஜயா வரவேற்றார். மாநாடை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்டு - லெனினிஸ்ட் மாநில செயலர் புருஷோத்தமன் தொடங்கி வைத்தார். தேசிய தலைவர் டாக்டர் ரத்திராவ் சிறப்புரையாற்றினார். மத்திய கமிட்டி உறுப்பினர் முருகன், மாவட்ட செயலர் முருகன் ஆகியோர் பேசினர். வேலை அறிக்கையை மாநில செயலாளர் விஜயா சமர்பித்தார்.
மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மகளிர் ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 56.50 லட்சம் பெண்களின் மனுக்களை நிராகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மதுரை
மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி கூறியதாவது:-
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி னார்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அவல நிலையை உருவாக்கியுள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 63 லட்சம் மக்களிடத்தில் மனுக்களை பெற்று இதில், ஒரு கோடியை 6 லட்சம் பேருக்கு தான் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். 56.50 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தனர் இதனால் விண்ணப்பித்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோடியே 98 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை வழங்கினார். அதேபோல் அனைத்து குடும்பங்க ளுக்கும் மிக்சி கிரைண்டர் வழங்கினார். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்க ணினி வழங்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதி.மு.க. அரசு இருந்தது .ஆனால் கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்றாமல் முரண்பட்ட அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது.
கல்வி கடனை ரத்து செய்வோம், ஐந்து பவுன் நகைஅடகு வைத்தால் ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து கூறினார்கள் ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை.
அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று பதவி பிரமாணம் ஏற்றுஇன்றைக்கு இறையாண்மைக்கு எதிராக உதயநிதி பேசுவதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்து விட்டார் .இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, இதற்கு தீர்வு காணாமல் அதை திசை திருப்ப சனாதனம் பற்றி உதயநிதி பேசுகிறார்.இதற்கு ஆதரவாக ஸ்டாலின் திராவிட தலைவர்களை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகளிர் நல இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
தேவகோட்டை
தேவகோட்டை ரோட்டரி சங்கம், மதுரை குரு மருத்துவமனை இணைந்து மகளிர் நல இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. முகாமினை முன்னாள் துணை ஆளுநர் கணேசன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஊடிவயல் கதிரேசன் வரவேற்றார். குரு மருத்துவ மனை குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கல்பனா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
குழந்தை இல்லாதவர்கள், நீர்க்கட்டி, கர்ப்பப்பவை கட்டி, சினைப்பையில் கட்டி உள்ளவர்கள் கருமுட்டை குறைபாடு விந்தணு குறைபாடு கர்ப்பப்பை புற்றுநோய் அதிக ரத்தப்போக்கு மார்பக புற்று நோய் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் ராமநாதன், கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்தனர்.
அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தனர்.
விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில மதுக்கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொண்டனர் .
இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 100 கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெண்கள் வசம் வந்துள்ளது. சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஐதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். நல்ல எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர்.
ஒரு சில கடைகள் பெண்கள் பெயரில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என கலால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடிவரும் நிலையில் 100 கடைகள் பெண்கள் வசமாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
- வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.
இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 4 வகையான பாடிஷேப்ஸ் உள்ளன.
- இந்திய பெண்கள் அதிகம்பேர் பியர் பாடிஷேப்பில் தான் இருப்பார்கள்.
முதலில் நம்முடைய உடற்கூறு எப்படி உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வாங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அதில் என்னென்ன உடல்கூறு நிலைகள் உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம். இதில் 4 வகையான பாடிஷேப்ஸ் உள்ளன.
அதில் நமது இந்திய பெண்கள் இந்த 4 பாடிஷேப்களில் தான் இருப்பார்கள். அவை ஆப்பிள் பாடிஷேப், பியர் பாடிஷேப், ஆர்கிளாஸ் பாடிஷேப், ரெக்ட்டாங்கிள் பாடிஷேப் ஆகியவை உள்ளன.
ஆப்பிள் பாடிஷேப்
ஆப்பிள் பாடிஷேப்பில் இருப்பவர்களுக்கு அப்பர் பாடி கொஞ்சம் அதிகமாக இருக்கும். கால்கள் ஒல்லியாக இருக்கும். இவர்களுக்கு தோள்பட்டைகள் பெரியதாகவும் விரிந்தும் காணப்படும். எனவே இந்த மாதிரி இருப்பவர்கள் வி ஷேப் கழுத்துப்பட்டைகள் வடிவம் கொண்ட ஆடை வகைகளை தேர்வு செய்ய வேண்டும். இவர்கள் ஷாட் டாப்ஸ், மிட்லென்த் டாப் எல்லாம் ஒரு சூப்பரான சாய்ஸ். இவர்களுக்கு லோவர் பாடியை கவர் செய்கிற மாதிரி டிரஸ்செய்தால் நன்றாக இருக்கும்.
பியர் பாடிஷேப்
அடுத்து பியர் பாடிஷேப். நம் இந்திய பெண்கள் அதிகள அளவில் இந்த பாடிஷேப்பில் தான் இருப்பார்கள். அப்படி பாடி சின்னதாகவும், அதாவது இடுப்பு பகுதிக்கு கீழ் உள்ள பகுதி பெரியதாக காணப்படும். இவர்கள் பாடிஷேப்பிற்கு ஏ-லைன் டிரஸ்சஸ் இன்னும் சூப்பராக இருக்கும். ஏ-லைன் டிரஸ்சில் அப்பர் பாடி பிட்டாகவும், லோயர் பாடி பிளேர் விதத்திலும் இருக்கும். பியர் பாடிஷேப்பில் இருப்பவர்களுக்கு லேயர்டு டிரஸ்சஸ்சும் அழகாக இருக்கும். ஓவர்கோட் இருக்குற மாதிரியான டிரஸ் கூட அழகாக இருக்கும். இவர்கள் அப்பர் பாடியை கவர் செய்கிற மாதிரியான அடர்த்தியான ஜுவல்லரிகளை பயன்படுத்தலாம். அது இன்னும் உங்கள் அப்படி பாடியை மெருகேற்றும் வகையில் இருக்கும்.
ரெக்ட்டாங்கில் பாடி ஷேப்
ரெக்ட்டாங்கில் பாடி ஷேப் இருக்கிறவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும். இவர்களது உடலில் வளைவுகள் இருக்காது. தோள்பட்டையும், இடுப்பு பகுதியும் ஒரே அளவில் இருக்கிற மாதிரியாக இருக்கும். பஃப் ஸ்லீவ்ஸ், இவர்களுக்கு டஃப்ள்டு டாப் மற்றும் ஸ்கெட் (பாவாடை) வகை ஆடைகள் பொருத்தமாக இருக்கும். இவர்களுக்கு அனார்கலி, மேக்ஸி டிரஸ்கள் கூட மிகவும் பொருத்தமாக இருக்கும். எம்ப்பயர் லைன் இருக்கும் ஆடை வகைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
ஆர்கிளாஸ் பாடிஷேப்
அடுத்து ஐடியல் பாடிஷேப் அதாவது ஆர்கிளாஸ் பாடி ஷேப். இவர்களுக்கு இயற்கையாகவே இடை மெலிந்ததாக இருக்கும். எனவே எல்லாவகை ஆடைகளும் பொருத்தமாக இருக்கும். இவர்களுடைய இடை அழகை மெருகேற்றும் அளவுக்கு பெல்ட் வைத்தமாதிரி ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். பெல்ட் வைத்த ஆடைகளை தேர்வு செய்து அணிந்தால் இன்னும் அழகாக தெரிவார்கள்.
- பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
- திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.
மதுரை
பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.
இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- ஃபேஷியல் ஐஸ் கியூபை முகம், கை, கழுத்து பகுதியில் மசாஜ் கொடுத்து 10 நிமிடம் கழித்து கழுவவும்.
ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னாலே பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். காரணம் அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தான். அதிலும் இந்த மாதம் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாதமாக இருப்பதால், இதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ஃபேசியலோ, பிளீச்சிங்கோ செய்து கொண்டு இருப்பார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே நாம் அருமையான ஒரு ஃபேஸ் பேக்கை தயார் செய்து போட்டோம் என்றால் முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் மட்டும் செலவு செய்து ஒரு குளோயிங் ஃபேஷியல் பண்ற மாதிரி ஒரு ஆர்கானிக்கான ஃபேஷியல் எப்படி செய்யலாம் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்- 2 ஸ்பூன்
பீட்ருட் பொடி- 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
ஆரஞ்சு தோல் பொடி- 2 ஸ்பூன்
கடலைமாவு- 2 ஸ்பூன்
சந்தனப்பொடி- ஒரு ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் கற்றாலையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் பிரித்து எடுத்து சேர்த்துக்கொள்ளவும், பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளான பீட்ருட் பொடி, ஆரஞ்சுதோல் பொடி, கஸ்தூரிமஞ்சள், சந்தனப்பொடி, கடலைமாவு ஆகியவற்றை சேர்க்கவும். இறுதியாக இதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு சிலிகான் ஐஸ் டிரேயில் ஊற்றி வைத்து அதனை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து வைத்துக்கொள்ளவும். குளிக்கப்போகும் போதும் இந்த ஃபேஷியல் ஐஸ் கியூபை எடுத்து முகத்திற்கும், கைகளுக்கும் ஒரு மசாஜ் கொடுத்து 10 நிமிடம் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து முகத்திலும், கழுத்து பகுதியிலும் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். 10 நிமிடத்தில் ஒரு நல்ல தீர்வை பெறலாம்.
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.
இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
தர்ணா போராட்டம்
எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.