என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவிடாய் சுழற்சி"

    • ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது.
    • கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது.

    ஒவ்வொருவரிடையேயும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். குறிப்பிட்ட தேதியைவிட சிலருக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். சிலருக்கு நாட்கள் தள்ளிச்சென்று மாதவிடாய் வரும். சிலருக்கு ஆறு மாதம் என நீண்ட நாட்கள் மாதவிடாய் வராமலும் இருக்கும். பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது. எனவே மாதவிடாய் நாள் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீங்கள் மாதவிடாய்க்கு உள்ளானால் உங்கள் உடலில் எதாவது பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான சில சாத்திய காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    ப்ரீமெனோபாஸ்

    இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய காலமாகும். பொதுவாக நாற்பது வயது அல்லது அதற்கு பிறகு இது தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் அளவுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் அண்ட விடுப்பு அதாவது மாதவிடாய் சரியாக நிகழாது. சிலருக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  மாதவிடாய் சுழற்சிகள் கணிக்க முடியாததாக இருக்கும். 

    தீவிர உடற்பயிற்சி

    தீவிர உடற்பயிற்சி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தலாம். பெரும்பாலும், பெண் விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. ஏனெனில் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது நாம் உண்ணும் உணவைவிட அதிகளவு ஆற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலின் கலோரி எரிப்பு அளவு அதிகரித்து, அது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் போதுமான ஆற்றல் இல்லாமல், உங்கள் உடல் அண்டவிடுப்பிற்கு தேவையான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. 

    எடை ஏற்ற, இறக்கங்கள்

    குறைந்த காலத்தில் அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இவை இரண்டில் எது நடந்தாலும் அது உங்கள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாதவிடாயில் பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சி எடை மாற்றங்களுடனும் தொடர்புடையது. 

    மாதவிடாய் சுழற்சியில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது

    மன அழுத்தம்

    மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்று மாதவிடாய் பாதிப்பு. கடுமையான மன அழுத்தம் உங்கள் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இவை உங்கள் வாழ்வில் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவம் அல்லது வேறு சமபவங்களால் கூட நிகழலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மட்டுமே மீண்டும் ஹார்மோனை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. இது குழந்தை பிறக்கும் வயதின் அடிப்படையில் 10 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது. கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும். மேலும் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

    இது பொதுவாக மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் காரணிகளாகும். சத்தான உணவுமுறை அல்லது உடலில் ரத்தம் இல்லையென்றாலும் மாதவிடாய் வருவது தள்ளிப்போகும். இதனால் மாதவிடாய் குறைவாக இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

    • பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம்.
    • பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும்.

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையே 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தமாகும். வயது முதிர்ச்சியின் காரணமாக பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். கருப்பையில் இருந்து வெளிவரும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதோ அல்லது நிறுத்தப்படுவதோ இதற்கு காரணமாகும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 45 முதல் 55 வரையாகும். ஒருசில பெண்கள் 40 வயதிற்குள்ளேயே மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விடுகிறார்கள். இதனை "மூன்கூட்டிய கருப்பை செயலிழப்பு என்கிறோம்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்: பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஒரு கருமுட்டை வெளியேற்றப்படும்.

    பிறக்கும் போதே குறைவான அளவு கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்.

    இதுமட்டுமில்லாமல் குரோமோசோம் குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கும். இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர், கருப்பையை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்வோர் மற்றும் முன் அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படக்கூடும். சிலருக்கு இது மரபு வழியாகவும் ஏற்படலாம்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள்:

    6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையற்ற மாதவிடாய் ஏற்படும், தாமதமாக மாதவிடாய் வருவது, குறைந்த அல்லது அதிகப்படியான நாட்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்றவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கியமான அறிகுறிகளாகும்.

    இதுதவிர முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் அதிக வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, தோல் கருமை அடைதல் அல்லது வறண்டு காணப்படுதல், தலைவலி, உணர்வு ரீதியான மாற்றங்கள், அதிக அளவு முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவைகளும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான தீர்வுகள்:

    45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடலில் வெப்பம் குறைந்து ஹார்மோன் சுரப்பு சீராகும்.

    • ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.
    • மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

    ஓவரியில் இருந்து கரு முட்டையை வெளியிடும் போது அண்டவிடுப்பு நிகழ்கிறது, உங்கள் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பு நிகழ்கிறது.

    அதாவது 28 நாள் சுழற்சியின் 11 நாள் முதல் 14-வது நாளில் அண்டவிடுப்பின் நடக்கிறது, இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருப்பை நீர்கட்டிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.

    நீங்கள் சரியான 28-நாள் சுழற்சியைக் கொண்டிருந்தால், 14 -ம் நாளில் அண்டவிடுப்பு நிகழும்.

    எனவே, நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினால், உங்கள் மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த நேரம்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அண்டவிடுப்பு வித்தியாசமாக இருக்கும், மேலும் இது பல காரணங்களால் கருவுறுதலை பாதிக்கலாம்.

    ஒருமுறை கருமுட்டை வெளியேற்றினால், விந்தணுவுடன் இணைந்து கருவுற கரு முட்டை 24 மணி நேரம் வரை மட்டுமே உயிர்வாழும்.

    எனவே ஒரு மாதத்தில் அண்டவிடுப்பு நடக்கும் நாள் தான் கருவுற சிறந்த நாட்கள், மற்ற நாட்கள் கர்ப்பம் தரிக்க சிறந்த நாட்கள் இல்லை.

    மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அப்போது தான் உங்கள் கரு முட்டை வெளியில் வரும், பிறகு அண்டவிடுப்பின் நிகழும் அந்த சமயத்தில் தாம்பத்தியம் கொள்ளுவதன் மூலம் கருத்தரிக்க முடியும்.

    இதைச் செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உள்ளன.
    • ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு பெண்ணும் கருப்பை ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது முக்கியம். மாதவிடாய் தொடக்கம் முதல் முடிவு வரை பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உள்ளன.

    தவறான பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை கருப்பை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    இதனால் கருப்பையில் நீர்க்கட்டி, தொற்று ஏற்படலாம். இந்த விஷயங்களால் PCOD மற்றும் PCOS பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.


    உணவில் கவனம்

    உங்கள் தினசரி உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் முடிந்தவரை பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள், கொழுப்பு நிறைந்த மீன்களைச் சேர்க்கவும். இதனால், உடலில் உள்ள ஹார்மோன்கள் சீராக இருப்பதோடு, வீக்கமும் குறையும். உங்கள் உணவில் குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.


    தினசரி உடற்பயிற்சி

    கருப்பை ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வதும் நன்மை பயக்கும். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி எடையைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். இதன் மூலம், கருப்பையின் செயல்பாடு சரியாகச் செயல்படும்.


    ஆரோக்கியமான எடை

    உணவுடன், ஆரோக்கியமான எடையை பராமரிப்பதும் முக்கியம். அதிக எடை இருப்பதால்உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். இதன் காரணமாக கருப்பையில் அழுத்தம் ஏற்பட்டு PCOD மற்றும் PCOS போன்ற கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.

    மன அழுத்தம்

    கருப்பை ஆரோக்கியமாக இருக்க, ஒரு பெண் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் முக்கியம். நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்கள் சமநிலையற்றதாகிவிடும். இதன் காரணமாக அண்டவிடுப்பில் பிரச்சனை ஏற்படலாம். இதற்காக நீங்கள் யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யலாம்.

    ×