என் மலர்
நீங்கள் தேடியது "Mehendi"
- எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
- அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.
பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்
அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன.
- திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
- மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன.
திருமணத்தின் போது மணமகளுக்கு கைகளில் அழகு அழகாக மெஹந்தி வரைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதில் வித்தியாசமாக காணப்படும் மெஹந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள அந்த மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன.
அதாவது மணமகள் இன்ஸ்டாகிராமில் மணமகனை சந்தித்த தேதியான 5.12.21, காதலை புரபோஸ் செய்த நாளான 19.1.22, முதலில் சந்தித்த 25.4.22, திருமணம் 31.1.23 என வரையப்பட்டிருந்தது. அந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.






