என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festival Days"

    • எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
    • அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!

    பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.

    பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 


    மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்

    * இலைகளிலேயே அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகள் இருக்கும். அதனை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் சர்க்கரை கலந்துவிட்டு பின்னர் மருதாணி போடலாம். இது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக, மருதாணி காய காய அதன்மீது விட்டுவருவதும் நல்ல நிறத்தை கொடுக்கும். 
    * அதுபோல யூக்கலிப்டஸ் தைலத்தை மருதாணி வைத்துள்ள இடத்தில் தடவினால் நல்லநிறம் கொடுக்கும். 
    * மருதாணியை கழுவ சோப்புத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது நிறத்தை நீக்கும். அதுபோல மருதாணி போட்டு சிறிது நேரத்திலேயே எடுத்துவிடக்கூடாது. அதனால்தான் பலரும் தூங்குவதற்கு முன் கையில் மருதாணி வைத்து தூங்குவார்கள். பகலில் வேலைகள் நிறைய இருக்கும். அதனால் மருதாணியை உடனே எடுக்கவேண்டிய சூழல்வரும். முடிந்தவரை இரவு நேரத்தில் போட்டுவிட்டு, காலையில் கையை கழுவுங்கள்.
    * கிராம்பை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
    * அதுபோல முதலில் கைக்கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், கடுகு எண்ணெயை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதில் யூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம். 

    அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. 

    • 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.
    • 7 நிமிடங்களில் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை சிறப்பு ரெயில்கள் அறிவித்தாலும் அவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு விடப்பட்ட சிறப்பு ரெயில்கள் கோடை விடுமுறைக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

    வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் எப்போதும் முழு அளவில் செல்கின்றன.ரெயில்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய திட்டமிட்ட முன்பதிவு தான் சிறந்ததாக உள்ளது.

    ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமின்றி வசதியாகவும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதாலும் சாதாரண முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தட்கல் மூலம் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் பயணத்தை திட்டமிட்டு தொடர வசதியாக 4 மாதங்களுக்கு முன்னதாக அதாவது 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

    பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களை கணக்கிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தை மக்கள் தொடர்கின்றனர்.

    இந்த நிலையில் ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    எனவே 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ந் தேதி (புதன்கிழமை) பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 10-ந் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டு செல்பவர்கள் நாளை (12-ந் தேதி) வேண்டும். ஆயுத பூஜை நாளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி பயணத்தின் 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க விருபுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய காத்து நின்றனர்.

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், அடையாறு, அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்பதிவு மையங்களில் குறைந்த அளவில் மக்கள் வரிசையில் நின்றனர்.

    இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலும் டிக்கெட் கவுண்டர்களுக்கு வருவது இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்து விடுகின்றனர்.

    அதன்படி முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பி விட்டன. கவுண்டர்களில் வரிசையில் நின்ற சிலருக்கு உறுதியான டிக்கெட் கிடைத்தது.

    7 நிமிடங்களில் தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு சில ரெயில்களில் ஏ.சி. வகுப்பு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் கோவை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்திலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    • கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.
    • சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை- தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் - ரூ.4,796, இன்றைய - கட்டணம் ரூ.14,281 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை - மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய - கட்டணம் ரூ.17,695 என நிர்ணயம்.

    சென்னை- திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.2,382, இன்றைய கட்டணம் ரூ.14,387 என நிர்ணயம்.

    சென்னை- கோவை இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,485, இன்றைய கட்டணம் ரூ.9,418 என நிர்ணயம்.

    சென்னை - சேலம் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,537, இன்றைய கட்டணம் - ரூ.8,007 என நிர்ணயம்.

    சென்னை - திருவனந்தபுரம் இடையே ரூ.3,821, இன்றைய கட்டணம் ரூ.13,306 என நிர்ணயம்.

    சென்னை- கொச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,678, இன்றைய கட்டணம் ரூ.18,377 என நிர்ணயம்.

    சென்னை- மைசூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,432, இன்றைய கட்டணம் ரூ.9,872 என நிர்ணயம்.

    சென்னை - தாய்லாந்து இடையே வழக்கமான கட்டணம் - ரூ.8,891, இன்றைய - கட்டணம் ரூ.17,437 என நிர்ணயம்.

    சென்னை- துபாய் இடையே வழக்கமான கட்டணம் - ரூ.12,871, இன்றைய கட்டணம் - ரூ.26,752 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ×