என் மலர்
இந்தியா

இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவும் மணமகளின் மெஹந்தி
- திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
- மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன.
திருமணத்தின் போது மணமகளுக்கு கைகளில் அழகு அழகாக மெஹந்தி வரைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதில் வித்தியாசமாக காணப்படும் மெஹந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள அந்த மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன.
அதாவது மணமகள் இன்ஸ்டாகிராமில் மணமகனை சந்தித்த தேதியான 5.12.21, காதலை புரபோஸ் செய்த நாளான 19.1.22, முதலில் சந்தித்த 25.4.22, திருமணம் 31.1.23 என வரையப்பட்டிருந்தது. அந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
Next Story






