search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty"

    • கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.
    • ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும்.

    முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இருமல், ஜலதோஷம், சளி தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் நோய்கள் பறந்தோடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும்.

    * கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

    * ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

    * மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

    * பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

    * ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

    • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
    • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

    பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

     முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

     கரும்புள்ளிகள் மறைய:

    வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

     முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

    முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

    இயற்கை அழகு சிகிச்கை:

    ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

    வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

    • 'பெடிக்யூர்' செய்வதற்கு பியூட்டி பார்லர் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
    • பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    கால் விரல் நகங்களை அழகாக பராமரிக்கும் 'பெடிக்யூர்' செய்வதற்கு அழகு நிலையம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியேகூட அதை மேற்கொள்ளலாம். அது எவ்வாறு என்று பார்ப்போம்...

     முதலில் பாதங்களைச் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பாதியளவு ஊற்றினாலே போதுமானது. அந்த நீரில் சிறிதளவு உப்பு, பாதி எலுமிச்சை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20நிமிடம் வைக்க வேண்டும்.

    நீரில் உள்ள உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. பின்னர் பிரஷ் வைத்து பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    20 நிமிடங்கள் கழித்து, பாதங்களில் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். கால் விரல் நகங்களில் நெயில் பாலீஷ் போட்டிருந்தால், நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம், பழைய நெயில் பாலீஷை அகற்ற வேண்டும். நகங்கள் சற்று நீளமாகவோ அல்லது சீரற்ற முறையில் இருந்தாலோ, நெயில் கட்டர் மூலம் வெட்டிவிடலாம்.

    அடுத்து பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிகால் உள்ளிட்டவற்றை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அழுக்குகள் நீங்கும்வரை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை கழுவிக்கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக, 'ஸ்கிரப்பிங்' செய்ய வேண்டும். அதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த திரவத்தை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து, 5 நிமிடத்துக்குப் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

     கடைசியாக, உங்களுக்கு விருப்பமான மாய்சரைசரை கால்களில் தடவி, உலரவிடவேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்த நெயில் பாலீஷை நகங்களில் போட்டுக்கொள்ளலாம். இப்போது உங்கள் கால் பாதங்களைப் பாருங்கள். உங்களுக்கே ரசிக்கத் தோன்றும்.

    இதுபோல பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாது. இறந்த செல்கள் அகற்றப்படும். பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

    • மூலிகை குளியல் பொடி உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.
    • மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும்.

    இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும். மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் மூலிகைகளால் செய்யப்பட்ட `மூலிகை குளியல் பொடி' உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.

     சரும பிரச்சனைகள்:

    நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் யாருக்கும் தன்னுடைய உடல் நலனை பற்றியும் உடல் அழகு பற்றியும் சிறிது கூட கவலை கிடையாது. குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்சனை சருமப்பிரச்சனை. சரும தொந்தரவுகள், சரும வறட்சி என்று பல பிரச்சனைகள் எழுகிறது. இதற்கு காரணம் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்கை சாதனங்கள் தான். அதனை தவிர்த்து நம் முன்னோர்கள் அளித்துள்ள இயற்கையான மூலிகைகளை கொண்டு ஒரு அருமையான `மூலிகை குளியல் பொடி' தயார் செய்து பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    கஸ்தூரி மஞ்சள் -100 கிராம்

    விரலி மஞ்சள் – 100 கிராம்

    சந்தானம் – 100 கிராம்

    கோரைக்கிழங்கு பொடி -100 கிராம்

    பாசிப்பயிறு -100 கிராம்

    இவை அனைத்தையும் ஒரு நாள் நிழலில் காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தினம் சோப்பு மற்றும் லோஷன் பயன்படுத்துவதற்கு பதில் இந்த மூலிகை பொடியை பயன்படுத்தலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியாகவும், நறுமணம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

    பயன்கள்:

    இதன் மூலமாக சொறி, சிரங்கு, தேமல் போன்ற பல சருமப் பிரச்சனைகளில் இருந்து மீளலாம். இந்த பொடி எந்த ஒரு அலர்ஜியையும் ஏற்படுத்தாது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் கூட இதனை பயன்படுத்தலாம்.

     மற்றொரு மூலிகை பொடி

    மூலிகை குளியல் பொடி தயாரிக்க சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு ஆகிய பொருட்களை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

    இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.

    தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும். அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.

    தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும், வரிகளும் மறைந்து போகும். வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உண்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.

    • வெயில் காலத்தில் கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும்.
    • பப்பாளி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் நாம் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுப்பதில்லை. கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     எலுமிச்சை ஸ்க்ரப்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதனை கைகளில் தடவி, சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் உள்ள எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. எனவே கைகளில் இருக்கும் கருமை நிறம் மாறி கைகள் பளிச்சென்று இருக்கும்.

      பப்பாளி ஸ்க்ரப்:

    கைகளில் உள்ள கருமை நீங்க பப்பாளி அதிக அளவில் உதவும். இந்த பேக் தயாரிப்பதற்கு 1 டீஸ்பூன் பப்பாளி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

     காபி ஸ்க்ரப்:

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி, தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஸ்க்ரப்பை கைகளை தடவி சிறிது நேரம் கழித்து நன்றாக மசாஜ் செய்து, அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவ வேண்டும்.

    தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளில் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • வீட்டு உபயோகப்பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.
    • தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    சருமத்துக்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு வீட்டு உபயோகப்பொருகளை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.

    தினமும் காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சிறிதளவு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு குளியல் போடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையங்களை போக்கி சருமப் பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் வித்திடும்.

    ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். இந்த செயல்முறை முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். `பளிச்' தோற்றத்தையும் தரும்.

    ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து குழைத்து முகத்தில் பூசவும். அவை உலர்ந்ததும் முகத்தை கழுவினால் பொலிவு கிடைக்கும்.

    கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் கலந்து பூசி வர, முகச்சுருக்கம் நீங்கும்.

    • சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.
    • சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.

    ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் இனி அதை தூக்கி எறியாமல் வீட்டிலேயே சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.

     இந்த ஆரஞ்சு பழத் தோலினை உலர்த்தி எடுத்துக்கொண்டு அதனுடன் நலங்குமாவு, கடலை மாவு, பயத்தம்பருப்பு மாவு, ஆவாரம்பூ பொடி, ரோஜா பொடி ஆகியவற்றுடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போதும் அல்லது ஃபேஸ் வாஷ் செய்யும் போதும் பயன்படுத்திவரலாம். தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நல்ல ரிசல்ட் இருக்கும்.

     பயன்படுத்தும் முறைகள்:

    ஆரஞ்சு பழத் தோல் ஒரு ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு ஸ்பூன், பால் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் கிளியர் ஸ்கின் கிடைக்கும். கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

    ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிரை கலந்து சருமத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.

    ஆரஞ்சு தோல் மற்றும் சர்க்கரை, தேன் இவற்றை கலந்து முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம்

    பிரகாசமாக இருக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இம்முறையை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆரஞ்சு தோலுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்து குளிர்ந்த நீரால் கழிவினால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.

    வேப்ப இலை பேஸ்ட் , ஆரஞ்சு தோல் பவுடர், தேன், தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பரு வராமல்

    தடுக்கும் சருமம் பொலிவுடன் காணப்படும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    • தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும்.
    • முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.

    இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. நவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களும் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும், அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ...

     வேப்பிலை:

    முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

    பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

     தேன்:

    தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு, காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும்.

    சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு, ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும், இந்த 'ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

     நெல்லிக்காய்:

    முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும். 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.

    காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை, சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

     மஞ்சள்:

    ஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.

    சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

    பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூசவும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.

    சிறிதளவு மஞ்சள் தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசவும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப்படுத்தவும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

    பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.

    • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
    • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

     சோப்பின் பயன்பாடு:

    சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

    இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

     மேக்-அப் போடும் முறை:

    மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

     ஆரோக்கியமான கூந்தல் பெற:

    இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

    மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

     கைகள் பராமரிப்பு:

    இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    • சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
    • பாடிலோஷன் சருமத்தை மிருதுவக்குகிறது.

    பாடி லோஷன் சரும வறட்சிக்காகவும் சரும பாதுகாப்பிற்காகவும் இன்று ஆண், பெண் என இரு தரப்பினரும் அதிகம் பயன்படுத்துகின்றனர். பாடி லோஷனைப் பயன்படுத்துவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சருமத்தை மிருதுவக்குகிறது.

    மேலும் சருமத்திற்கு வாசனையைத் தருகிறது. இதனால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க முடியும். முழங்கை போன்ற கருமையான பகுதிகளில் தடவும்போது கருமை படிப்படியாகக் குறைகிறது. இறுதியாக சருமத்தை பொலிவடையச் செய்கிறது.

    கவனிக்க வேண்டியவை

    * உடல் முழுவதுமே சிலர் பாடிலோஷனை பயன்படுத்துகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் குறிப்பாக, சூரிய ஒளி படும் முகம், கழுத்து, கை, கால்களில் தடவ வேண்டியது அவசியம்.

    * அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடிலோஷனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்கள் அவசியம் பயன்படுத்துங்கள்.

    * மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடிலோஷன்களை பயன்படுத்த வேண்டும்.

    * எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடிலோஷன்களை பயன்படுத்தலாம்.

    * அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடிலோஷன்களை பயன்படுத்துங்கள்.

    * குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடிலோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.

    * முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.

    * கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடிலோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.

    பாடிலோஷன் நல்லதா?

    பாடிலோஷன் சருமத்திற்கு பல்வேறு வகையில் நன்மை தருகிறது. சருமப் பராமரிப்பில் முக்கியமானது என்று கூறலாம். எனினும், சிலருக்கு, சில பாடிலோஷன் தயாரிப்புகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ரசாயனம் அதிகம் கலக்காத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்.

    • தலைமுடியை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
    • ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.

    சருமத்தைப் போலவே தலைமுடியையும் தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அலங்காரத்துக்காக கிளிப்புகள், ஹேர்பின்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தலைமுடியும். அதன் வேர்க்கால்களும் சேதமடைய நேரிடலாம். இதனால் தலைப்பகுதியில் எரிச்சல், காயம், வலி உண்டாகக் கூடும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி உடைவது. உதிர்வது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    கரடுமுரடான ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். கிளிப்புகள், கொண்டை ஊசிகள் அல்லது கொக்கிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். முனைப்பகுதியில் ரப்பர் பூச்சு கொண்ட ஹேர்பின்கள் மற்றும் கிளிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.

    கிளிப்புகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் மூலம் கூந்தல் சேதம் அடைவதோடு, அடிக்கடி தலைவலியும் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு முன்பு தலைமுடியில் அணிந்திருக்கும் ஹேர்பின்கள், கொண்டை ஊசிகள் ஆகியவற்றை அகற்றுவது முக்கியமானதாகும். இல்லாவிடில் அவற்றில் உள்ள கூர்மையான பாகங்கள் கூந்தலை சேதப்படுத்தும். தலைமுடியை தளர்வாக பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.

    தலைமுடியை சுருளச் செய்வதற்காக கிளிப்புகள் பயன்படுத்துபவர்கள், அவற்றை ஹேர் டிரையர் மூலம் அதிகமாக சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதன் அதிகப்படியான வெப்பம். தலைமுடியை சேதம் அடையச் செய்யும்.

    எலாஸ்டிக் பேண்டுகள் பார்ப்பதற்கு மென்மையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை அணிவதன் மூலமாகவும் தலைமுடி பாதிப்படைய நேரிடலாம். எலாஸ்டிக் பேண்டுகள் அணியும்போது தலைமுடி இறுக்கமாக இழுக்கப்படும். இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதமடைவது, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    நேரடியாக எலாஸ்டிக் பேண்டுகளை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை கழற்றும்போது தலைமுடி இழைகளை அறுந்து சேதப்படுத்தும். இவற்றுக்கு பதிலாக துணியின் உள் பகுதியில் வைத்து தைக்கப்பட்ட எலாஸ்டிக் பேண்டுகளை உபயோகிக்கலாம்.

    தலைமுடியை இறுக்கமாக இழுத்து சீவுவதையோ, பின்னுவதையோ தவிர்க்க வேண்டும். ஹேர் பேண்டுகளை தலைமுடியில் இறுக்கமாகக் கட்டுவது. முடியின் இழைகளை சிதைத்து, பலவீனம் அடையச் செய்யும்.

    • சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய சிகிச்சை முறையே பேஷியல்.
    • தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.

    முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, திசுக்களுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய அழகு சிகிச்சை முறையே பேஷியல். இதில் பல வகைகள் இருந்தாலும், தற்போது டிரெண்டிங்கில் இருப்பது 'ஹைட்ரா பேஷியல்'. சருமத்தின் நிறம், தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.

    'ஹைட்ரா பேஷியல்' என்பது அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருவியின் மூலம் செய்யப்படும் அழகு சிகிச்சையாகும். இதில் எல்.இ.டி. ஒளி பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளை ஆழமாக சுத்தம் செய்து மெருகூட்ட உதவுகிறது.

     இந்த சிகிச்சையை ஒருமுறை செய்யும்போதே முகப்பொலிவு அதிகரிக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். ஹைட்ரா பேஷியல் முறையில் சருமத்தை சுத்தப்படுத்துதல், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றுதல், வறண்ட சருமத்துக்கு நீரேற்றம் அளித்தல், அழகை மேம்படுத்தும் சீரத்தை (திரவ மருந்து) சருமத்துக்குள் செலுத்துதல் என ஒரு அமர்வில் முகத்திற்கு 4 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சிகிச்சை முறையில் 3 படிகள் உள்ளன. முதல் படியில், 2 வகையான நிற ஒளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், நீல நிற ஒளி முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க உதவுகிறது. சிவப்பு நிற ஒளி சருமத்தில் உள்ள சுருக்கங்களை சீரமைக்கிறது.

    இரண்டாவது படியில், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வலி இல்லாமல் உறிஞ்சப்பட்டு நீக்கப்படுகின்றன. இதில் சருமத்தை மென்மையாக்கும் வகையில், மொய்ஸ்சுரைசர்கள் மூலம் ஊட்டம் அளிக்கப்படுகிறது.

    இது பிரத்யேகமான கருவியைக் கொண்டு சுழற்சி முறையில் செய்யப்படும். இதற்கு ஆன்டி-ஆக்சிடன்டுகள், சீரம் (திரவ மருந்து) ஒட்சிசனேற்றிகள், பெப்டைடுகள், ஹைலூரோனிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

    மூன்றாவது படியில் சருமத்தை பளபளக்கச் செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சருமத்தின் நிறம், தன்மை, பொலிவு ஆகியவை மேம்படும்.

    ஒருமுறை இந்த பேஷியல் செய்தபின்பு, சில வாரங்கள் வரை சருமப் பொலிவு நீடித்திருக்கும். இதற்கு ஏற்ற வகையில், வீட்டில் தரமான முக கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

    ஹைட்ரா பேஷியலின் நன்மைகள்:

    * முகப்பருக்கள், பருக்களால் முகத்தில் உண்டாகும் கருமை நிற வடுக்கள் ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

    * சருமத்தின் நிறத்தையும், தோலின் கட்டமைப்பையும் மேம்படுத்தும். ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும்.

    * முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும். பெரிய துளைகள் இறுக்கப்படுவதால், அவற்றின் வழியாக மீண்டும் அழுக்கு மற்றும் எண்ணெய் சேராமல் தடுத்து, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும்.

    * இந்த சிகிச்சை முறையில் சருமத்தில் செலுத்தப்படும் கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் மற்றும் முக்கிய தாவர சாறுகளின் கலவைகள் ஆழமாக ஊடுருவி முக அழகை அதிகரிக்கும்.

    ×