search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தழும்புகள்"

    • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
    • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

    பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

     முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

     கரும்புள்ளிகள் மறைய:

    வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

     முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

    முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

    இயற்கை அழகு சிகிச்கை:

    ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

    வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

    • பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
    • ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள்.

    சிலருக்கு முகத்தில் உள்ள சருமம் சீரான நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருப்பு நிற திட்டுக்கள் காணப்படும். பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை `ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள், தூக்க மின்மை, அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும். ஒவ்வாமை, மனஅழுத்தம் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க உதவுகிறது

    `கோஜிக் அமிலம்'. பெரும்பாலான அழகு பராமரிப்பு பொருட்களில் கோஜிக் அமிலம் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பூஞ்சைகளில் இருந்து கோஜிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர சோயா, அரிசி போன்ற சில உணவுப்பொருட்களை நொதிக்க வைத்து அதில் இருந்தும் கோஜிக் அமிலத்தை தயாரிக்கிறார்கள்.

    `மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தி அதிகமாகும் பொது சருமத்தில் கருமை நிறம் உண்டாகிறது. 'டைரோசின்' என்ற அமினோ அமிலத்தின் மூலம்தான் மெலளின் ற்பத்தியாகிறது. கோஜிக் அமிலம், உடலில் டைரோசின் உருவாவதை தடுக்கிறது. இதன்மூலம் மெலனின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு, சருமத்தில் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது. கோஜிக் அமிலத்தின் பயன்கள் பற்றிய மேலும் சில விஷயங்கள் இங்கே.

    கரும்புள்ளிகளை நீக்கும்

    முகப்பரு அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகம் பொலிவு இழந்து காணப்படும். கோஜிக் அமிலத்தில் உள்ள மூலக்கூறுகள் கரும்புள்ளிகளை எளிதாக நீக்கக்கடியவை இந்த அமிலத்தை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களி பூச வேண்டும். அது எளிதாக சருமத்தில் ஊடுருவி மெல்வின் உற்பத்திக்கு காரணமான டைரோசினை கட்டுப்படுத்தும் சமத்தில் ஏற்படும் அதிகப்படியான நிறமியின்  உற்பத்தியை தடுக்கும். இதன்மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், புள்ளிகள் ஆகியவை எளிதாக நீக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சினையும் குறையும்.

    சருமத்தை பிரகாசமாக்கும்

    அடிக்கடி வெயிலில் செல்பவர்களுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்டு சருமம் கறுத்துப்போகும். அந்த இடங்களில் கோஜிக் அமிலத்தை பூசும்போது அது ஆழமாக ஊடுருவி சருமத்தின் பலவேறு அடுக்குகளில் இருந்து கருமையை நீக்கும். இதன்மூலம் மீண்டும் சருமம் பிரகாசமாக மாறும்.

    மெலஸ்மாவுக்கு தீர்வாகும்

    கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் முகம் மற்றும் உடலில் கருத்திட்டுகள் உருவாகும். இந்த நிலையை மருத்துவத்தில் 'மெலஸ்மா' என்று அழைக்கிறார்கள். சிலருக்கு பிரசவத்திற்கு பின்னும் இந்த கருந்திட்டுகள் போகாமல் சருமத்தில் நிரந்தரமாக படித்துவிடும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கோஜிக் அமிலத்திற்கு உண்டு.

    கிருமித்தொற்றை எதிர்க்கும்

    பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் ஏற்படுத்தும் தொற்றால் முகத்தில் கொப்புளங்கள், முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோஜிக் அமிலம் இவற்றை குணப்படுத்துவதோடு இவற்றால் சருமத்தில் ஏற்படும் தழும்புகளையும் அதுமட்டுமில்லாமல் அவற்றையும் குணப்படுத்தும். கிரீம்கள் மற்றும் சோப் மற்றும் திரவ வடிவிலும் கோஜிக் அமிலத்தை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது மாய்ஸ்சரைசர்களையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    • சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    சிலருக்கு நல்ல கலராக இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ இருக்கும் கலர் போதும் ஆனால் சருமத்தில் எந்த பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இதில் இரண்டாவது விருப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சருமம் கலராக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக மற்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்..

    அரிசி கழுவிய தண்ணீர்

    முகம் கழுவுவதற்கு நாம் விதவிதமாக சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கொரிய பெண்களோ அரிசி கழுவிய தண்ணீரே முகம் கழுவுவதற்கு சிறந்த கிளன்சராக பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது சருமத்தை நீண்ட நேரம் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும்.

    ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி முகம் கழுவுவதற்குப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    கிரீன் டீ ஐஸ்கியூப்

    கிரீன் டீயில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி சருமத்தையும் டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

    ரெண்டு ஸ்பூன் கிரீன் டீ சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். அது ஐஸ் ஆன பிறகு அந்த ஐஸ் கட்டிகளை எடுத்த சருமத்தில் நன்கு மசாஜ் செய்து வர சருமத்துளைகள் திறந்து அதில் உள்ள மாசுக்கள் வெளியேறும் கண் முக வீக்கங்கள் குறையும் சருமம் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும்.

    எலுமிச்சை - தேன் மாஸ்க்

    நம்முடைய சரும துளைகளுக்குள் நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலில் இருந்து வரும் மாசுக்கள் ஆகியவை படிந்திருக்கும். அதனால் சரும துளைகளுக்குள் இருக்கும் மாசுகளை வெளியேற்றவும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாவதற்கும சருமம் சரியாக சுவாசிப்பதற்கு இடமளிப்பதும் அவசியம். அதற்கு மிகச்சிறந்த ஒன்றாக இந்த எலுமிச்சை - தேன் மாஸ்க் இருக்கும்.

    இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு விரல்களால் லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மாஸ்கை முகத்தில் அப்ளை செய்து வரும் பொழுது சருமத்தில் உள்ள பெரிய துளைகள், பள்ளங்கள் ஆகியவை சிறிதாக ஆரம்பிக்கும். சருமம் சுத்தமாகும்.

    சரும பராமரிப்பு முக பராமரிப்பு என்று சொன்னாலே நம்முடைய முழு கவனமும் முகத்தில் தான் இருக்கிறதே தவிர கண்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் கண்கள் தான் முகத்தின் உயிராக இருக்கிறது என்பதை உணர வேண்டும். கண்ணுக்கு கீழ் கருவளையம், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கமாகி அவற்றை குறைக்க உருளைக்கிழங்கு அற்புதமான ஒரு வீட்டு வைத்தியம் என்று சொல்லலாம்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இப்படி செய்யும் போது கண்கள் குளிர்ச்சி அடைவதோடு கண்களைச் சுற்றிலும் உள்ள கருவளையங்கள் நீங்கும். சருமத்தை பட்டு போன்ற மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள கொரிய பெண்கள் தயிரை பயன்படுத்துகிறார்கள். தயிர் அவர்களுடைய சரும பராமரிப்பில் மிக முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறது.

    இரண்டு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வைத்து கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாகவும் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளவும் மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்யும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி விட்டு கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்வது கொரிய பெண்களின் மிக முக்கியமான இரவு நேர சரும பராமரிப்பு ஆகும்.

    கற்றாலை ஜெல்

    இரவு முழுவதும் சருமத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்திருக்கும் பொழுது அது சருமத்தில் உள்ள காயங்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவற்றைப் போக்கவும் நல்ல ஹீலிங் பண்பு கொண்டிருப்பதால் சருமத்தில் உள்ள அரிப்புகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவியாக இருக்கும். கொரியப் பெண்களின் சரும பராமரிப்பில் ஷீட் மாஸ்க் களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சீட் மாஸ்குகள் சருமத்தின் வறட்சியைப் போக்குவதோடு சருமத்தை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க செய்யும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்த சீட் மாஸ்குகள் பயன்படும். அதிலும் வெள்ளரிக்காய் உட்பொருளாக சேர்க்கப்பட்ட ஷீட் மாஸ்குகளைப் பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், மூக்கை சுற்றிலும் உள்ள வெண்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்க முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தலாம்.

    முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    பளபளப்பாக கண்ணாடி போல இருந்தாலும் வறட்ச்சியாகவும் இருக்காது, அதிக எண்ணெய் பசையுடனும் இருக்காது. சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் பராமரிக்கும். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாஸ்குகளில் ஒன்று தான் முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்து, நன்கு ஸ்பூனால் பீட் செய்து முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பீல் ஆப் மாஸ்க் போல அதை உரித்து எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டுப் பாருங்கள். முதல் முறை அப்ளை செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

    சரும பராமரிப்புகளில் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் விடும் விஷயம் இந்த மசாஜ் தான். எவ்வளவு சரும பராமரிப்புகள் செய்தாலும் சருமத்தை சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாய்ஸ்ச்சராகவும் வைத்துக் கொள்வதற்கு மசாஜ் மிக முக்கியம்.

    • துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
    • துளசி ஃபேசியல் செய்தால் முகப்பருக்கள், தழும்புகள் மறையும்.

    துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.

    எண்ணெய்ப்பசை நீங்க:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை  முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

    முகச்சுருக்கம் மறைய:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக்கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறைந்து இளமை அதிகரிக்கும்.

    முகம் பொலிவு பெற:

    சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும், அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து ஃபேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

    முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:

    சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

    முகத்தில் உள்ள வறட்சி நீங்க:

    2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். ௧௫ நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.

    சருமம் புத்துணர்ச்சி பெற:

    சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும், இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    • பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்ய வேண்டும்.
    • அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப்.

    நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?

    வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது. அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான்

    எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு

    அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.

    அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும். கடைசியாக நாம் செய்யப்போவது தான் ஃபேஸ் பேக்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.

    இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து பயனடைவோம்.

    • உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு.
    • தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது.

    இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த பேசியலால் முகத்திற்கு மேலும் பாதிப்புகள் அதிகரிக்குமே தவிர எந்தவித நன்மையும் ஏற்படாது. இவ்வாறு செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் இயற்கையான முறையில் எப்படி பேசியல் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.

    கரும்புள்ளிகள் நீங்க

    5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவிப்பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும். இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தை கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும், காலையில் நீரில் கழுவவும், இது கருப்பு புள்ளிகளை அகற்றும். தேங்காய் பால், தேன் மற்றும் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெயையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமட்தை ஈரப்பதமாக்குகிறது.

    வறண்ட சருமம் பளபளக்க...

    உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு. 2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசிவர முகச்சுருக்கம் மறைந்துவிடும். முகக்கருமை நீங்க சர்க்கரை, கற்றாழை ஜெல், பால் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    முகத்தில் உள்ள தழும்புகள் மறைய

    தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவ சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    • தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது.
    • வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.

    முகத்தில் அம்மை வடு, தழும்பு, காயங்கள் போகணுமா ? இதை செய்துபார்த்து பயன் அடையுங்கள்

    உடலில் காயங்களினால் ஏற்படும் தழும்பு ஆறாமல் இருந்தால் முகம், உடல் என எந்த இடத்தில் இருந்தாலும் அது அசெளகரியாகவே நினைக்க தோன்றும். அதிலும் அவை முகத்தில் வந்தால் அழகையும் குறைத்து காட்டும்.

    தழும்புகள், வடுக்கள், காயங்கள் என எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பை குறைத்து சருமம் பழைய தோற்றத்தை பெறுவதற்கு வீட்டு வைத்தியங்கள் உண்டு. எளிமையான முறையில் இதை சரி செய்ய உங்களுக்கு இந்த வைத்தியம் உதவும்.

    எலுமிச்சை

    எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தழும்புகளின் தோற்றத்தை மங்க செய்யும். குறிப்பாக முகப்பருக்கள், பருக்களினால் வந்த தழும்புகளை குணப்படுத்த இவை உதவும்.

    எலுமிச்சை சாறு - 3 அல்லது 4 டீஸ்பூன் அளவு நீர்த்தது

    காட்டன் பஞ்சு - சிறு உருண்டை

    பாதிக்கப்பட்ட இடத்தை முதலில் க்ளென்ஸ் செய்யுங்கள். பின்னர் எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தம் செய்யவும். பிறகு வெளியில் செல்வதாக இருந்தால் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யவும். தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

    சிலருக்கு எலுமிச்சை சாறு சருமத்தில் ஒவ்வமையை உண்டாக்கலாம். அதனால் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துங்கள். ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

    தேன்

    தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது. தேனில் இருக்கும் பண்புகள் காயங்களை குணப்படுத்தக்கூடியவை. இதனுடன் பேக்கிங் சோடா இணைந்து பயன்படுத்தும் போது அது சரும வடுக்களை மங்கி காட்டும்.

    தேன் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்

    வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு

    சுத்தமான மெல்லிய துணி - தேவைக்கு

    தேனையும் பேக்கிங் சோடாவையும் நன்றாக குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்யலாம்.

    வெங்காயம்

    வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

    வெங்காயச்சாறு - தேவைக்கு

    சிறிய வெங்காயமாக இருக்கட்டும். வெங்காயத்தை தோல் உரித்து சாறு எடுக்கவும். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தில் அதிகமான காயங்களும் தழும்புகளும் இருந்தால் தினமும் 3 வேளை இதை செய்து வரலாம். வெங்காயம் சருமத்துக்கு பயன்படுத்தினால் பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். கண்டிப்பாக மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

    சோற்றுக்கற்றாழை

    சோற்றுக்கற்றாழை அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டவை. இது சரும எரிச்சலை போக்க கூடியது. சருமத்தில் உண்டாகும் வடுக்களையும் போக்கும். சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.

    சோற்றுக்கற்றாழை மடல்களில் இருந்து ஜெல் போன்ற பகுதியை எடுக்கவும். கடைகளில் கற்றாழை ஜெல் கிடைக்கும். இதை வாங்கி மசாஜ் செய்யலாம். தேவையான இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். இதற்கு பிறகு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை பயன்படுத்தலாம்.

    நெல்லிக்காய்

    நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய சிறந்த பொருள். இதை உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்புற பூச்சுக்கும் பயன்படுத்தலாம். இது வடுக்களை குறைக்க செய்யும். இது நாள்பட்ட தழும்புகளையும் வடுக்களையும் மாற்றி சருமத்தை புதியது போல் ஜொலிக்க செய்யும்.

    நெல்லிக்காய் பொடி (கொட்டை நீக்கியது)

    ஆலிவ் ஆயில் - தேவைக்கு

    நெல்லிக்காய் பொடியை தேவைக்கு எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல் குழைக்கவும். இதை முகத்தில் அல்லது உடலில் என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். ஒவ்வொரு மாற்று நாளிலும் இதை பயன்படுத்தலாம்.

    உருளைக்கிழங்கு சாறு

    உருளைக்கிழங்கு சாறு பைட்டோகெமிக்கல் சருமத்தில் இருக்கும் வடுக்களை மந்தமாக்க செய்யும். இது பிக்மெண்டேஷன் போக்குவதோடு கருவளையம், முகப்பரு மற்றும் பருக்களையும் போக்கும் தன்மை கொண்டவை. இது சரும நிறத்தை மீட்டு கொடுக்கும்.

    உருளைக்கிழங்கு சாறு - 2 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு துருவி அரைத்து அதன் சாறை எடுக்கவும். அதில் காட்டன் உருண்டையை நனைத்து ஊறவைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம்.

    தழும்புகள், வடுக்களை போக்க வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். மருத்துவரின் அறிவுரையோடு வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுக்கலாம். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் சேர்க்கலாம். இவை எல்லாம் சருமத்தில் இருக்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகளை அதன் தீவிரம் பொறுத்து மந்தமாக்கும் அல்லது குணப்படுத்தவும் செய்யும்.

    ×