என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துளசி"
- வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
- ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.
ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.
ஆனால், பெரும்பாலும் புறா கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில்
முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது.
அப்படிப்பட்டவர்கள் முற்றங்கள் இல்லையென்றாலும், துளசி செடியை கிழக்கு திசையில்,
தரைமட்டத்தில் வைத்தால் நல்லது.
இப்படி கிழக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டு வணங்கி வருவது
பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
அதே சமயம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக் கூடாது.
ஆண்டு முழுவ தும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும்.
இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவு தான் நற்பலனை கொடுக்கும்.
சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது.
பொதுவாக மற்ற அனைத்து செடிகளையும்விட துளசி, அதிகளவில் ஆக்சிஜனை வெளியேற்றும் சக்தி கொண்டது.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து, துளசியை வழிபட்டு வந்தால்,
ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் தானாய் வந்து சேரும்.
உங்களால் வலம் வர முடியாவிட்டாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடியின் அருகே அமருங்கள்.
- பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
- எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.
பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.
அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு
வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள்.
துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.
குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது.
இதைக் குணமாக்க துளசியை சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.
- வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.
- இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.
வீடுகளில் துளசி மாடம் வைத் துள்ளவர்கள் துளசி பூஜையை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிகளில் செய்வதுண்டு.
ஆனாலும், கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியில் விசேஷ பூஜையாக துளசி பூஜையைச் செய்வார்கள்.
துளசிக்கு அன்று விவாகம் நடந்த நாளாகவும் கூறுவார்கள்.
துளசியின் விசேஷ பூஜை ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியன்று பிருந்தாவன பூஜையாக விமரிசையாக செய்யப்படுகிறது.
துளசி மாடத்தில் நெல்லி மரக்குச்சியை நட்டு, மகா விஷ்ணுவை ஆவாகனம் செய்து ஷோட சோபசாரங்கள் செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.
இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.
- கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
- துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.
கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.
ஏனெனில் அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை
பூமாதேவியின் வேதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.
விஷ்ணு சேவைக் கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக்கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும்.
- கருந்துளசி விசேஷ குணமுடையது.
- நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
கருந்துளசி விசேஷ குணமுடையது.
இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுட வைத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல்
முதலானவை நீங்கும்.
நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
தீராத தொண்டைக்கட்டு, வலி நீங்க...
தினமும் துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி,
தொண்டைக்கட்டு நீங்கும்.
உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீங்கும்.
10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி
கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்தி விட்டு நல்ல கம்பளி கொண்டு உடல்
முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.
- மேலைநாட்டு வீட்டு மருத்துவர் ஆப்பிள்...
- தமிழ்நாட்டு வீட்டு மருத்துவர் துளசி...
மேலைநாட்டு வீட்டு மருத்துவர் ஆப்பிள்...
தமிழ்நாட்டு வீட்டு மருத்துவர் துளசி...
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
அது தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் அவர் மருத்துவரை வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டிய நிலை வராது.
தமிழர்களின் முதுமொழி மற்றும் தமிழர்களாகிய நாம் மறந்த பழமொழி நான்கு துளசி இலைகளை தினமும் ஒருவர்
சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அவர் வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டிய அவசியம் கட்டாயம் இருக்காது.
துளசி ஒரு சர்வரோக நிவாரணி.
- நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.
- துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.
துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்ட துளசியை ஒருவர் தினமும் தின்று வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.
நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.
துளசி செடியில் இருந்து 4 துளசி இலைகளை இளம் கொத்தாக பறித்து தினம் நாம் சாப்பிடும்போது நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அது அடித்தளமாக அமையும்.
- சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.
- பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.
சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.
இது தவறான வாதம்.
துளசி கருமையாக மாறியிருந்தால் இது கிருஷ்ண துளசி எனப்படும்.
இந்த வகை துளசியை கிருஷ்ணணுக்கு மாலையாக அணிவிக்கலாம்.
வீட்டில் கண்ணன் சிலை வைத்திருந்தால் அவருக்கு சூட்டலாம்.
பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.
இதை ராமபிரானுக்கு மாலையாக சூட்டவேண்டும்.
இது தவிர செந்துளசி என்ற அரிய ரகமும் உண்டு.
- தீர்த்தம் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதை புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
- சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நமக்கு நன்மை தருவதாகும்.
துளசி என்பது ஆன்மிகம் சார்ந்த பொருள் அல்ல.
அது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒரு பொருளாகவே தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் முழு மூச்சுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெருமாளை தரிசனம் நடத்தி முடித்ததும் தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
தீர்த்தம் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதை புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
இதன் புனிதத் தன்மையையும், தூய்மையையும் நம்பாதவர்கள் இதன் பயன்களை அங்கீகரிப்பது இல்லை.
இந்து மதத்தவர்கள் வீடுகளில் இறை சமமாக கருதியே துளசி செடியை நட்டு வழிபடுகிறார்கள்.
துளசி மாடம் கட்டி விளக்கேற்றி பராமரிக்கவும் செய்கிறார்கள்.
கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தத்துக்கு மருத்துவ குணங்கள் உண்டு என்று நாம் கண்டறிந்துள்ளோம்.
துளசி தீர்த்தத்திற்காக நாம் கோவிலுக்கு செல்ல வேண்டியது இல்லை.
வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார் செய்யலாம்.
சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நமக்கு நன்மை தருவதாகும்.
வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறையை நம் மூதாதையர்கள் கடை பிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.
ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில் 4 அல்லது 5 துளசி இலைகளை பறித்து இட்டு வைத்து தீர்த்தமாக உபயோகிக்கலாம்.
- துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
- மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து.
துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
இதை செய்யும் முறை மிகவும் எளிதானது.
சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும்.
இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அள வில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத் தில் இட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி,
ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும்.
மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து.
இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
- ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டது போல் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
- 7-7 நேர் புள்ளிகளை பயன்படுத்தி, பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரைய முடியும்.
துளசி மாடக் கோலம் 7-7 நேர்ப் புள்ளி வலை அமைப்பில் இடப்பட்ட புள்ளிகளை சுற்றி செல்லும் வளை கோடுகளை பயன்படுத்தி வரையப்பட்ட ஒரே மாதிரியான 6 கூறுகளை இணைத்து பெறப்பட்டுள்ளது.
இவ்வாறான கூறுகளை ஒன்றுடன் ஒன்று மூலைகளில் தொடுத்து கோலத்தை விரிவாக்கம் செய்யலாம்.
இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவ அமைப்புக்கோ எந்தவித எல்லையும் கிடையாது.
கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக் கொள்ள முடியும்.
கோலம் வரைபவரின் கற்பனை சக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக் கொள்ளலாம்.
ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டது போல் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
7-7 நேர் புள்ளிகளை பயன்படுத்தி, பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரைய முடியும்.
அதுமட்டுமின்றி 7-7 நேர்ப் புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்தோ, கூட்டியோ கூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை நாம் உருவாக்கலாம்.
- எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லா விட்டால் அது நந்தவனம் ஆகாது.
- துளசி மட்டும் இருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகி விடும்.
எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லா விட்டால் அது நந்தவனம் ஆகாது.
துளசி மட்டும் இருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகி விடும். துளசி படர்ந்த இடம் பிருந்தாவனம் ஆகும்.
துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா.
துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு 1,000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
பவுர்ணமி, அம்மாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை எண்ணை தேய்த்துக் கொண்டு துளசியை பறிக்க கூடாது.
அதிகாலை பொழுதும் சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டே துளசியை பறிக்க வேண்டும்.
துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்