search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதத்தை யொட்டி ஈரோட்டில் துளசி விற்பனை அதிகரிப்பு
    X

    புரட்டாசி மாதத்தை யொட்டி ஈரோட்டில் துளசி விற்பனை அதிகரிப்பு

    • புரட்டாசி மாதத்தை யொட்டி ஈரோட்டில் துளசி விற்பனை அதிகரித்துள்ளது
    • ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையாகிறது

    ஈரோடு,

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என கருதப்படுகிறது. இதனால் புராட்டாசு மாதம் பிறந்தது முதலே பெருமாள் கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சனிக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகள வில் வந்து செல்கிறார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்ததாக துளசி உள்ளது. இதனால் பெருமாள் கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் துளசி கொண்டு சென்று பெருமாளுக்கு படைத்து வழிபாடுகிறார்கள். அதே போல் பெருமாள் கோவில் களில் சாமிக்கு துளிசி மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. அன்று முதல் பக்தர்கள் பலர் மாவட்ட த்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளில் வருகிறார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழ மைகளில் கடந்த 3 வாரமாக அனைத்து பெருமாள் கோவி ல்களிலும் பக்தர்கள் ஏராள மானேர் வந்து சாமி தரிசனம் செய்து வரு கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் துளசியை மாலையாக உதிரியாகவும் அதிகளவில் கொண்டு வந்து பெருமாளுக்கு அணி வித்து தரிசனம் செய்கி றார்கள். தொடர்ந்து பக்தர்கள் துளசி வாங்கு வதால் கடந்த 3 வாரங்களாக துளசி விற்ப னை அதிகரித்து வருகிறது.

    இதனால் பெருமாள் கோவில்கள் முன்பு துளசி விற்பனைகள் கடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற பூக்களை விட துளசி அதி களில் விற்பனை செய்ய ப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் துளசி கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்க ளாக கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் கடந்த மாதம் துளசி 1 கட்டு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த து.

    ஆனால் கடந்த 3 வாரங்க ளாக விலை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போ து ஈரோட்டில் ஒரு கட்டு துளசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான சிறு மற்றும் பெரிய வியா பாரிகள் அதிகளவில் துளசி வாங்கி செல்கிறார்கள். இதனால் துளசி விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. மேலும் பெரும்பாலான கடைகளில் சனிக்கிழமை களில் துளசி கிடைப்ப தில்லை. பற்றக்குறை நிலவி வருகிறது.

    அதே போல் பல பகுதி களில் இருந்து ஈரோட்டுக்கு கடந்த மாதம் 200 கட்டு களுக்கு மேல் துளசி வரும். ஆனால் தற்போது வியா பாரிகள் போட்டி போட்டு துளசி வாங்கி செல்வதால் வரத்தும் குறைந்தது. இதனால் தற்போது 50 முதல் 60 துளசி கட்டுகள் மட்டுமே கடைகளுக்கு வருகிறது. அதுவும் விரை வில் விற்று தீர்ந்து விடுகிறது. அதே போல் அந்தியூர் பகுதியில் கடந்த மாதம் ஒரு கட்டு துளசி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.30 வரை விற்கப்பட்டு வரு கிறது.

    அதே போல் அந்தியூர் பகுதியில் 1 முழம் துளசி முன்பு ரூ.10-க்கு விற்க ப்பட்டது. ஆனால் தற் போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப் படுகிறது.கடந்த மாதம் வரை ரூ.50-க்கு ஒரு பை நிறைய வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது தேவை அதிரிப்பு மற்றும் விலை ஏற்றாத்தால் குறைந்த அளவில் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக சிறு வியாபாரிகள் தெரி வித்தனர். ஆனால் துளசி விலை ஏற்றம் ஏற்பட்டாலும் பக்தர்கள் பலர் தங்கள் தேவைக்கேற்ப அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் வரும் நாட்களிலும் துளசி தேவை அதிகரித்து உள்ளதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். தொடர்ந்து துளசி விற்ப னை அதிகரித்து உள்ளது. இதனால் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×