search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tulsi"

    • புரட்டாசி மாதத்தை யொட்டி ஈரோட்டில் துளசி விற்பனை அதிகரித்துள்ளது
    • ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையாகிறது

    ஈரோடு,

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என கருதப்படுகிறது. இதனால் புராட்டாசு மாதம் பிறந்தது முதலே பெருமாள் கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சனிக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகள வில் வந்து செல்கிறார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்ததாக துளசி உள்ளது. இதனால் பெருமாள் கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் துளசி கொண்டு சென்று பெருமாளுக்கு படைத்து வழிபாடுகிறார்கள். அதே போல் பெருமாள் கோவில் களில் சாமிக்கு துளிசி மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. அன்று முதல் பக்தர்கள் பலர் மாவட்ட த்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளில் வருகிறார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழ மைகளில் கடந்த 3 வாரமாக அனைத்து பெருமாள் கோவி ல்களிலும் பக்தர்கள் ஏராள மானேர் வந்து சாமி தரிசனம் செய்து வரு கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் துளசியை மாலையாக உதிரியாகவும் அதிகளவில் கொண்டு வந்து பெருமாளுக்கு அணி வித்து தரிசனம் செய்கி றார்கள். தொடர்ந்து பக்தர்கள் துளசி வாங்கு வதால் கடந்த 3 வாரங்களாக துளசி விற்ப னை அதிகரித்து வருகிறது.

    இதனால் பெருமாள் கோவில்கள் முன்பு துளசி விற்பனைகள் கடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற பூக்களை விட துளசி அதி களில் விற்பனை செய்ய ப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் துளசி கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்க ளாக கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் கடந்த மாதம் துளசி 1 கட்டு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த து.

    ஆனால் கடந்த 3 வாரங்க ளாக விலை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போ து ஈரோட்டில் ஒரு கட்டு துளசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான சிறு மற்றும் பெரிய வியா பாரிகள் அதிகளவில் துளசி வாங்கி செல்கிறார்கள். இதனால் துளசி விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. மேலும் பெரும்பாலான கடைகளில் சனிக்கிழமை களில் துளசி கிடைப்ப தில்லை. பற்றக்குறை நிலவி வருகிறது.

    அதே போல் பல பகுதி களில் இருந்து ஈரோட்டுக்கு கடந்த மாதம் 200 கட்டு களுக்கு மேல் துளசி வரும். ஆனால் தற்போது வியா பாரிகள் போட்டி போட்டு துளசி வாங்கி செல்வதால் வரத்தும் குறைந்தது. இதனால் தற்போது 50 முதல் 60 துளசி கட்டுகள் மட்டுமே கடைகளுக்கு வருகிறது. அதுவும் விரை வில் விற்று தீர்ந்து விடுகிறது. அதே போல் அந்தியூர் பகுதியில் கடந்த மாதம் ஒரு கட்டு துளசி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.30 வரை விற்கப்பட்டு வரு கிறது.

    அதே போல் அந்தியூர் பகுதியில் 1 முழம் துளசி முன்பு ரூ.10-க்கு விற்க ப்பட்டது. ஆனால் தற் போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப் படுகிறது.கடந்த மாதம் வரை ரூ.50-க்கு ஒரு பை நிறைய வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது தேவை அதிரிப்பு மற்றும் விலை ஏற்றாத்தால் குறைந்த அளவில் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக சிறு வியாபாரிகள் தெரி வித்தனர். ஆனால் துளசி விலை ஏற்றம் ஏற்பட்டாலும் பக்தர்கள் பலர் தங்கள் தேவைக்கேற்ப அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் வரும் நாட்களிலும் துளசி தேவை அதிகரித்து உள்ளதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். தொடர்ந்து துளசி விற்ப னை அதிகரித்து உள்ளது. இதனால் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும்.
    • துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது.

    துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும். துள+சி எனப் பிரித்து ஒப்பில்லாத செடி என இதனைக் கூறுவர். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசியைத்தான் பிரசாதமாக வழங்குகிறார்கள். செம்புப் பாத்திரத்தில் நல்ல சுத்தமான நீரை ஊற்றி அதில் துளசியை இட்டு வைத்திருப்பார்கள். இதைத்தான் தீர்த்தமாக வழங்குவார்கள். துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது. இதனால் மனம்கூட நல்ல தூய்மை பெறும்.

    துளசியை கார்த்திகை பவுர்ணமியில் பூஜிக்க எல்லா சித்திகளும் ஏற்படும். எப்போதும் தர்மம் செய்யும்போது ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. பொருளைவிட துளசி மேன்மையானதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்றே கூறுவர்.

    துளசி தீர்த்தம் வயிறை சுத்திகரித்து ரணம் ஏற்பட வழி செய்யும். மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு துளசித் தீர்த்தம் கொடுக்க, விஷ்ணு லோகம் போக வாய்ப்பு கிடைக்கும் என்பர். துளசிக்கு சமஸ்கிருதத்தில் 'பிருந்தா' எனப்பெயர். காடு போல் துளசி வளர்ந்திருக்கும் தலத்திற்கு பிருந்தாவனம் எனப்பெயர். இதனால்தான் துளசிக் காடாகிய பிருந்தாவனம் ராமருக்குரிய விருப்பமான தலமானது.

    பூஜைக்குப் பூக்களை அர்ப்பணிக்கும் போது அன்று பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. இதனால் பழைய பூ, புதிய பூ என்ற வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பூஜைக்குரிய துளசியில் இம்மாதிரியான நிலைகள் இல்லை. எப்போதும் புதிய நிலையைக் கொண்டது துளசி. எனவே பூஜைக்கு எப்போதும் உகந்ததாகத் துளசி கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிக, மிக நல்லது.

    பெண்கள் சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை முக்கியமாகும். வீட்டில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி, காலை, மாலை பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வணங்க வேண்டும். துளசி மாடத்தை பூஜிக்க வேறு துளசியில் இருந்தே தழைகள் பறிக்க வேண்டும். கோவில்களில் துளசியைப் பிரசாதமாகக் கொடுத்தால் ஒரு தழையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். "யார் துளசி பத்திரம் கொண்டு வருகிறானோ அவனுடன் நானும் ஓடி வருகிறேன்" என்றார் பகவான்.

    துளசிச் செடிகள் அதிகமாக இருக்கின்ற வீடு மிக புனிதம் உடையதாவதால் யமகிங்கரர்கள் அங்கு வர மாட்டார்கள். நர்மதை நதியின் தரிசனம், கங்கையில் குளியல் துளசி தள ஸ்பரிசம் இம்மூன்றும் துளசிக்கு சமமானவை.

    திருமணத் தடைகள் ஏற்பட்டு மன அமைதி இழப்போர், மன அமைதியற்றவர்கள், செல்வம் நிறைய அளவில் இருந்தும் நற்பணிகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், நல்ல எண்ணங்கள் கைகூட வேண்டுமென்று முயலுவோர், சமய பேதம் சிறிதுமின்றித் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி தூய ஆடை அணிந்து, தூய மனத்தினராய், தொட்டாற் சிணுங்கியையும் துளசியையும் ஒன்றாக வைத்து வளர்த்து வரும் தொட்டியைக் கொண்டு வந்து அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும், கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும், பழம் ஏதேனும் வைத்து வழிபட வேண்டும். இவ்விதமாக வழிபடும்போது இருபத்தியொருமுறை அந்தத் தொட்டியைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் இவ்விதம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நாலாவது வார இறுதியில் நல்ல பலன்களைப் பெற்று சிறப்படையலாம்.

    • கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
    • ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.

    கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமை யாக்கிக்கொள்ள நினைத்தாள்.

    இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாக வில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.

    அப்போது தராசு சமமாகியது. கண்ணன், புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந் திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மையான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

    • வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.
    • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    துளசி தீர்த்தம் 400-க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. துளசியில் உடனடி பலன் பெறும் சில நோய்கள் விவரம் வருமாறு:

    1. உண்ட விஷத்தை முறிக்க உதவுகிறது.

    2. விஷஜுரம் குணமாகும்.

    3. ஜன்னிவாத ஜுரம் குணமாக உதவுகிறது.

    4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.

    5. காது குத்து வலி குணமாக உதவுகிறது.

    6. காது வலி குணமாகும்.

    7. தலைசுற்று குணமாக உதவுகிறது.

    8. பிரசவ வலி குறைய உதவுகிறது.

    9. அம்மை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

    10. சிறுநீரக துவார வலி குணமாக உதவுகிறது

    11. வண்டு கடி குணமாகும்.

    12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக உதவுகிறது

    13. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    14. தோல் சம்பந்தமான நோய் குணமாக உதவுகிறது

    15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற உதவுகிறது

    16. அஜீரணம் குணமாகும்.

    17. கெட்ட ரத்தம் சுத்தமாக உதவுகிறது

    18. குஷ்ட நோய் குணமாகும்.

    19. குளிர்காய்ச்சல் குணமாகும்.

    20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக உதவுகிறது

    21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க உதவுகிறது.

    22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க உதவுகிறது.

    23. வலிப்பு குணமாகும்

    24. ஜலதோஷம் குணமாகும்

    25. ஜீரண சக்தி உண்டாக உதவுகிறது

    26. தாதுவைக் கட்ட உதவுகிறது

    27. சொப்பன ஸ்கலிதம் குணமாக உதவுகிறது

    28. இடிதாங்கியாகப் பயன்பட உதவுகிறது

    29. தேள்கொட்டு குணமாக உதவுகிறது

    30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக உதவுகிறது

    31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற உதவுகிறது

    32. வாதரோகம் குணமாக உதவுகிறது

    33. காய்ச்சலின் போது தாகம் தணிய உதவுகிறது

    34. பித்தம் குணமாகும்.

    35. குழந்தைகளுக்கு வாந்தியை நிறுத்த உதவுகிறது

    36. குழந்தைகள் வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுகிறது

    37. சகல விதமான வாய்வுகளும் குணமாக உதவுகிறது

    38. மாலைக்கண் குணமாகும்

    39. எலிக்கடி விஷம் நீங்க உதவுகிறது

    40. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த உதவுகிறது

    41. வாந்தியை நிறுத்த உதவுகிறது

    42. தனுர்வாதம் குணமாகும்

    43. வாதவீக்கம் குணமாகும்

    44. மலேரியா காய்ச்சல் குணமாக உதவுகிறது

    45. வாயுப் பிடிப்பு குணமாக உதவுகிறது

    46. இருமல் குணமாகும்.

    47. இன்புளூயன்சா காய்ச்சல் குணமாகும்.

    48. காய்ச்சலால் ஏற்படும் வாந்தியை நிறுத்த உதவுகிறது

    59. இளைப்பு குணமாகும்

    50. பற்று, படர்தாமரை குணமாக உதவுகிறது

    51. சிரங்கு குணமாக உதவுகிறது

    52. கோழை, கபக்கட்டு நீங்க துளசியை பயன்படுத்தலாம்.

    • ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
    • நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

    கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

    இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    • துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
    • துளசி ஃபேசியல் செய்தால் முகப்பருக்கள், தழும்புகள் மறையும்.

    துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.

    எண்ணெய்ப்பசை நீங்க:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை  முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

    முகச்சுருக்கம் மறைய:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக்கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறைந்து இளமை அதிகரிக்கும்.

    முகம் பொலிவு பெற:

    சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும், அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து ஃபேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

    முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:

    சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

    முகத்தில் உள்ள வறட்சி நீங்க:

    2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். ௧௫ நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.

    சருமம் புத்துணர்ச்சி பெற:

    சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும், இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
    துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தமாகும். துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள + சி என்பார்கள். இதற்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள்.

    துளசிக்கு ‘திருத்துழாய்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு. துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.

    மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
    இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.

    அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார்.
    தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.

    அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?
    ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவு-மே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.

    எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம்.

    வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும். பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும். பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம். அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந்தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.

    அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும். எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.

    துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும். அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங் களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும். துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது. துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும். துளசிச் செடியில் பழையது, புதியது என்ற நிலை எதையும் பார்க்க முடியாது. ஆகையால் நாம் பறிக்கும் ஒவ்வொரு துளசியும் பூஜைக்கு உகந்ததாகும்.

    ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது. உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.

    எப்போதும் தேவைக்கு ஏற்ப துளசி எடுப்பது நல்லது. விஷ்ணு பூஜை, பிரதிஷ்டை, தானம், விரதம் மற்றும் பித்ருகாரியங்களுக்கு துளசியை அவசியம் பயன்படுத்த வேண்டும். துளசி கலந்த தண்ணீரில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டால் விஷ்ணு லோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

    ஹோமத்தில் துளசி குச்சிகளை போட்டு வழிபட்டால் நினைத்தது நடக்கும். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர். 12 ஆதித்தியர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள் மற்றும் அக்னி தேவர்கள் வாசம் செய்கின்றனர். துளசி இலை பட்ட தண்ணீர் கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது.

    துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார். அது போல மற்ற தேவர்களும் பூஜிக்கிறார்கள். எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.

    துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.

    வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு. எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.

    அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும். துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.
    திருமகளான லட்சுமி தேவியின் அம்சம் கொண்ட செடி துளசி செடியாகும். இந்த தெய்வீக துளசி செடியை வணங்கி வருபவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
    யன்மூல ஸர்வ தீர்த்தாளி யன் மத்யே ஸர்வ தேவதா
    யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தம் நமாம்யஹம்
    ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி
    ஸர்வ தேவமயே தேவி சௌமாங்கல்யம் ப்ரயச்சமே

    உங்கள் வீட்டில் துளசி மாடத்தில் இருக்கும் துளசி செடி உள்ள இடத்தை நீரால் கழுவி, அரிசி மாவு கோலமிட்டு, துளசிச் செடிக்கு நீரூற்றி, துளசி செடியின் இலைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து, விளக்கேற்றி மேலே இருக்கும் துளசி ஸ்லோகத்தை 18 முறைகள் துதிப்பதால் உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். திருமணமான பெண்களின் மாங்கல்ய பலம் நீடிக்கும். மந்திரம் துதித்து முடித்ததும் முடிவில் துளசி செடியின் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு துளசி செடியை வணங்க வேண்டும்.
    வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள்.
    வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள்.

    துளசியை வழிபட்டால் துயரங்கள் தீரும், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    துளசி இலைகளைச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும். துளசியில் மகிமை ஏராளம் உள்ளது.


    மருத்துவத்திற்கு பயன்படும் துளசி இலை சரும பராமரிப்பு, பொடுகு பிரச்சனைகள், இளநரையை குணப்படுத்தும். துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
    துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கும் உதவுகிறது.

    * ஆரஞ்ச் தோல் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, முக பொலிவை தந்து முகப்பருக்களை நீக்கும். மேலும் துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை குறைக்க வல்லது.

    * துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள் விரைவில் குணமாகும்.



    * 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். அதனுடன் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன் இருக்கும்.

    * 15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு, அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் கலந்து தலைக்கு தடவுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு தலையை லேசான சூடான நீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம்.

    * 10 துளசி இலையை அரைத்து கொண்டு, அவற்றுடன் முட்டை வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். பிறகு இவை இரண்டையும் நன்றாக அடித்து கொண்டு, முகத்தில் தடவவும். இது முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, பொலிவு பெற செய்யும். மேலும் தோலை இறுக செய்யும்.

    * தூசுகள், அழுக்குகள் தலையில் சேர்வதால் அது பொடுகாக மாறி விடுகிறது. இதனை சரி செய்ய துளசி எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொண்டு தலையின் அடி வேரில் தடவி தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சினை குணமாகும்.
    தினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். கண்ணன் கைததலம் பற்றிய தெய்வப் பெண்ணே துளசிச் செடி வடிவில் நமக்குக் காட்சியளிக்கிறாள். பக்தி வெள்ளம் பெருகிப்பாய்வதற்கு வழிசெய்யும் திவ்ய நிகழ்ச்சிதான் கண்ணனை துளசி மணந்து கொள்ளும் சுபதினம். தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய பன்னிரண்டு நாட்கள் துளசி திருமணத்தை விமரிசையாக நடத்தும் வழக்கம் முக்கியமாக ஆந்திரா கர்நாடகப்பகுதியில் இருந்து வருகிறது.  

    துளசி திருமண விரத வைபவத்தைப் பார்க்க பித்ருக்களும் கூட வந்து கூடி விடுகிறார்களாம். எனவே துளசி திருமணம் நடைபெறும்போது, ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் விளக்கேற்றி வைத்து, "இதோ இந்த வீடுதான் உங்கள் சந்ததியார் வாழும் வீடு' என்று அந்தந்த வீட்டாரும் தங்கள் முன்னோருக்கு அடையாளம் காட்டுகிறார்கள். துளசி திருமணத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் வீட்டு பிள்ளைகளுடன் வந்து ஒரே கூரையின் கீழ் கூடி விடுகிறார்கள்.

    நடுக்கூடத்தில் திருமணப்பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமர்த்துகிறார்கள். மாலைப்பொழுதில் பூஜை அறையிலிருந்து சாளிக்கிராம வடிவில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணனைப் பீடத்தோடு தூக்கி வந்து திருமணப்பந்தலின் கீழ் துளசி மாடத்தின் அருகே வைக்கிறார்கள். பூஜை அறையில் சாளிக்கிராமத்தை எடுப்பதற்கு முன் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தனியாக ஒரு பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு திருமணப்பந்தலின் கீழ் சாளிக்கிராமத்துக்கும் துளசிக்கும் அர்க்கியம் விட்டு பூஜை செய்து, திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். பூஜைக்கு இடையிடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறுகின்றன. வயது வித்தியாசமின்றி ஆண்கள் அனைவரும் கையில் கிண்ணுரமும், சேகண்டியும் வைத்துக் கொண்டு ஒலியெழுப்பியவாறு நாமசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

    திருமணம் நடந்தேறியதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சங்கீர்த்தனம் புரிந்தவாறு திருமணப் பந்தலை வலம் வரத் தொடங்குகிறார்கள். நாம சங்கீர்த்தனம் தொடரத் தொடர பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துவிடுகிறது. வயது, அந்தஸ்து முதலான பிரமைகள் யாவும் நீங்கி விடுகின்றன. கண்ணனும் துளசியும் மணமக்களாய் கொலு வீற்றிருக்கும் திவ்ய தரிசனமே பிரக்ஞையில் நிரந்தரமாய்த் தங்குகிறது.

    அந்தப் பேரானந்தக் களிப்பில் கால்கள் தாமாகவே நர்த்தனமாடத் தொடங்கிவிடுகின்றன. கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருக உருகப் பாடிக் கொண்டே அனைவரும் நடனமாடுகிறார்கள். நீண்ட நேரம் நீடிக்கும் இந்தப் பரவசநிலை சிறுகச் சிறுகத்தான் தணிகிறது. அதன்பிறகு சாளக்கிராமத்தைத் திரும்பவும் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று அமர்த்துவதோடு துளசி திருமண வைபவம் நிறைவடைகிறது.
    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும் கொடுக்கிறார்கள்.
    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும்  கொடுக்கிறார்கள்.

    பெருமாளுக்கு பூஜை நடத்தப்படும் போது துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகர் போடும் துளசி இலை பெருமாளின் திருவடியில் விழும். அந்த  இலையை நாம் பிரசாதமாக வெறும்போது, பெருமாலின் அனுக்கிரகம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

    பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதை வைத்து, அதில் துலசி இலை கலந்து துலசி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் புண்ணிய நதி அல்லது அந்தந்த கோவில் தீர்த்தங்களையும் கலந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்.

    துளசி தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்க்கப்படுவதுண்டு. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது.

    வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

    ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில்  திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×