search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலவேம்பு"

    • வீடு, வீடாக சென்று வழங்கினர்
    • தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு)முத்து உத்தரவின் பேரில் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அரங்கநாதன் தலைமையில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கினர்.

    அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல் பணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின் படி, சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுவர்களில் போஸ்டர்களை கிழிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, தினேஷ் குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×