search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plant"

    • பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.

    சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதனால் வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
    • அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதம் முதல் 33 சதவீதமாக உயர்த்த முடிவு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 12.58 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

    பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்துப் பேசியதாவது: முதல்வரின் சிறப்புத் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

    அதன்படி, வனப் பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப் பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவ சாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது, தனியார் பங்க ளிப்போடு வளர்ந்து வரும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

    அரசு, பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை ஒழுங்குபடுத்தவும், பொது நிலங்கள், அலுவலகங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கு வனத்துறை சார்பில் 10,42,538 மரக்கன்றுகள், மாநகராட்சி சார்பில் 50,000 மரக்கன்றுகள், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 75,462 மரக்கன்றுகள், தன்னார்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகள்,தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகள் என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்துக்கான இலக்கை விரைவாக எய்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது. மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விளக்கக் காட்சி திரையிடப்பட்டது.

    இதில், மாவட்ட வன அலுவலர் நா.ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி.பிரியங்கா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
    • சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. காயிதே மில்லத் நகரில் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் அமைக்கப்படவுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி மண்டல த்தலைவர்கள் பத்மநாபன் (4-ம்மண்டலம்), கோவிந்தசாமி (3-ம்மண்டலம்) ,கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), தலைமைப்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • மரக்கன்று நடும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
    • மரம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், தும்ம னட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுவீடு கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத் தார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்ற கலைஞரின் சொல் லிற்கிணங்க, தமிழக முதல்-அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார். இதனால் மாநில நெடுஞ்சா லைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நாளான அன்று தமிழக முதல்-அமைச்சர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணியானது ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்திகிரி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மகாகனி மரக்கன்றுகள், நாவல் மரக்கன்றுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வளரக்கூடிய மரக்கன்றுகள் என மொத்தம் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் மரங்களை வளர்ப்பதின் மூலம் தேவையான காற்று கிடைக்கிறது. காற்று கிடைப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. மரம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும். ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொரு வரும் மரத்தினை வளர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜூ, உதவி பொறியாளர் ஸ்டாலின், ஊட்டி வட்டாட்சியர் ராஜ சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
    • நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஊராட்சி யில் வேளாண்மைத்துறை யின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பள வில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்பொழுது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயி களுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தேவையான தென்னங் கன்றுகளை வாங்கி பயன் பெற வேண்டும்.

    தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவுசெய்து ''பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படை யில் தற்போது வேளாண்மை துறையின் மூலம் நாற்றங் கால் பண்ணைகளில் மரக் கன்றுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 10 லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன.

    நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி யாளர்கள் மூலம் பராமரித்தல், அதேபோல் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பசுமை ராமநாதபுரம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரசுவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாக ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும்.
    • நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும்.

    பின்னர் இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்படும். இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்லூர் பகுதியில் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அப்போது தாகூர் நகர் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் 1.125 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அறிவு (வயது 27) என்பது தெரியவந்தது.

    அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. தினேஷ்குமார் கண்மாய் கரையில் உட்கார்ந்து கஞ்சா புகைப்பது வழக்கம். அங்கு ஒரு சில விதைகள் முளைத்தன. அதில் ஒரு செடி மட்டும் பெரிதாக வளர்ந்துள்ளது.

    அந்த செடியை அவர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கஞ்சாவுடன் தினேஷ் குமாரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    • கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.
    • இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 41). இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

    • கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள் போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன.
    • வீடுகளின் மேற்கூரைகளிலும், தென்னை மரங்களிலும் வசிக்க தன் வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டது.

    திருவோணம்:

    ஒருகாலத்தில் மயில்களை மலைப்பகுதிகளில் அல்லது வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்தில்தான் காணமுடியும். எங்காவது கோயில்களில் அரிதாகக் காணலாம். ஆனால், தற்போது கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள்போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.

    வயல்களில் தாவரங்களை உண்பதாலும் சோளம் கடலை போன்ற தாவரங்களை தன் கால்களால் தாவரத்தை சாய்த்து உண்பதாலும் மற்றும் அறுவடை செய்த தாவரங்களை கூட்டம் கூட்டமாக வந்து உண்பதாலும் வேளாண் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அதனை துரத்தி விட்டாலும் மீண்டும் மீண்டும் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    குன்று காடுகளில் பழக்கப்பட்ட மயில்கள் தன்னை மாற்றிக் கொண்டு வயல்வெளிகளில் வாழ பழகி விட்டது.

    வீடுகளின் மேல் கூரைகளிலும் கட்டிடங்களிலும் தென்ன மரங்களிலும் வசிக்க தன் வாழ்வை மாற்றி தகவமைத்துக்கொண்டது.

    ஊர்களின் ஓரங்களில் உள்ள குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் அவற்றை சுற்றி அதிக மரங்களை வளர்ப்பதால் மற்றும் சிறு சிறு காடுகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி சமவெளி பகுதிகளில் காடுகளை வளர்ப்பதாலும் மயில்கள் ஊர்களில் உள்ளே வருவதை நம்மால் தவிர்க்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை சரிந்து வந்தது. சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமலும், பறிப்புக்கூலிக்கும் வண்டி வாடகைக்கு ம்கூட கட்டுப்படியாகாத விலை கிடைத்து வருவதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை செடியிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: -1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். ஆனால் தற்போது தற்போது 1 கிலோ தக்காளி விவசாயிகளிடம் இருந்து ரூ.7க்கு வாங்கப்படுகிறது. டிப்பர் (14 கிலோ) ரூ.100க்கு கொள்முதலாகிறது. இந்த சூழ்நிலையில் தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளி விற்பனை விலை மிகவும் சரிந்து பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது.

    1 டிப்பர் தக்காளிக்கு அறுவடைக் கூலி ரூ. 20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ. 30 என ரூ .50 க்கு மேல் செலவாகிறது .இந்த நிலையில்1 டிப்பர் ரூ.90, ரூ.100க்கு தக்காளி விற்றால் எப்படி கட்டுபடியாகும். எனவே அரசு தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின் போது உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகிறது. எனவே ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தக்காளி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.
    • அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    அவிநாசி :

    குறு, சிறு தொழில் தொழிற்பேட்டை சங்கம், அவிநாசி ரோட்டரி இணைந்து வேட்டுவபாளையம் ஊராட்சியில் உள்ள சிறுதொழில் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.இதில், அரிய வகை மரங்களான பாவட்டம், மலை பூவரசு, கள்ளிச்சி, சரக்கொன்றை, வாகை, வெப்பாலை, இலந்தை உள்ளிட்ட 80 வகைகளில் 800 மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் அரியவகை மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடவு செய்யப்பட்டது.

    இப்பகுதியில் மழைப்பொழிவு, நீர் வளம் குறைவு என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வசதியாக, சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு 'போர்வெல்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகளால் மரக்கன்று சேதமாவதை தவிர்க்க கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் கடந்த 2 நாட்களாக அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சி.ஐ.டி.யு. சார்பில் நிர்வாகிகள் ரசல், பேச்சுமுத்து, அப்பாத்துரை, கணபதிசுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கவும், ஓய்வூதியம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் அது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    ×