என் மலர்

    நீங்கள் தேடியது "project"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்
    • ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை வகித்தாா். அவிநாசி தாசில்தார் மோகனன் வரவேற்றாா்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    அவிநாசி-வட்டளபதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைத்து விற்பனை செய்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வெங்கலப்பாளையத்தில் கல்குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறது.

    அவிநாசி வட்டத்தில் மான், மயில்கள் அதிக அளவில் இருப்பதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும். ஊத்துக்குளி புன்செய்தளவாய்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்ததில், ஆடுகள் உயிரிழந்தன. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வஞ்சிபாளையம் குட்டைக்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக பட்டா மாறுதல் செய்யும் பணிகளை வருவாய்த்துறை தொடங்க வேண்டும். ஊராட்சிகளுக்கான 4-வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி 2-வது வாா்டில், சங்கமாங்குளத்துக்கு செல்லும் மடத்துப்பாளையம் சாலை பிரதான வாய்க்காலில் சாக்கடை நீா் கலப்பதால், குளத்தின் நீராதாரம் பாதிக்கப்படுகிறது.

    ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. அவரை மாற்ற வேண்டும் என்றனா்.கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தி விரைவில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தெரிவித்தாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • செம்பனார்கோயில்- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை, மரக்கன்றுகள் நடுதல், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு செம்பனா ர்கோயில் - தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சா லையில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல் பணி.
    • ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்கையன் தோப்பு, அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல், சம்போடை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    இந்த 100 நாள் திட்டப்பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார், பொதுச்செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், மாநில மீனவரணி தலைவர் பழனி, வீராம்பட்டினம் அன்பரசன், ஆர்.கே.நகர் கிளை தலைவர் தியாகராஜன், சீனிவாசன் நகர் கிளை தலைவர் வசந்தி முருகவேல் மற்றும் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

    உறுதிமொழி

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,772 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சுகாதாரமான சூழல்

    அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம்

    செலுத்திட வேண்டும். பள்ளி வயது பருவத்திலேயே தன் சுத்தம், உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றிட வழிவகுக்கும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களும் கூட்டு முயற்சியுடன் ஒவ்வொரு பள்ளியையும் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழச் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் கலெக்டர் முன்னிலையில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன், தலைமை ஆசிரியை அனந்த லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம்.
    • இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடை பெற்ற ஒரு திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அஞ்சா நெஞ்சன் அழகிரி பிறந்த இந்த பட்டுக்கோட்டையில் நடைபெறுகின்ற இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது மகனுக்கு அழகிரி பெயரை சூட்டியுள்ளது மூலம் இந்தப் பட்டுக்கோட்டைக்கும் நமது கலைஞருக்கும் உள்ள நெருக்கம் தங்களுக்கு புரியும்.மணமக்கள் இருவரும் மருத்துவர்கள் அது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஏனென்றால் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராகும் கனவை தான் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வந்து எப்படி எல்லாம் பாழாக்குகிறது என்பது உங்களுக்கு நன்றி தெரியும்.

    5 நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம் .

    தி.மு.க. ஆட்சி அமைந்து 2 வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது மிக முக்கியமான திட்டம் 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திருக்குவளையில் ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

    அரசு பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள், 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கியதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    இத்திட்டத்திற்காக மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர்.

    இப்படி ஒரு சிறந்த திட்டத்தை நமது தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

    இப்படிப்பட்ட திராவிட மாநில அரசின் சாதனைகளை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
    • மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின்குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு 4-வது குடிநீர் திட்டம் மூலம்

    24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

    முதல்கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

    இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது 60 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகும். வார்டு வாரியாக பகிர்மான குழாய்கள் இணைப்பு பணிகள் முடிந்து மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வார்டுகளில் மட்டும் முழுமையான அளவில் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 4-வது குடிநீர் திட்டத்தில் 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி 20,30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் அளவு குறைந்தாலும் உடனடியாக நிரப்பும் பணிகள், குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீரின் அளவை கண்டறியும் ஸ்கேடா கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. 20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும்.

    அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நாளை (செவ்வா ய்க்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விவரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை எண்.120 தொலைபேசி எண். 0427-2452202, வாட்ஸ் அப் எண் 88254 73639 ஆகும்.

    மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரை சேலம் - 0427-2452121, சேலம் மேற்கு- 0427-2335611, சேலம் தெற்கு -0427-2271600, ஏற்காடு- 04281-222267, வாழப்பாடி- 04292-223000, பெத்தநாயக்கன் பாளையம் - 04282-221704, ஆத்தூர் - 04282-240704, தலைவாசல் -04282-290907, கெங்கவல்லி - 04282-232300, ஓமலூர் - 04290-220224, காடையாம்பட்டி - 04290-243569, மேட்டூர் - 04298-244050, எடப்பாடி- 04283-222227 மற்றும் சங்ககிரி - 04283-240545 ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.

    மேலும், தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மெட்ரோ ரெயில் பணிகள் விரிவான திட்ட அறிக்கை தொடர்பான ஆய்வு தொடங்கியது.
    • மாசி வீதிகளை அதிகாரி சித்திக் பார்வையிட்டார்.

    மதுரை

    ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் மதுரை மாநகரில் ரூ. 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    மதுரையில் ஒத்தக்கடை, திருமங்கலத்தை இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு, திருமங்க லத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுரை கல்லூரி, காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளை யம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்டு வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை யை தயாரிப்ப தற்கான ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது.

    அந்த அறிக்கை ஜூலை 15-ந்தேதி அரசிடம் சமர்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவ னத்தை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவ னத்திடம் வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் மேலாண் இயக்குனர் சித்திக் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள நான்கு மாசி வீதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஏற்கனவே திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோத னையும், போக்குவரத்து சோதனையும் நடத்தப் பட்டுள்ளது.

    மேலும் நில எடுப்பு நில அளவை உள்ளிட்ட பணி களும் நடைபெற்று உள்ளது. குறிப்பாக அரசு நிலங்கள், பணிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    மதுரை நகரின் மைய பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டமா னது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp