என் மலர்
நீங்கள் தேடியது "கழிவுகள்"
- அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
- போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
களியக்காவிளை:
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மீன், கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து சாலையோரம் கொட்டிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் பளுகல் வழியாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கழிவுகளை ஏற்றி வருவதாக புகார்கள் உள்ளன. அதனை கட்டுபடுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டுள்ளார்.
அதன் பேரில் அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி டெம்போ வேகமாக வந்தது. சந்தேகமடைந்த போலீசார் அதனை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது என தெரிய வந்தது. வாகனம் மீதும் வாகனத்தின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த சமர்க்கான் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கைதான டிரைவர் முகமது, குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.
களியக்காவிளை சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் ஆன்றோகிவின் தலைமையிலான போலீசார் வாகன சோதனையின் போது வேகமாக வந்த ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மாட்டு கொழுப்புகள், மாட்டு எலும்புகள் மற்றும் மாட்டு இறைச்சி கழிவுகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஓட்டிச் சென்ற தென்காசி ராஜாநகர் பகுதியை சேர்ந்த சுப்பையா(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
- விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.
கடவுளின் தேசமாக கூறப்படும் கேரளா மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் காலங்காலமாக மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் மலைப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் விவகாரங்களில் கேரள அரசு அதிகாரிகளும் மிகக் கடுமையாக பின்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்றில்லாமல், கேரளாவில் லஞ்சப் புழக்கம் மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் காசு கொடுத்தாலும் விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழவுகள் அதன் அண்டை மாநிலங்களாக இருக்கும் தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் பலமுறை இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தும், புகார்களை தெரிவித்தும் இதுநாள் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
கேரளா போன்றில்லாமல் தமிழ் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் இதுபோன்ற வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கலாம் என்ற நிலையை, கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிரமாங்களில் கேரள கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக அறப்போர் இயக்கமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவுகளில் தமிழகத்தில் கொட்டப்பட்டு வரும் கேரள கழிவுகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. பலரும் இதனை அதிகம் பகிரத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவல்துறை, சுங்கச் சாவடி அதிகாரிகள் அனுமதியின்றி தமிழ்நாடு எல்லைக்குள் கேரள கனரக வாகனங்கள் வரமுடியாது. அதையும் மீறி வாகனங்கள் வருகின்றன, கழிவுகள் கொட்டப்படுகின்றன என்றால் தமிழ்நாடு அதிகாரிகள் உதவியின்றி இது நடைபெற வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. வாகனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை அனுமதிப்பதால்தான் தமிழ்நாட்டில் கேரளா கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளா பதிவெண் கொண்ட கனரக வாகனங்களால் தமிழகம் வரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் தென் மாவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இது தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது செவி சாய்ப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்..!
- வீடுகளில் உள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருவதால்பொதுமக்கள் அவதி
- சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு
பீளமேடு,
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தால், நகர் மேம்பாட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட நகரம் தான் கோவை காந்திமாநகர். இங்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இங்கு கோவை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளில் இரு ந்து வரும் கழிவு நீர்கள் காந்தி மாநகர் பகுதியில் கிழக்கு புறமாக அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு சிறு ஓடைகளில் விடப்படுவது வாடிக்கை. இதனால் அந்தப் பகுதியில் எந்தவித கழிவுநீர் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது.
ஆனால் கடந்த 3 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் மோட்டார் செயல்படாத தால் அருகில் உள்ள பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது.
இதனால் கிழக்குபுறம் பல வீடுகளில் உ ள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருகிறது. குடியிருப்பு வாசிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிக்கு ள்ளாகிறார்கள்.
குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. அதற்கு மாறாக அடைப்பு ஏற்பட்டதாக தகவல் கொடுத்தால், கழிவு நீர் வாகனம் வந்து சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து வருகின்றனர். இது தற்காலிக தீர்வாகவே அமைகிறது.
இதுகுறித்து காந்தி மாநகரில் வசிப்பவர்கள் கூறியதாவது:-
கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தேக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுவதில்லை. சுத்திகரிப்பதற்கான மின் மோட்டார் இன்று வரை இயங்குவதுமில்லை. அதற்கு தனியாக மாநக ராட்சி ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை.
இங்கு தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் திடீரென குடியிருப்பு பகுதியில் புகுந்து அடைப்புகள் ஏற்படுகிறது. இதனால் பெரும் அவதியடைகிறோம்.
கழிவு நீரை அகற்றுவதற்கு சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத னால் பெருமளவில் குடியிருப்பு வாசிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர்.
இந்த பாதாள சாக்கடை கழிவு நீரை உடனுக்குடன் மறுசுழற்சி செய்து முறைப்படி அகற்றினால் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். அதற்கு இந்தப் பகுதி கவுன்சிலர், மாநகராட்சி மேயர், கோவை மாநகர ஆணையாளர் உட்பட அனைவரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
- விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து இறைச்சி, மீன், மருத்துவ கழிவு உள்பட பல கழிவு பொருட்களை லாரியில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள்.
இதை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதும் கழிவுகளை தொடர்ந்து கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுற்று வட்டார பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகளை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக் டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள், பொதுகால்வாயில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
- கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழி வுகள் சேகரம் செய்யப்ப டுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திர த்தில் அரைத்து தொட்டி களில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவ ற்றை குறைந்த விலைக்கு விவசாயி களுக்கு வழங்க ப்படுகிறது. 3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொ ண்டு இயந்திரங்கள் இயக்க ப்படுகிறது. மக்காத மறுசுழ ற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகி ன்றனர்.
மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மா ற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்படுகிறது. தற்போது 12 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3 ஆயிரத்து 250 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.
- குப்பை கொட்டும் நிலையமாக மாறிய வைகை தென்கரை பகுதி உள்ளது.
- கால்நடை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது காற்றில் பறக்கும் உத்தரவாகவே மாறிவிட்டது.
இதனை அதிகாரிகள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டு கண்டு–கொள்ளாததால் ஆறுகளும், குளங்களும் குப்பை கொட் டும் இடமாக மாறிவிட்டது.
அதிலும் சமீப காலமாக வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை யாருக்கும் தெரி–யாமல் இரவு, பகல் என்று பாராமல் ஆறுகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான சாக்கடைகளில் கலந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுத்து சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் பல–னில்லை.
இதற்கிடையே கோவில் மாநகரமான மதுரையிலும் இதுபோன்ற கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வரு–கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநா–தபுரம் ஆகிய 6 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமா–கவும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்ப–டுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஆற்றில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் கால் நடை வளர்ப்போர் ஏராள–மாக வசித்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளுக் கென்று தனியாக தங்களது சொந்த இடத்தில் கொட் டகை அமைத்து பராமரிக் காமல் சாலைகளில் சுற்றித் திரிய விட்டுள்ளனர்.
அவை இரவு, பகல் பாராமல் சாலைகளின் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை உண்டும், படுத்து உறங்கியும் போக்கு–வரத்துக்கு இடையூறு அளித்து வருகிறது. திடீ–ரென்று அந்த கால்நடைகள் மூர்க்கத்தனமாக சாலை–களில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்து–டனேயே அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது.
இவை அனைத்தையும் மீறி வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் மாடு–களை கட்டி வைத்து பராம–ரிக்கும் கால்நடை வளர்ப் போர் அதன் கழிவுகளை அப்பறப்படுத்தாமல் அங் ேகயே விட்டுச்செல்வ–தும், பல நேரங்களில் வைகை ஆற்றில் கொட்டி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. பல்வேறு வரலாற்று சிறப் புகளை கொண்ட வைகை ஆறு இன்று குப்பை கழிவு–களை கொட்டும் இடமாக மாறிவருவது பொது–மக் களை வெறுப்படைய செய் துள்ளது.
சித்திரை திருவிழா நடை–பெறும் காலங்களில் மட்டும் வைகை ஆற்றை போற்றி பாதுகாத்தால் போதாது, காலம் முழுக்க அதனை சுத்தமாகவும், சுகாதார–மாகவும் வைத்துக்ெகாள்ள முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே கால் நடை வளர்ப்போர் தென் கரை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கக்கூடாது என்றும், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தங்களுடைய செயல்பாடு–களை கால்நடை வளர்ப் போர் தொடர்ந்து வரு–கின்றனர். அதேபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் பறிமுதல் செய்து, அதனை வளர்ப்போ–ருக்கு அபராதம் விதிப்பதை–யும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண் டும் என்பதும் ஒட்டுமொத்த மதுரை மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
- குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
- சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவுபடி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றது,
உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
கடற்கரை மற்றும் கடற்க ரைக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கடற்க ரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது.
- ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
- கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.