search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disease spread"

    • விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை பிரெஞ்சுகாரன் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைக்காலங்களில் வாய்க்காலில் மழைநீர் செல்வது வழக்கம்.

    இப்போது இந்த வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. மேலும் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப் பட்டுள்ளது.

    அதிலிருந்த வரும் கழிவு நீரும் இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் திறந்த வெளியாக உள்ள கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக சரி செய்து அங்கு கழிவுநீர் தேங்கி நிற்காமல் வாய்க்காலில் தடை இன்றி செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.
    • கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சாலைத் தெரு ஸ்டேட் பாங்க் எதிரில் மின் வாரியத்தின் நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளன. இங்கு 1700 கே.வி உயரழுத்த மின்சாரம் இந்த மின் மாற்றிகள் வழியாக செல்கி றது.

    இந்த பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீர் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கழிவு நீரை அகற்றி சீரமைக்கப்படவில்லை.

    இந்தப் பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்வதால் பீஸ் போனால் கூட மின்வாரிய ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த டிரான்ஸ்பார்மர் பாதாள சாக்கடைக்குள் உள்ளதால் மின் விபத்து அச்சத்தில் பழுது ஏற்பட்டால் சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

    மேலும் சுற்றிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற் பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மட்டுமின்றி அந்தப்பகுதியில் பொது மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    மின் வாரிய உதவிப் பொறியாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

    பாதாள சாக்கடை கழிவு நீர் மேன் ஹோல் வழியாக வெளியேறி மின் மாற்றிப் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனால் டிரான்ஸ் பார்மரில் பழுது ஏற்பட் டால் கூட சீரமைக்க முடிவ தில்லை. மின் வாரிய ஊழியர்கள் அச்சப்படு கின்றனர். கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

    சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ×