search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadside"

    • மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற அவர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது.
    • அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டில் இருந்து மரக்காணம் வழியாக ஓமீப்பேருக்கு தடம் எண் 61-ல் மகளிருக்கான இலவச பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் இன்று காலை 10 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழ்புத்துப்பட்டிலிருந்து புறப்பட்டது. இந்த பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலப்பாக்கம் அருகே காலை 10.30 மணியளவில் வந்த போது, சாலையில் சென்ற வாகனங்களை மோதுவது போல சென்றது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் அலறினர். இதையடுத்து பெண் பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெண் பயணிகள் பஸ்சினை சாலையோரத்தில் நிறுத்த சொல்லி டிரைவரிடம் வலியுறுத்தினர்.

    சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதுவதை போல பஸ்சினை ஓட்டிய டிரைவர், ஒரு வழியாக சமாளித்து நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள், அலறியடித்து கீழே இறங்கினர். அப்போது கூனிமேட்டில் நடந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் பங்கேற்ற மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார், மரக்காணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர். உடனடியாக சாலையோரத்தில் இருந்த பஸ்சிற்குள் போலீசார் சென்றனர். அங்கிருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியதில், டிரைவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாரமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.
    • கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம், ஜூன்.25-

    விருத்தாசலத்தில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் பெருகி க்கொண்டே செல்கிறது. சாலையோரம் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி, விருத்தாசலம் துணை சூப்பிரண்டு ஆரோக்கி யராஜ் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் முருகேசன் கண்காணிப்பில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பாலக்கரை, கடைவீதி, விருத்தகிரீஸ்வரர் கோவில் மாடவீதிகள் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். விதிகளை மீறி சாலையோர கயிற்றுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் விஜய் (வயது 30).

    இவர் நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

    கந்தம்பட்டி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சூரமங்கலம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையில் வாரச்சந்தை, ரெயில் நிலையம், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.
    • சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திர ரோடு, கபூர் கான் வீதி, ராமசாமி நகர் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வாரச்சந்தை, ரெயில் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்டவையும் வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. இந்தநிலையில் ராஜேந்திரா சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டிகள் நிறுத்தி சில்லறை வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ராஜேந்திர சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தள்ளுவண்டிகளை நகர அமைப்பு ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அகற்றினர். இதனால் சீரான போக்குவரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இதே போன்று மற்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • சாலையோர பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கு தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. சாலையோரம் பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுத்து அசத்தி யுள்ளனர்.

    நீண்ட தூரம் மரமோ, நிழற்குடையோ இல்லாத பகுதிகளில் சாலை யோரம் நிற்கும் போலீசாருக்கு மடக்கும் தன்மை யுடன் கூடிய நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெடுப்பு சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ேபாலீசாருக்கு 250 பிரத்யேக சுருக்கி மடக்கும் குடை வாங்கப்பட்டுள்ளது. கவர்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 120 குடைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்றார்.

    • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

    சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
    • உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அ அருகே ராமநத்தத்தில் ராமநத்தம்-கண்டமத்தான் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் எதிரே சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் அருகில் உள்ள ராமநத்தம் நி போலீஸ் லையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நபர் குறித்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என முதல் கட்ட விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைஅருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் இவரது தங்கை குமாரி வசிப்பதாக தகவல் கிடைத்தது.

    இவர் கட்டம் போட்ட கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் பார்சல் உணவு, தண்ணீர் பாட்டில் இருந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது.
    • 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.

    இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.

    அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.

    சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    ×