search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shadow Road"

    • சாலையோர பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கு தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. சாலையோரம் பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுத்து அசத்தி யுள்ளனர்.

    நீண்ட தூரம் மரமோ, நிழற்குடையோ இல்லாத பகுதிகளில் சாலை யோரம் நிற்கும் போலீசாருக்கு மடக்கும் தன்மை யுடன் கூடிய நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் போலீசார் அசராமல் பணி செய்ய பயனுள்ளதாக அமைந்தது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெடுப்பு சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ேபாலீசாருக்கு 250 பிரத்யேக சுருக்கி மடக்கும் குடை வாங்கப்பட்டுள்ளது. கவர்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 120 குடைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்றார்.

    ×