search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "born baby"

    • தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை.
    • இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார்.

    ஜபல்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம், தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜாம்னி பாய், கடந்த 13-ந் தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    அதன்படி பெற்றோர், அந்த குழந்தையை அங்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி குழந்தை இறந்து விட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்து இருக்கிறது.

    தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை. இதையடுத்து குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து, பஸ்சில் எடுத்துச்சென்றுள்ளார்.

    இதை அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் உருக்கமுடன் கூறி உள்ளார்.

    ஆனால், இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "புதிதாக பிறந்துள்ள குழந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தொடங்கி உள்ளது. ஆனால் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்தபோதும், அதன் பெற்றோர் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். எனவே டிஸ்சார்ஜ் செய்த போது குழந்தை உயிருடன்தான் இருந்தது" என தெரிவித்தார்.

    • பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது.
    • 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும்.
    அன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன் சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறக்கத்தில் மூழ்கி கனவுகளில் மிதக்கத் தொடங்கி விடும். இவ்வாறு அடிக்கடி உறங்குவதால்,

    குழந்தையால் சரியாக பால் அருந்த முடியாது; இதன் விளைவு குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும். மேலும் தாய்க்கும் குழந்தை முழுமையாக பால் அருந்திய திருப்தி ஏற்படாது.

    எனவே, குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது ஏன் உறங்குகின்றன, அதற்கு என்ன காரணம் என்று தாய்மார்கள் அறிந்து, அதை நிவர்த்தி செய்ய முயற்சிப்பது அவசியம்.

    குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும். குழந்தையை எழுப்ப கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

    குழந்தையின் முதுகை மெதுவாக தட்டிக்கொடுத்து எழுப்ப முயலலாம்.

    குழந்தையின் ஆடைகளை நீக்கி விட்டு, வேற்று தேகத்துடன் இருக்க செய்தால், நீங்கள் ஆடைகளை களையும் பொழுதே குழந்தை முழித்து விடும்.

    குழந்தையின் உடல் உறுப்புகளில் மெதுவாக குசு சத்தம் வெளிப்படும் வகையில் ஊதி, குழந்தையை எழுப்பலாம்.

    குழந்தையின் கால் அல்லது கைகளில் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் மிருதுவாக கிச்சு கிச்சு காட்டி எழுப்பலாம்.

    குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடுவது போல், அதை சற்று தொந்தரவு செய்து, குழந்தையின் தூக்கத்தை துரத்தலாம்.

    குழந்தை பால் குடிக்கும் போது தூங்கி விட்டால், அதனை ஒரு மார்பகத்திலிருந்து மற்ற மார்பகத்திற்கு மாற்றி, அந்த முலைக்காம்பை பற்றிக்கொள்ள செய்ய முயற்சிக்கலாம்; இந்த முயற்சியின் பொழுது கண்டிப்பாக குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும்.

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த பதிப்பில் படித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் கொண்டு, குழந்தையின் செய்கைகளை கூர்ந்து கவனித்து, அவர்களின் ஆரோக்கியம் காக்க பாடுபட வேண்டும். 
    சேலத்தில் பிறந்த குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராணி (வயது 37). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு மேட்டூரில் கிராம உதவியாளர் பணிக்கு ராணி விண்ணப்பிக்க சென்ற போது புதுச்சாம்பள்ளி பகுதியை சேர்ந்த பாலு என்வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது தான் கப்பலில் வேலை பார்ப்பதாக பாலு கூறியதால் அதனை நம்பிய ராணி அவருடன் நெருங்கி பழகினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த மே மாதம் ராணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

    அதற்கு ராணியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமேஸ்வரத்தை சேர்ந்த பாலு என்ற டாக்டரிடம் ரூ. 50 ஆயிரம் வாங்கி விட்டு குழந்தையை கொடுத்தார் . இதற்கு சேலம் அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர் ஜெயா என்பவர் உதவினார்.

    இந்த நிலையில் குழந்தை தனக்கு வேண்டும் என்றும் அதனை மீட்டு தருமாறும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறினார். உடனே சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது மேச்சேரி பகுதியில் வைத்து குழந்தையை டாக்டரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

    மேலும் குழந்தையை வாங்கி சென்ற அந்த டாக்டரை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு குழந்தை இல்லாததால் அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி சென்றதாக கூறினார்.

    மேலும் ராணி விரும்பினால் அதனை அவரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் இன்று குழந்தையை ஒப்படைக்க மேச்சேரி வருவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் வருவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    டாக்டர் பாலுவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை இல்லாததால் வயிற்று பகுதியில் துணியை கட்டி தான் கர்ப்பமாக இருப்பதாக அவரது மனைவி ஏமாற்றி வந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பும் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தனது மனைவி குழந்தையை பெற்றதாக உறவினர்களிடம் கூறுவதற்காக சேலத்திற்கு வந்து இந்த குழந்தையை வாங்கி சென்றுள்ளார். தற்போது ராணி குழந்தையை கேட்பதால் என்ன செய்வதென்று டாக்டர் தம்பதியினர் பரிதவித்து வருகின்றனர்.

    மேலும் கப்பலில் வேலை பார்ப்பதாக கூறி ராணியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பாலு ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் 3 மனைவிகளும் பிரிந்து சென்றதால் 4-வதாக ராணியை திருமணம் செய்துள்ளார்.

    முதல் மனைவி ஈரோட்டிலும், 2-வது மனைவி கோபி செட்டி பாளையத்திலும், 3-வது மனைவி மேட்டூரிலும், 4-வதாக திருமணம் செய்த ராணி மேச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இதனால் மேலும் பல பெண்களை இது போல ஏமாற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
    மும்பையில் பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி 2 செ.மீட்டர் நீளத்திற்கு முறிந்து உடலுக்குள் சென்ற நிலையில் ஒரு மாதத்துக்கு பின் அகற்றப்பட்டுள்ளது.
    மும்பை:

    மும்பையில் உள்ள செம்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஜெய்ராஜ், ஆஸ்தா கெய்க் வாட் இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 19-வது நாளில் ஆஸ்பத்திரியில் வைத்து இடுப்பில் தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போட்ட இடத்தில் குழந்தையின் உடலில் வீக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து குழந்தை கடும் காய்ச்சலால் அவதியுற்றது. எனவே குழந்தையை உள்ளூர் டாக்டரிடம் பெற்றோர் கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர் குழந்தையின் உடலில் தடுப்பூசி போட்ட இடுப்பு பகுதியில் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் போன்றவை எடுத்து பார்த்தார். அப்போது எலும்புக்குள் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அதையடுத்து மும்பையில் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு இடுப்பு பகுதியில் நோய் தொற்று ஏற்பட்ட இடத்தில் ஆபரேசன் நடத்தப்பட்டது. அப்போது இடுப்பு எலும்பு சந்திப்பில் 2 செ.மீட்டர் நீள ஊசி முறிந்த நிலையில் உள்ளேயே தங்கியிருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கவனமாக 2 மணி நேரம் ஆபரேசன் செய்து ஊசியை உடலில் இருந்து அகற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளது.

    இதனால் தடுப்பூசி போட்ட ஆஸ்பத்திரி மீது குழந்தையின் பெற்றோர் ஜெய்ராஜ்- ஆஸ்தா கெய்க் வாட் கோபம் அடைந்தனர். ஆனால் அந்த ஆஸ்பத்திரி மீது வழக்கு போடவில்லை.
    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் – Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம்.

    அதிலும் 28 வாரங்களில் அதாவது 7 மாதங்களில் ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தை 1 கிலோவிற்கும் குறைவானதாகவே இருக்கும்.

    ஒருபெண் கர்ப்பம் தரித்த 2 அல்லது 3 மாதங்களிலேயே ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, குழந்தை பிறக்கும் உத்தேச தேதியை மகப்பேறு மருத்துவர்கள் கணிப்பார்கள்.

    அதாவது, மாதவிடாய் கடைசியாக எந்த தேதியில் ஏற்பட்டதோ அந்த நாளில் இருந்து 40 வாரங்கள் என்று கணக்கிடுவார்கள்.

    முழு அளவில் வளர்ச்சியடைந்து பிறக்கும் குழந்தைகள் குறைந்தது இரண்டரை கிலோ எடை இருத்தல் அவசியம். இந்த எடைக்குக் குறைவாக இருந்தாலே குறைமாதமாக எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில், முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளும் இரண்டரை கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறக்க நேரிடும். எனவே கருவுற்ற பெண்ணின் கடைசி மாதவிடாய் தேதி மூலமான கணக்கீடே குழந்தையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.



    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    நுரையீரல் மூலம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும். குறைமாத குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், ஆக்ஸிஜன் தெரபி தேவைப்படும். சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி அவசியமாகும்.

    குறைமாதத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு இதய நோயும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.

    ஒரு கிலோவிற்கும் குறைந்த எடையுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் இரத்தக்கசிவு இருக்கக்கூடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படலாம்.

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை தானாக உறிஞ்சி பருகும் வரை டியூப் மூலமாக பால் கொடுத்தல் வேண்டும்.

    வேறுசில குழந்தைகளுக்கு மாறுகண் போன்ற பார்வை ஏற்படலாம். ஆனால், குழந்தைகள் வளர, வளர அவை சரியாகி விடும்.

    இதேபோல் குறைமாதக் குழந்தைகள் வளர்ந்து வரும் போது, அந்தக் குழந்தைகளின் பாதிப்புகளும் பெரும்பாலும் சரியாகி விடுவது இயல்பு.
    ×