என் மலர்
நீங்கள் தேடியது "parents"
- 18 வயது ஆனாலும் கூட பெண்கள், பாலியல் ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர்.
- பெற்றோர்கள் பெண்குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் பெரியப்பா செய்தியாளர்களின் முன்பு அழுது, புலம்பும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் தங்கள் வீட்டுப் பிள்ளையை, அதாவது அவரது தம்பிப் பெண்ணை, இளைஞர் ஒருவர் காதலிப்பாதாக சொல்லி, ஆசைவார்த்தைக் கூறி 18 வயது நிரம்பிய மறுநாளே அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போதுவரை தங்களிடம் தங்களது மகளை காண்பிக்கவில்லை எனவும், மேலும் அந்த இளைஞர் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கதறி புலம்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரின் உறவினர் ஒருவர், பணவசதி இல்லாததால் பெண்ணின் வீட்டார்தான் மிரட்டியதாக தெரிவித்தார். இச்செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஒரு பக்கத்தினர் பெண்வீட்டார் பணவசதி இல்லாததால் அப்பையனை ஏற்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கத்தினர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி, பெற்றோரின் சொத்தை பறிப்பதே பல இளைஞர்களின் வேலையாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளின் உண்மை நிலவரம் என்ன? இதுபோன்று இளைஞர்கள், இளம்பெண்கள் செய்வது முறையா? அவர்களின் பெற்றோர் மனநிலை என்ன? அவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து ஒரு சிறுதொகுப்பை காண்போம்.
இளம்பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்?
மேற்கூறிய நிகழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 18 வயதாகி ஒரு வாரம் கூட அப்பெண்ணுக்கு ஆகவில்லை. அவள் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. ஒரு திருமண உறவிற்குள் செல்லும்போது அவளின் படிப்பு கவனம் சிதறி, எண்ண ஓட்டம் மாறும். மேலும் குழந்தை எண்ணத்தை இருவரும் கையிலெடுத்தால், அதனை கையாளும் மனப்பக்குவம் அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா? என்பதும் இங்கு கேள்விக்குறிதான். இந்திய திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தாலும், பல பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் இன்னும் பாலியல்ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர். மேலும் உடலளவிலும் அவர்கள் ஒரு பிரசவத்தை தாங்கும் திடத்துடனும் இருக்கிறார்களா? என்பதும் கேள்விக்குறியே. இதற்காகத்தான் இப்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்றவேண்டும் என்ற விவாதம் சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் அந்தக்காலத்தில் 14 வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள், குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள் என அறிவாளித்தனமாக பேசுவார்கள். அப்போது இருந்த நடைமுறையும், அவர்கள் உணவுமுறையும் வேறுப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஆகச்சிறந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
ஈர்ப்பா? காதலா?
எது நடந்தாலும் 2கே கிட்ஸா இருப்பா என்று 2000த்திற்கு பின் பிறந்தவர்களை பெரும்பாலானோர் ஒரு கேலியுடன் பேசுவார்கள். காரணம் அவர்களின் காதல் விவகாரங்கள், அவர்களின் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகள். இது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இப்போதைய தலைமுறையினர் பலரும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல், எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்பை வேறுபடுத்தி அறியமுடியாமல் ஒரு உறவுக்குள் செல்கின்றனர். இருவருக்கும் இடையே எந்த புரிதலும் இல்லாமல், ஒரு உறவுக்குள் செல்லும்போது அதில் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், மோதல் என வன்முறை வெடிக்கிறது. பல விவகாரங்கள் கொலைகளில் முடிகிறது. ஆனால் இவை எல்லாம் 2கே கிட்ஸ்க்கு மட்டும் பொருந்தாது. பலருக்கும் பொருந்தும். எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
புரிதல் ஒருபக்கம் இல்லையென்றாலும், இதுபோன்ற தவறுகள் நடக்க எளிதாக துணைநிற்கின்றன சமூக வலைதளங்கள். யாரென்றே தெரியாதவர்களிடம் எளிதில் பழகி, அவர்கள் உண்மையை பேசுகிறார்களா? உண்மையில் தங்களை விரும்புகிறார்களா? என்று தெரியாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர் பல இளைஞர்களும், இளம்பெண்களும். அவர்களின் உண்மைமுகம் தெரியவரும்போது வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி உண்மையில் நீங்கள் காதல்தான் செய்கின்றீர்கள் என்றால் இருவரும் இணைந்து ஒன்றாக முன்னேற பாருங்கள். உங்கள் படிப்பை முதலில் முடித்துவிட்டு, ஒரு நல்ல வேலைக்கு சென்று பின்னர் வீட்டில் கூறுங்கள். அப்போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காத்திருங்கள். காத்திருப்பதில்தான் உண்மையான காதல் உள்ளது. உங்களை ஒருவர் உண்மையில் காதலித்தால் உங்களுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.
சிலவீட்டில் என்ன செய்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்தச் சூழலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஒருவேளை பெண்ணின் வீட்டில் உங்கள் காதல் தெரிந்து, அவர்களை கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதற்கு தயார் என்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உங்களின் படிப்பு, அதனால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையில் காதலிப்பவர்கள் உங்களின் முன்னேற்றை கருத்தில்கொண்டே ஒவ்வொரும் நடைமுறையையும் மேற்கொள்வர். அப்படி படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டாலும் படிப்பைத்தொடருங்கள். அதைவிடுத்து படிப்பை நிறுத்தி ஒரு திருமணம் என்பது உங்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பெற்றோர் மனநிலை...
பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போதே அவர்கள் ஒரு உறவில் இருந்துள்ளனர் என்பதை அறிகின்றனர். சமூக வலைதளங்களில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க தவறுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் பெற்றோர்கள் பாலியல்ரீதியான சில கருத்துகளை பிள்ளைகளிடம் பேசுவது தவறு இல்லை. இந்தியாவில் உள்ள பெற்றோர்கள்தான் இன்னும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளிடம் காதல்ரீதியான வார்த்தைகளை பேசினால் கூட அது அபச்சாரம். பின் எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியும். ஒருபுறம் நம் பெற்றோர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் அந்தளவு புரிதல் இல்லை என்று கூறினாலும், அவர்கள் வளர்ந்த விதமும், சூழலும் எப்படி இருந்தது என்பது நமக்கும் தெரியும். அதனால் அவர்களை சொல்லியும் பலன் இல்லை.

ஈரப்பால் வரும் உணர்ச்சிகளுக்கு காதல் என பெயர் சூட்டாதீர்
மற்றொன்று இதில் பிள்ளைகளைவிட, பெற்றோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தன் மகள் ஒரு நல்லப்பையனை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஏமாற்றுபவனாக இருந்தால்? அதன்பின் நடைபெறும் விளைவுகள்? அதற்கு யார் பொறுப்பேற்பது? தங்கள் பெண் தேர்ந்தெடுத்த ஒரு ஆண்மகன் சரியானவாக இல்லாவிட்டால், அந்தப் பெண்ணை தாண்டி ஒரு குடும்பமே அதில் வீழ்கிறது. இது எல்லாக் குடும்பத்தினருக்கும் பொருந்துமா எனத் தெரியாது. ஆனால் உண்மையில் தனது பெண்பிள்ளைகளை அன்பாக வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அது வலுவாக பாதிக்கும். பாதை எப்படி இருந்தாலும் பிடிப்புதான் முக்கியம்.
அவள் எப்படி திருமணம் செய்துகொண்டால் என்பதை தாண்டி, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பல பெண்கள் தாங்கள் தவறான முடிவு எடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொள்கின்றனர். பலரின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? அந்தப் பெண் இறந்துவிட்டால், அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டவன், வேறொரு பெண்ணைத்தேடி சென்றுவிடுவான். ஆனால் பிள்ளையை இழந்த பெற்றோரின் கதி? இறுதியில் பெண்களோ, ஆண்களோ ஒரு காதல் உறவுக்குள் செல்கிறீர்கள் என்றால் உங்களின் துணை, உங்களது கல்வி, வேலை, உங்களது துன்பம், இன்பம் என அனைத்திலும் துணை நிற்பார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரப்பால் வரும் உணர்ச்சிக்குள் விழுந்து காதல் என பெயர்வைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
- குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யும் செயலே, தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.
- க்ரீம்கள், வாசனை திரவியங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!
குழந்தைகளின் சருமம் பெரியவர்களைவிட மென்மையானதாகவும், மிருதுவானதாகவும், மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். மாசு, வானிலை மாற்றங்கள், குழந்தையின் சருமத்திற்கு நல்லது என நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் (பாடி லோஷன்கள், க்ரீம்கள்) அவர்களின் சருமத்தை பாதிப்படைய செய்கிறது. குழந்தையின் நலனை எண்ணித்தான் பெற்றோர்கள் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. குழந்தையின் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல்
சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று. பெரியவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பொருட்கள் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும். அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும்.
குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
அடிக்கடி குளிக்கவைத்தல்
சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும். இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும். வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.
மாய்ச்சுரைஸர்களை தவிர்த்தல்
குழந்தைகளின் சருமம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஈரப்பதம் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் அவர்களது சருமம் ஈரப்பதத்தை விரைவாக இழந்துவிடும். மாய்ச்சுரைஸர்களை தவிர்ப்பது சருமத்தை இன்னும் பலவீனப்படுத்தும். இதனால் வறட்சி, அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான, ஒவ்வாமை ஏற்படுத்தாத மாய்ச்சுரைஸர்களை பயன்படுத்துவது நல்லது. குளித்த உடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே இதைப் பயன்படுத்துவது, ஈரப்பதத்தை எளிதில் சருமத்தில் தக்கவைக்கும்.

வெந்நீரில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது
தோல் நோய்களை புறக்கணித்தல்
பெற்றோர்கள் சிலசமயம் குழந்தைகளின் தோலில் வரும் தடிப்புகள், திட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அவை தானாகவே சரியாகிவிடும் என நம்புகிறார்கள். கீழேவிழுவது, விளையாடும்போது ஏற்படும் தடிப்புகள், காயங்கள் நாளடைவில் தானாக குணமடைந்துவிடும் என்றாலும், மற்ற தோல் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டும்.
வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல்
வாசனை திரவியங்கள் மற்றும் அதிகம் வாசம் தரும் குளியல் சோப்புகள் பயன்படுத்துவதற்கும், நுகர்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு தோல்நோய்களை ஏற்படுத்தும். ஹைபோஅலர்கெனி பொருட்களையே பெற்றோர்கள் தேடவேண்டும். எளிமையான, வாசனையற்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நோய் அபாயங்களை குறைக்கின்றன.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து தராதீர்கள்
குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.
- குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள்.
- குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள்.
குழந்தைகள் சில சமயங்களில் பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருப்பதுண்டு. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி கொடுக்காதபோதோ, அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும்போதோ கடும் கோபம் கொள்வார்கள். அந்த சமயத்தில் எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டார்கள். பெற்றோரின் பேச்சுக்கு செவிமடுக்காமல் எதிர்த்து பேசவும் செய்வார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். அவர்களை திட்டாமல் அன்பாக அரவணைக்க ஒருசில விஷயங்களை செய்தாலே போதுமானது. உங்கள் சொல் பேச்சை கேட்டு நடக்க தொடங்கிவிடுவார்கள். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
உணர்ச்சி ரீதியாக இணையுங்கள்
குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு உணர்ச்சி ரீதியாக அவர்களுடன் இணையுங்கள். அவர்களின் தோளில் மென்மையாக தொடுவது, கன்னத்தை பிடித்து கிள்ளுவது, அவர்களின் பெயரை மெதுவாக உச்சரிப்பது, கட்டிப்பிடிப்பது என அன்பை பொழியுங்கள். அவை அவர்களின் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும். கோபம், பிடிவாதத்தை தளர்த்தச் செய்யும்.
கண்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
குழந்தைகள் இறுக்கமான மன நிலையிலோ, கடும் அதிருப்தியுடனோ இருந்தால் அவர்களை உடனே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். அந்த சமயத்தில் அவர்களை உரத்த குரலில் அழைப்பது, ஏதேனும் வேலை செய்யுமாறு கட்டளையிடுவது போன்ற செயல்கள் அவர்களிடத்தில் எரிச்சலை அதிகப்படுத்தும்.
அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே நீங்கள் சென்று அவர்களின் மன நிலையை கவனியுங்கள். கண்கள் மூலம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி கண்களை பார்த்து பேசுவது அவர்களின் ஆக்ரோஷத்தை தணிக்கும். அதன் பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கும்.
கட்டளை இடாதீர்கள்
குழந்தைகள் கடுமையான கட்டளைக்கு எளிதில் இணங்கமாட்டார்கள். ஆனால் அன்புக்கு கட்டுப்படுவார்கள். அதிகார தொனியிலோ, உரத்த குரலிலோ பேசுவதற்கு பதிலாக அன்பாக பேசி அவர்களின் விருப்பம் என்ன என்பதை முதலில் ஆராயுங்கள். முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்பட முயற்சியுங்கள்.
அமைதியான குரலில் பேசுங்கள்
குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் மென்மையான அணுகுமுறையையே கையாள வேண்டும். கட்டளையிடுவது, சத்தமாக பேசுவது என குரல் தொனியில் ஆக்ரோஷம் வெளிப்படக்கூடாது. மெதுவாக, தெளிவாக, அன்பாக பேசுங்கள். அதிக சத்தத்தை விட அமைதியான குரல் எளிதில் அவர்களை உங்கள் வசப்படுத்திவிடும். நீங்கள் சொல்வதற்கு செவி சாய்க்க தொடங்கிவிடுவார்கள்.

குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டுங்கள்
குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். சின்ன சின்ன விஷயங்களை ஊக்கப்படுத்துங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டுவார்கள்.
மென்மையாக அணுகுங்கள்
குழந்தைகளின் செயல்பாடுகள் அவர்களின் வயதுக்கு தக்கபடியே அமையும். அவர்களிடம் நடத்தையில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுவதோ, கடுமையாக திட்டுவதோ கூடாது. அதனை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். மென்மையாக அணுகுவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை படிப்படியாக மாற்றிவிட முடியும்.
கால அவகாசம் கொடுங்கள்
குழந்தைகள் எதையும் உடனடியாக செய்யமாட்டார்கள். நீங்கள் சொன்னதை செயல்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். அதனை சிறப்பாக செய்து முடிக்க ஆலோசனையும் வழங்குங்கள். அப்படி அறிவுறுத்தலை வழங்கிய பிறகு அமைதியாக இருங்கள்.
உங்களின் பொறுமை நிச்சயம் மாயாஜாலம் நிகழ்த்தும். அடிக்கடி தலையீடு செய்வதை தவிர்த்தால் போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவார்கள்.
பழக்கப்படுத்துங்கள்
குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். அவர்களாகவே ஆர்வமாக வேலை செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றால், கட்டளையிடாதீர்கள்.
'அறையை சுத்தம் செய்' என்று சொல்வதற்கு பதிலாக 'தரையில் கிடக்கும் பொம்மையை அலமாரியில் வை. புத்தகங்களை ஒழுங்குபடுத்து. அறையில் சிதறி கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் வை' என அன்பாக கூறுங்கள். அதைத்தொடர்ந்து 'நீங்கள் பயன்படுத்தும் அறையை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்று கூறி அவர்களுடன் சேர்ந்து அறையை சுத்தப்படுத்துவதற்கு உதவுங்கள். நாளடைவில் அவர்களாகவே சுத்தம் செய்வதற்கு பழகிவிடுவார்கள்.
- பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும்.
- குழந்தைகளின் புரிதல் திறன் வளர்கிறது.
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படி குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்கள் தங்களை மறந்து கதை உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறது? என்ன பயன் கிடைக்கிறது? என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

இன்றைய காலச்சூழலில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் இல்லாமல் பல பெற்றோர் வேலை என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள்.
இந்த சூழலை சரி செய்ய பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்துகிற செயல்பாடாக மாறும். இதனால் குழந்தைகள் பெற்றோர் உறவு நெருக்கமாகும்.
நேர்மறை எண்ணம் வளர்தல்
குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும், தன்னம்பிக்கை கதைகளையும், வரலாற்று கதைகளையும், புரட்சியாளர்களின் வாழ்க்கை கதைகளையும் சொல்கிறபோது அவர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது.
இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கிறது. எல்லா சூழலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எண்ணத்தை கதைகள் குழந்தைகளுக்குள் விதைக்கிறது.

புரிதல் திறன் அதிகரித்தல்
குழந்தைகள் கதைகளை ஆர்வமுடன் கேட்பதால் அந்த கதையின் கருத்துகளை புரிந்து கொள்கிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது. இதனால் அவர்களின் புரிதல் திறன் வளர்கிறது.

சொல் அறிவு
ஒவ்வொரு முறை கதை சொல்கிற போதும், கதைகளை கேட்கிற போதும் குழந்தைகள் புதிய சொற்களையும் அதற்குரிய அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நிறைய கதைகளை கேட்கிறபோது பல சொற்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிகமான சொல் அறிவு அவர்கள் எழுதுவதற்கு உதவுகிறது.
நல்லொழுக்கம் வளர்கிறது
கதைகள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்வமுடன் கேட்பதால் அவர்களின் ஆழ்மனதில் கதைகள் பதிந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கதைகளை சொல்வது அவர்களை ஒழுக்கமானவர்களாக மாற்றும்.

கலாசாரங்களை அறிதல்
குழந்தைகள் கதைகளின் வழியாக அவர்களுடைய கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்டு கதைகள் வழியாக குழந்தைகள் பரந்துபட்ட உலகத்தையும், பிற பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் எல்லா மக்களையும் புரிந்து கொண்டு பன்முகத்தன்மை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.
எனவே, அன்பு பெற்றோரே! குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள், குழந்தைகளின் கதைகளை கேளுங்கள். கதைகளை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் சொல்லும் கதைகளை புத்தகமாக்குங்கள். கதைகள் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும்.
- தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள்.
- பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை.
பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்த துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவி விழக்கூடும். சென்னையில் இப்படி தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதேபோல் தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டாம். வாஷிங்மிஷின் எந்திரத்தை திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்டது குழந்தை. எனவே உள்ளே இறங்கி கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
டேபிள் பேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நெருக்கமான கம்பித்தடுப்புகள் இருக்கும் டேபிள் பேன்களையே வாங்குங்கள். அப்படியே வாங்கினாலும், அதைத்தொட்டு விளையாட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். டேபிள் பேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றை குழந்தையின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.
குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவு பொருட்களை கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத்துண்டுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையை கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளை செய்வது நல்லது.
- கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
- மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.
மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.
* தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.
* இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
* எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.
* பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.
* காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.
* இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
- ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும்.
- இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோர் குறித்த கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்களின் வெற்றிக்கும், நிறைவான வாழ்க்கைப் பயணத்துக்கும் பெற்றோரும், அவர்களது வளர்ப்பு முறையும்தான் படிக்கட்டுகளாக அமை கின்றன. அதுதான் ஒரு குழந்தை எவ்வாறு மற்றவர்களுடன் பேச, பழக, நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் மனநலம், ஆரோக்கியம், நம்பகத்தன்மை, குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவை மேம்படுத்த உதவுகிறது. இந்த உலகில் அனைத்து வேலையைச் செய்வதற்கும் அதுசார்ந்த தனிப்பட்ட பயிற்சி இருக்கிறது. ஆனால், குழந்தையை வளர்ப்பதற்கான பயிற்சி என்பது, சிறுவயதில் நாம் நமது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அனுபவமாக மட்டுமே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது. இது சிறந்த பெற்றோராக நடந்துகொள்வதற்கும், அவர்களது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கும் உதவும்.
வேலைச்சூழலில், பெற்றோரின் மன நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுப்பதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும். ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்காக, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்? அவர்களின் உணர்ச்சிகளையும், சூழலையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை வகைப்படுத்துவதில் அதிக சவால்கள் இருக்கின்றன.
அப்ப எல்லாம்.. என்று நாங்க குழந்தைகளை எப்படி வளர்த்தோம் என்று பெருமைப்பட்டாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்தன. பெண் – ஆண் குழந்தை பாகுபாடு தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. அது பூஜ்ஜியத்தை நோக்கி நகரவேண்டும். குழந்தை வளர்ப்பில் பெரும்பாலும் பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கும் இன்னும் பெரும்பாலும் குறைச்சலாகவே உள்ளது.
நாம் ஆண்டாண்டாக பெற்ற கல்வியும் தொழில்நுட்பமும் எப்படி குழந்தை வளர்ப்பில் வலுசேர்க்கப்போகின்றது என்பதில் கவனம் தேவை. தொழில்நுட்பம் நிறைய கவனச்சிதைவினை நோக்கிச்செல்கின்றது. நாமும் எதனை நோக்கி செல்கின்றோம் என்றே பலசமயம் புரிவதில்லை. குழந்தை என்னவாக வேண்டும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால் அது ஒவ்வொரு முறையும் புதிய புதிய பரிமாணத்தினை எடுக்கும். சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் சிறந்த என்பதற்கான அர்த்தம் கூர்மையாகிக்கொண்டே செல்லும்.
வாழ்க்கை, வேலை என எதுவாக இருந்தாலும் தோல்வி ஏற்படுவது இயல்பானது. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து வெற்றிக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் முழுமையாக நம்புகிற நபரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் சேர்ந்து பயணிப்பதே வளமான எதிர்காலத்துக்கான சரியான பாதைக்கு வழிவகுக்கும்.
- குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
- மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை கேட்டு அடம்பிடிப்பது இயல்பானது. அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும் அனுமதி கேட்பார்கள். அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அழுது அடம்பிடிப்பார்கள்.
அப்படி அழுது அடம்பிடித்த உடனேயே அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தவறான செயலாகும். அவர்கள் விரும்பும் பொருட்கள், விஷயங்கள் ஏற்புடையதா? என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அவை ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறானது.
எதற்காக மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பிடிவாதம் அதிகரித்துவிடும். அது அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர் மீதான நம்பிக்கையை இழக்கவும் வைத்துவிடும்.
'நீ அழுது அடம்பிடிப்பதற்காக உன் விருப்பப்படி எதுவும் செய்ய மாட்டேன்' என்று அவர்களுடன் விவாதம் செய்வதும் கூடாது. அது பலனும் தராது. ஏனெனில் அதனை காதுகொடுத்து கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் அது குறித்து பேசாமல் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் குறித்து பேசி, அதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். அந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கையை மறுப்பதற்கான காரணத்தை விளக்கி புரியவைத்துவிடலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடும்.
- ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்து கூறி உரையாற்றினார்.
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால திட்டம் தொடர்பான அச்சத்தையும் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தையும் போக்குவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பாக அச்சம் தவிர் நிகழ்வு -1 நடத்தப்பட்டதுபள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளரும்எழுத்தாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான சுமதி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் துணிவும் உண்மையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் . ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் .ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து நடக்க வேண்டும். இலக்கணப் பிழையின்றி பேச வேண்டும். ஆங்கிலத்தை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை முறை விழுகிறாயோ அத்தனை முறையும் எழுந்து நில் .அதுவே உனக்கு வெற்றி. ஒவ்வொரு மாணவனும் ஒழுக்கத்துடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்க வேண்டும் .பெற்றோர்களே முதல் கதாநாயகர்கள், எனவே அவர்களை போற்றி நடக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் , பொருளாளர் சுருதி , ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் நன்றி கூறினார்.
- குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள்.
- குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
நவீன தொழில்நுட்ப காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். வயதிற்கும், மனவளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத அளவிற்கு பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உறவு குறித்த புரிதலோ, வாழ்வின் நடைமுறை சிக்கல்களோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.
குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை.
குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.
- குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன.
- கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன.
குறிப்பாக. உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தூய்மையின்மை காரணமாகவும், கை சுத்தம் இல்லாமல் இருப்பதும் நோய்த்தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி, வெளியே எங்காவது சென்று வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுவதுதான்.
பல குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். மேலும் கழிவறை, குளியல் அறை, பொது இடங்களைப் பயன்படுத்தும் போதும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கைசுத்தம் மிக அவசியம்.
கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும்.
தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகளை கையாளும்போதும் கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படிச்செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலகக் கை கழுவும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.
- எதிர்கால வாழ்க்கை பாடத்தை கற்க பள்ளி கூடங்களுக்கு செல்லும் நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்னும் பாடத்தை வீட்டில் இருந்தே எடுக்க வேண்டியது அவசியமாகிறது
- பெங்களூருவில் கண்டறியப்பட்டுள்ள தவறுகள், நம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையிலும் இனி நடைபெறக்கூடாது. பிள்ளைகளை வழி நடத்துகின்ற முதல் பொறுப்பு, அவர்களது பெற்றோருக்கு த்தான் இருக்கிறது.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திடீர் சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பைகளில் நேற்று ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.
அங்கு கருத்தடை சாதனம், கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள், லைட்டர்கள், ஆணுறைகள், போதைக்காக பயன்படுத்தும் ஒயிட்னர்கள் அவர்களின் பைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கி இருக்கிறது.
ஒழுக்கம் எனும் பாடம்
சில மாணவர்கள், தண்ணீர் பாட்டிலில் மதுபானத்தை கலந்து கொண்டு வந்து குடிப்பதும், இந்த சோதனையில் அம்பலமாகி இருக்கிறது. இது பெங்களூருவில் நடந்த விஷயம்தானே என்று நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. இந்த சமூகமும், அனைத்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
எதிர்கால வாழ்க்கை பாடத்தை கற்க பள்ளி கூடங்களுக்கு செல்லும் நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்னும் பாடத்தை வீட்டில் இருந்தே எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, எல்லா மாணவர்களின் கைகளிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் இருக்கின்றது. இன்டர்நெட்டில் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கின்றது. நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை மட்டும் தேடிக் கற்க நாம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஊக்கம்
எது நல்லது, எது கெட்டது என்று பிரித்து பார்க்கிற பக்குவத்தை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தும் முதல் பொறுப்பு பெற்றோர்களையே சாரும். ஒவ்வொரு பெற்றோரும், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளின் திடீர் செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, அவர்கள் நல்வழியில் செல்லும் அறிவுரைகளையும், ஊக்கத்தையும் தொடர்ச்சி யாக வழங்க வேண்டும்.
பெங்களூரு போன்று தமிழகத்தில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள், இருக்கக்கூடாது என்று நாம் நம்பும் அதேநேரத்தில், தமிழக அரசும் பள்ளிக்கூடங்களில் மாணவ ர்களின் செயல்பாடுகள் ஆரோக்கிய மாக இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய கலாச்சார சீரழிவை இது ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான சமூகம்
பெங்களூருவில் கண்டறியப்பட்டுள்ள தவறுகள், நம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையிலும் இனி நடைபெறக்கூடாது. பிள்ளைகளை வழி நடத்துகின்ற முதல் பொறுப்பு, அவர்களது பெற்றோருக்கு த்தான் இருக்கிறது.
பிள்ளைகளை கண்காணியுங்கள். அன்போடு கலந்து அறிவுரைகளை வழங்குங்கள். தவறு நடந்தால் உடனே கண்டியுங்கள். நல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள். நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






