என் மலர்
நீங்கள் தேடியது "begging"
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த காமராஜ் மகன் சங்கர் (வயது 32). பட்டதாரி வாலிபரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தில் நேர்ந்த அடுத்தடுத்த துயர சம்பவங்களால் பெற்றோர் உயிரிழந்தனர்.
இதனால் சங்கர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். உறவினர் யாரும் கண்டு கொள்ளாததால் தெருக்களில் பிச்சை எடுத்து பொதுமக்கள் தரும் காசுகளை வைத்து டீ மட்டும் குடித்து வருவார்.
மேல் சட்டை அணியாத நிலையில் கைலி மட்டும் அணிந்து தெருக்களில் சுற்றி வரும் இவரை காண்பதற்கு பரிதாபமாக இருக்கும். அரசு சார்பில் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தெருக்களில் இதுபோல சுற்றித்திரியும் வறியவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வருகின்றனர்.
ஆனால் பல வருடங்களாக இதே பகுதியில் சுற்றி வரும் இந்த வாலிபரை யாரும் கண்டு கொள்ள வில்லை. தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போல கேட்பாரற்ற வறியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் மற்றும் முதியவர்களின் நிலைமை மிகவும் கவலை தரும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் இது போன்றவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மறு வாழ்வு அளிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி பிச்சைக்காரர்கள் மற்றும் வறியவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக கூறி வருவாய்த்துறையில் புகார் செய்தார். நிலத்தை மீட்டு கொடுக்க அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
தங்களது கழுத்தில் “அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. எனவே எங்களுக்கு பிச்சை போடுங்கள்” என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாட்டியபடி பிச்சை எடுத்தனர்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “எனது 25 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் பறித்து விட்டனர். அதை மீட்க 2 ஆண்டுகளாக போராடி வருகிறேன். லஞ்சப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரி கூறுகிறார். பணம் இல்லாத எனக்கு பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
தயவு செய்து எனக்கு பிச்சை போடுங்கள். அப்போதுதான் நான் லஞ்சப் பணத்தை கொடுக்க முடியும். லஞ்சம் கொடுத்தால் எந்த பணியும் நடக்கும். நான் லஞ்சம் கொடுக்காததால் எனது நிலத்தை இழந்து விட்டேன்.
இதனால் பிச்சை எடுத்து லஞ்சப்பணத்தை கொடுக்க முடிவு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கர்னூல் மாவட்ட கலெக்டர் கூறும் போது, “ராஜுவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இதனால் அவர் மீது வருவாய்த்துறை மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அவரது நிலத்தை உறவினர்கள் அபகரித்து இருந்தால் அவர் கோர்ட்டை அணுகி இருக்க வேண்டும்” என்றார். #AndhraFarmer