search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relief amount"

    • எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்
    • நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்

    அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 'பிச்சை' எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை என்று பதிவிட்டுள்ளார்.

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனவும், லேசான பாதிப்பு உள்ள வட்டங்களுக்கும் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப் படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் சுமார் 4 நாட்களில் முற்றிலுமாக முடிக்கப் பட்டது.

    அதன்பின்னர் 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகளை இழந்தவர்கள், பயிர்கள் சேதம், கால்நடைகள் இறப்பு உள்ளிட்டவைகளும் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் 508 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 53 ரேஷன் கார்டுகள் உள்ளன. குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் 449 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 614 ரேஷன் கார்டுகளும் உள்ளன. இவர்களுக்கு வீடு வீடாக டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி ரேஷன் கடை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று முன்தினம் தொடங்கி இன்று 3-வது நாளாக டோக்கன்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்ற னர். அந்த டோக்கன்களில் நிவாரண தொகை பெறுவ தற்கு நாளை முதல் அதாவது 29-ந்தேதி முதல் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரேஷன் கடைகளில் சென்று ரொக்கமாக நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றுடன் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை முதல் பொதுமக்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக வந்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தது 800 முதல் 1200 ரேஷன் கார்டுகள் வரை இருக்கும் என்பதால் ரூ.1000 வழங்கும் கடைகளுக்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    எனவே கடைகளில் பணம் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று மாலை அனைத்து கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன், கூட்டுறவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

    அதன்முடிவில் எவ்வாறு நிவாரண தொகையை வழங்குவது, கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை ரேஷன் கடைகளில் இந்த தொகை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    • 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
    • நிவாரணத் தொகை வழங்கும் பணியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    மிச்சாங் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் (17.12.2023)காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ள 1100, 044 28592828 ஆகிய இலவச எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

     

    • ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
    • மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.

    • கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்
    • டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம் சார்பில் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    இதனால் சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதியாக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு சார்பில் குண்டர் சட்டம் போடப்பட்டது.

    இதற்கு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு பின்னர் அரசு குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றது. விவசாயிகள் கஞ்சா கடத்தவில்லை, சாராயம் விற்கவில்லை, அவர்களுடைய சொந்த நிலத்தை காப்பாற்ற தான் போராடுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது எந்த விதத்தில் நியாயம் இல்லை. விவசாயிகளை நசுக்கும் எந்த அரசும் நன்றாக இருந்த தில்லை. இதனை தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் ஏராளமான பொட்டல் காடுகள் இருக்கையில் விவசாய நிலங்களில் சிப்காட் போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல், மாற்று வழிகளை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். இந்த பருவ மழை காரணமாக டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். குண்டர் சட்டம் போடும் வேகத்தை இழப்பீடு வழங்குவதிலும் தமிழக அரசு காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி வழங்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை, இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும்.

    12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கூறினார்.
    • அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.616 கோடியில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டையும், குடிநீர் தாகத்தை தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தி.முக. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்ட த்தில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமக்குடியில் முதல் முதலாக அரசு கல்லூரியை ஏற்படுத்தியது தி.மு.க. ஆட்சியில் தான். தொடர்ந்து இந்த மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இந்த மாவட்டத்தையும் மக்களையும் வலம் பெறச் செய்ய வேண்டும் என தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    தற்போதும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பருவமழை பெய்யா ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குழு பார்வையிட்டு சென்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து அறிக்கையினை அவர் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் அனுப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
    • நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டனம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் சச்சினபள்ளியை சேர்ந்தவர்கள் அணில், வீர பிரம்மம், கொண்டல் ராவ். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி தனியார் ஓட்டல் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.

    முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை பெறுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் அம்பாடி ராம் பாபுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்றனர்.

    அப்போது அவர் ரூ 2. 50 லட்சம் கொடுத்தால் தான் காசோலையை தர முடியும் என திருப்பி அனுப்பி உள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஜனசேனா கட்சி நிர்வாகிகளிடம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காசோலையை தராமல் கமிஷன் கேட்பதாக தெரிவித்தனர்.

    நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சியை சேர்ந்த சொர்ண ராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதித்து இறந்தார்.
    • சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் குமார் நிவாரண தொகை தலா ரூ.3 லட்சம் மொத்தம் 6 லட்சத்திற்கான காசோலைகளை தாயார் லலிதா முன்னிலையில் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சியை சேர்ந்த சொர்ண ராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதித்து இறந்தார். இந்நிலையில் கொரோனா பாதித்து உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படமத்திய அரசு அறிவித்த நிவாரண தொகையை சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் குமார், உயிரிழந்த சொர்ண ராஜ் மகள் சோபியா, மகன் சச்சின் டெண்டுல்கர் ரிடம் தலா ரூ.3 லட்சம் மொத்தம் 6 லட்சத்திற்கான காசோலைகளை தாயார் லலிதா முன்னிலையில் வழங்கினார்.

    நிவாரண தொகையை பெற்றுக் கொண்ட சொர்ணராஜ் குடும்பத்தினர், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பஞ்சாயத்து தலைவர் குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ×