search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி 3 பேர் மரணம்: ரூ.2½ லட்சம் கமிஷன் கேட்ட நீர்வளத்துறை அமைச்சர்
    X

    பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி 3 பேர் மரணம்: ரூ.2½ லட்சம் கமிஷன் கேட்ட நீர்வளத்துறை அமைச்சர்

    • இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
    • நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டனம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் சச்சினபள்ளியை சேர்ந்தவர்கள் அணில், வீர பிரம்மம், கொண்டல் ராவ். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி தனியார் ஓட்டல் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.

    முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை பெறுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் அம்பாடி ராம் பாபுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்றனர்.

    அப்போது அவர் ரூ 2. 50 லட்சம் கொடுத்தால் தான் காசோலையை தர முடியும் என திருப்பி அனுப்பி உள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஜனசேனா கட்சி நிர்வாகிகளிடம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காசோலையை தராமல் கமிஷன் கேட்பதாக தெரிவித்தனர்.

    நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×