search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை
    X

    முருகேசன் எம்.எல்.ஏ. 

    விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை

    • விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கூறினார்.
    • அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.616 கோடியில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டையும், குடிநீர் தாகத்தை தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    அந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இந்த மாவட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தி.முக. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்ட த்தில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமக்குடியில் முதல் முதலாக அரசு கல்லூரியை ஏற்படுத்தியது தி.மு.க. ஆட்சியில் தான். தொடர்ந்து இந்த மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இந்த மாவட்டத்தையும் மக்களையும் வலம் பெறச் செய்ய வேண்டும் என தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    தற்போதும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பருவமழை பெய்யா ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குழு பார்வையிட்டு சென்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து அறிக்கையினை அவர் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் அனுப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×