search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michang typhoon"

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அப்பகுதியில் உள்ள எண்ணை நிறுவனங்களில் தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது.

    மீனவர்களின் 700-க்கும் மேற்பட்ட படகுகள், வலைகள் ஆகியவை எண்ணெய் கழிவுகளில் சிக்கி சேதமடைந்தன. இதன் காரணமாகவும் எண்ணை படலங்கள் தேங்கி நிற்பதாலும் அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடை பெற்று வருகிறது.

    தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கடல் பகுதி மற்றும் முகத்து வாரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.

    சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி பேரல்களில் அள்ளி வெளியேற்றி வருகிறார்கள்.

    எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு 'ஆயில் சக்கார்' எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 எந்திரங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களை படகுகளில் கட்டி எண்ணெய் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகளுக்கு இழுத்துச் சென்று பேரல் பேரலாக கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 15 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

    இதன்மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீரில் மிதந்த படியே கழிவுகளை சேகரித்து டிரம்களுக்கு அனுப்பும் 2 எந்திரங்கள் மூலமாக பணிகள் நடை பெற்று வருவதால் எண்ணெய் கழிவுகள் ஓரளவுக்கு வேகமாக அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் 17-ந்தேதிக்குள் (நாளை) எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதனால் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எண்ணெய் கழிவுகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை வர உள்ளது.

    அன்றைய தினம் இதுவரை அகற்றப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் எத்தனை டன்? என்பது பற்றிய முழு விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு மும்பை மற்றும் ஒடிசாவில் இருந்து நவீன எந்திரங்கள் இன்று வரவழைக்கப்பட இருப்பதாக மாசுகட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த எந்திரங்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்றும், இதன் மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    • மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது.
    • மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையை ஒட்டியுள்ள நேரு தெரு மிகவும் பள்ளமான தெருவாகும். சென்னை சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இந்த தெருவில்தான் வந்து சேருகிறது. இதனை சுற்றியுள்ள தெருக்கள் சற்று மேடாக காணப்படுவதால் இங்கிருந்து வெள்ளம் வெளியேறவில்லை.

    இந்த பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலும் தூர்ந்து போய்விட்டதால் வெள்ளம் வடியாமல் 4 நாட்களாக தேங்கி கிடந்தது. மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்தனர்.

    மழை ஓய்ந்து 3 நாட்களாக வெள்ளத்தை அப்புறப்படுத்திய நிலையில் நேரு தெருவில் வெள்ளத்தை அகற்ற நேற்று காலை வரை யாரும் வரவில்லை. இதனால் நேற்று காலை வரை ஒரு ஆள் உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது. நேற்று மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை அந்த பகுதியில் வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் 4 நாட்களாக அந்த பகுதி மக்கள் உணவுக்கே வழியில்லாமல் தவித்தனர்.

    • 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது.
    • தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மிச்சாங் புயல் சென்னை நகரை புரட்டிப்போட்டு உள்ளது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கொரட்டூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் அப்பகுதி முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி குடியிருப்புகள் வெள்தத்தால் சூழப்பட்டது. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் கொரட்டூர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    குறிப்பாக கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் திக்குமுக்காடினர். பலத்த மழை காரணமாக பட்டாபிராம் ஏரி, ஆவடி ஏரி, அயப்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்து கொரட்டூர் ஏரிக்கு வந்தபோது கொரட்டுர் ஜீரோ பாயிண்ட் நிரம்பி உபரி நீரானது கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது ஏற்கனவே பள்ளமான பகுதி என்பதால் 4 நாட்கள் ஆகியும் தண்ணீர் இன்னும் குறையவில்லை. மழை நின்று 3 நாட்கள் ஆகியும் மழை நீர் வெளியேறாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வடக்கு பகுதியில் 55 முதல் 67 தெருக்கள் மற்றும் மத்திய நிழற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. இன்னும் ஒரு அடி கூட குறையவில்லை. 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 4 நாட்களாக அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.

    தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு பால், உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள். தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.அவர்களுக்கு நிவாரண உதவி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழையால் எங்கள் வாழ்வாதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு முழுவதுமே தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது. உணவுக்கும் தண்ணீருக்கும் மிகவும் கஷ்டப்படுகிறோம். நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வீட்டிற்குள்ளே 5 நாட்களாக அடைபட்டு இருக்கிறோம். கீழே வந்தால் எங்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமாளித்தோம். இனிமேல் என்ன செய்வோம். எங்களுக்கு பால் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாங்கள் இப்படி அவதிப்பட வேண்டுமா? எங்களுக்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாதா? கேட்டால் ஏரியை உடைத்து விட்டோம் என்கிறார்கள். எந்த ஏரியை உடைத்து விட்டார்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் பால், குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    பட்டரைவாக்கம் பால்பண்ணையில் மழைநீர் புகுந்துள்ளதால் 3-வது நாளாக அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம், உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கொரட்டூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் கொரட்டூர் வடக்கு அக்கரகாரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிடிபி காலனி, மேனாம்பேடு மெயின் ரோடு, பட்டரைவாக்கம் பிரதான சாலை பகுதிகளில் மழைவெள்ளம் குறைந்ததால் அங்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ தொற்பேட்டை பகுதியான பட்டரைவாக்கம் பகுதியில் சுமார் 1000- மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டறைவாக்கம் கொரட்டூர் சாலையில் பட்டரைவாக்கம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கம் போல் வாகனங்களை இயக்கப்படுகின்றன.

    இதற்கிடையே இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலையின் உரிமையாளரிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல், மண்டலகுழுத் தலைவர் பி கே மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து இடங்களும் வெள்ளக்காடானது. கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அப்பகுதியில் மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வெள்ள நிவாரண பணிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பூந்தமல்லி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் எங்கள் பகுதியில் மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார சப்ளையும் கொடுக்கவில்லை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள வார்டில் இந்த நிலைமை என்றால் மற்ற வார்டுகளின் நிலை எப்படி இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மழைநீரை உடனே அகற்றி மின் வினியோகம் வழங்க கோரி லஸ்கார்னர் பகுதியில் பொதுமக்கள் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. மேலும் ஆந்திரா பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி, சின்னக்காவனம், தத்தை மஞ்சி ஆகிய 3 இடங்களில் ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வரும்நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் சூறைக்காற்றில் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் 4-வது நாளான இன்னும் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் மின்சப்ளை சீராகவில்லை. பொன்னேரி மூகா ம்பிகை நகர், சின்ன க்காவனம், பழவேற்காடு வைரங்குப்பம், கரிமணல், தாழங்குப்பம், பிரளயம்பாக்கம் சோமஞ்சேரி, கம்மார் பாளையம், மீஞ்சூர் அத்திப்ப ட்டு புதுநகர், மேலூர், அரியன்வாயல் உள்ளிட்ட பகுதி களில் இன்னும் மின்தடை உள்ளதால் பொது மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் படகில் சென்று வருகிறார்கள்.

    ×