என் மலர்
நீங்கள் தேடியது "Civil strike"
- வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
- போலீசார் சமாதானம் செய்தனர்
ஆரணி:
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அரிகரன் நகரில் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமாக காலி இடம் உள்ளது. இவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க பன்னீர்செல்வம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதன்படி செல்போன் டவர் அமைப்பதற்காக அந்த இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர்உள்ளதாகவும், அதன் மூலம் வீடுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் ராஜி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அங்கு செல்போன் டவர் அமைக்க தடைவிதித்தனர்.
இது சம்பந்தமாக பொது மக்களிடமும் தெரிவித்து சாலை மறியல் செய்யக்கூடாது எதுவாக இருந்தாலும் மனு அளியுங்கள் என்று கூறி சமரசம் செய்து அவர்களை கலைந்து செல்ல செய்தனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை சரி செய்யும்பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- நாற்று நட்டும் போராட்டம்
- வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைவதாக புகார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில் பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் கிராமங்கள் செண்பகத்தோப்பு அணை செல்லும் வழியில் வனத்துறை சாலையில் உள்ளது.
இந்த சாலை வனத்து றையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் குண்டும் குழியுமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இங்கு வரும் அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கமண்டல நதி பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் படவேடு பகுதியில் வரும் அனைத்து வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன.
இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், சந்தவாசல் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் காரணமாக படவேடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக சேறும் சகதியுமாக உள்ள செண்பகத்தோப்பு அணை செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காரியாபட்டி அருகே லாரி மோதி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் வர்கீஸ் நவீன் (16). அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் லாவண்யா (15).
இவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக 2 பேரும் ஆவியூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கிரஷர் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக 2 பேர் மீது மோதியது. இதில் வர்கீஸ்நவீன், லாவண்யா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
செங்கம்:
செங்கம் அடுத்த தோக்கவாடி ஹவுசிங் போர்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கரியமங்கலம் பகுதியில் இருந்து மின் இணைப்புகள் வழங்க ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிராமப் பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்க ப்படுவதாகவும் அந்த சமயங்களில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டிலும் மின்தடை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மின்தடை ஏற்பட்டால் பல மணி நேரம் கழித்து தான் மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதா கவும் கூறி நேற்று இரவு திடீரென அப்பகுதி மக்கள் செங்கம்- திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சா லையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. எனினும் இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் கைவிடப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.
- பணி நிறுத்தத்தால் அரக்கோணத்தில் பரபரப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
அரக்கோணம்:
அரக்கோணம் - மும்பை ரெயில் மார்க்கத்தில் கைனூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் வழி யாக சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநி லங்களுக்கும், இதே போல் மறுமார்க்கத்தில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத் தின் பிற மாவட்டங்கள் மற் றும் கேரளா, கர்நாடகா மாநி லங்களுக்கும் ரெயில்கள் மற் றும் சரக்கு ரெயில்கள் செல் கின்றன.
இதனால் அவ்வப்போது அந்த கேட் மூடியிருப்பதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அந்த பகு தியில் சுரங்கபாதை அமைப்ப தற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங் கப்பட்டது.
இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற் கான வரைபடத்தை காண் பித்து பணிகள் தொடங்கிய பின் இப்போது அந்த வரைப டத்தில் உள்ளது போல் இல் லாமல் வளைவாக மாற்றி அமைத்து வருகின்றனர்.
இத னால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, இந்த பணியை நிறுத்த வேண்டும். எனக்கூறி மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாசில்தார் சண்முக சுந்தரம், ரெயில்வே இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாக புகார்
- போக்குவரத்து பாதிப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து சுடுகாடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
செய்யாறு:
செய்யாறு அடுத்த கொருக்கை பகுதியில் அர்ஜுனன் காலனி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இதே போல புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் முறையாக வருவதில்லை.
இதுகுறித்து பலமுறை தலைவரிடமும், அதிகாரிகளும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கொருக்கை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து செய்யாறு போலீசார் மற்றும் கொருக்கை தலைவர் அருள் நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு
- போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் மில்லர்ஸ் சாலையில் அரசு கார்டன் என்கின்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே அதன் உரிமையாளர் இவர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்கு பொது வழி உள்ளது.
இந்த நிலையில் 40 குடும்பங்கள் செல்லும் வழியை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். மேலும் அவர் வங்கியில் கடன் திருப்பி செலுத்தாததால் அந்த 40 குடும்பங்கள் செல்லும் வழியை வங்கி ஏலம் விட்டது.
இந்த வங்கியில் சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் ஏலத்திலிருந்து எடுத்து தற்போது அங்கு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்
இதனால் பொது வழி அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் செல்ல வழி இல்லாத காரணத்தால் ஆரணி தாலுக்கா போலீசாரிடமும் மற்றும் கோட்டாட்சியரிடமும் மனு அளித்தனர்.
அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மில்லர்ஸ் சாலையில் இன்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வந்த ஆரணி இன்ஸ்பெக்டர் ராஜங்கம், எஸ்.ஐ ஷாபூதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் மறியலை கைவிட்டு கலைத்து வைத்தனர். அப்போது குடியிருப்பு பகுதி சேர்ந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலையை சீரமைக்க கோரி நடத்தினர்
- பஞ். துணைத்தலைவர் தீக்குளிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் வேலூரில் இருந்து பென்னாத்தூர், நாகநதி மற்றும் நஞ்சுகொண்டாபுரம் வழியாக செல்லும் சாலையை அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்து கின்றனர்.
நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது.
இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
நாகநதியில் இருந்து அமிர்தி செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த வழியாக செல்லும் நாகநதி, மேதல்பாடி, வேட கொல்லைமேடு, நஞ்சு கொண்டாபுரம், அமிர்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அமிர்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கன்னியப்பன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
- மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- இந்த நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேட்டூர்:
மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை நகர் செல்வதற்கு 80 அடியில் பிரதான சாலை உள்ளது.
சாலை ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பணியை நிறுத்தகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மேட்டூர்- ஈரோடு செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பணி நிறுத்தம்
இதையடுத்து சாலை மறியல் முயற்சியை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
- மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.
பூந்தமல்லி:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறார்கள்.
பூந்தமல்லி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து இடங்களும் வெள்ளக்காடானது. கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அப்பகுதியில் மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வெள்ள நிவாரண பணிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பூந்தமல்லி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் எங்கள் பகுதியில் மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார சப்ளையும் கொடுக்கவில்லை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள வார்டில் இந்த நிலைமை என்றால் மற்ற வார்டுகளின் நிலை எப்படி இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.
இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மழைநீரை உடனே அகற்றி மின் வினியோகம் வழங்க கோரி லஸ்கார்னர் பகுதியில் பொதுமக்கள் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
சேதராப்பட்டு:
புதுவை அருகே அரசு நிவாரண தொகை வழங்காததை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியக்கோட்டகுப்பம் பகுதியில் 10 மற்றும் 11-வது வார்டு உள்ளது. பெஞ்ஜல் புயல் மற்றும் கனமழைக்கு இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை எனவும், புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூபாய் 2 ஆயிரம் தொகை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை தொகுப்பு இந்த இரண்டு வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு கோட்டகுப்பம் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் தீவிரமடைந்தது.
அப்போது அரையாண்டு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் தனியார் பள்ளி பஸ்சில் வந்த நிலையில் மறியல் போராட்டத்தால் சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் பஸ் நிறுத்தப்பட்டது.
ஆட்டோக்களில் வந்த பள்ளி மாணவர்களும் மறியலில் சிக்கித் தவித்தனர். காலாப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கனரக வாகனங்கள் அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
கோட்டகுப்பம் ரவுண்டானாவில் இருந்து சிவாஜி சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெஞ்ஜல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதம் அடைந்தது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 16 வார்டுகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது.
10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் சேதம் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. முற்றிலும் 2 பகுதி மக்களும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அரசு நிவாரணத்திற்கான எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.
அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கு உடனே தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதியை பாதிப்புக்கு ஏற்றார் போல் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினர்.
தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக வழி விடுங்கள் என கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டதன் பேரில் பள்ளி வாகனங்களை மட்டும் போராட்டக்காரர்கள் விரைவாக செல்ல அனுமதித்தனர்.
பின்னர் மீண்டும் சாலை மறியல் ஈடுபட்ட அவர்களிடம் கோட்டக்குப்பம் துணை போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பாதிப்புகளை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அப்போது போலீசாருக்கும் மறியல் ஈடுபட்ட ஒரு சில இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் கோட்டக்குப்பம் ரவுண்டான பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சுமார் 1:30 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தில் அந்த வழியாக அலுவலகம் சென்றவர்கள் சென்னை சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது போலீசார் வருவாய்த்துறை அதிகாரியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 2 வார்டு மக்களுக்கும் அரசு வழங்கும் நிவாரணத் தொகையை வழங்குவதாக2 வார்டு பெயர்களையும் நிவாரண பட்டியலில் இடம் பெறச் செய்தனர். இதனை போலீசார் பொதுமக்களிடம் காண்பித்தனர். இதன் அடிப்படையிலேயே பொதுமக்கள் தற்காலிகமாக தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கோட்டக்குப்பம் பெஞ்ஜல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு 50-க்கும் மேற்பட்ட நபர்களை படகுமூலம் மீட்டனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நிறைய கால்நடைகள் இறந்து போயின. நான்கு நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
எனவே கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை உடனே வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.






