search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் மறியல்
    X

    குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் மறியல்

    • திடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த பையூர் மில்லர்ஸ் சாலையில் அரசு கார்டன் என்கின்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே அதன் உரிமையாளர் இவர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்கு பொது வழி உள்ளது.

    இந்த நிலையில் 40 குடும்பங்கள் செல்லும் வழியை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். மேலும் அவர் வங்கியில் கடன் திருப்பி செலுத்தாததால் அந்த 40 குடும்பங்கள் செல்லும் வழியை வங்கி ஏலம் விட்டது.

    இந்த வங்கியில் சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் ஏலத்திலிருந்து எடுத்து தற்போது அங்கு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்

    இதனால் பொது வழி அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் செல்ல வழி இல்லாத காரணத்தால் ஆரணி தாலுக்கா போலீசாரிடமும் மற்றும் கோட்டாட்சியரிடமும் மனு அளித்தனர்.

    அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மில்லர்ஸ் சாலையில் இன்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வந்த ஆரணி இன்ஸ்பெக்டர் ராஜங்கம், எஸ்.ஐ ஷாபூதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் மறியலை கைவிட்டு கலைத்து வைத்தனர். அப்போது குடியிருப்பு பகுதி சேர்ந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×