search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே சுரங்கப்பாதை வரைபடத்தில் உள்ளது போல் இல்லை என்று கூறி பொதுமக்கள் மறியல்
    X

    ரெயில்வே சுரங்கப்பாதை வரைபடத்தில் உள்ளது போல் இல்லை என்று கூறி பொதுமக்கள் மறியல்

    • பணி நிறுத்தத்தால் அரக்கோணத்தில் பரபரப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - மும்பை ரெயில் மார்க்கத்தில் கைனூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டின் வழி யாக சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநி லங்களுக்கும், இதே போல் மறுமார்க்கத்தில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத் தின் பிற மாவட்டங்கள் மற் றும் கேரளா, கர்நாடகா மாநி லங்களுக்கும் ரெயில்கள் மற் றும் சரக்கு ரெயில்கள் செல் கின்றன.

    இதனால் அவ்வப்போது அந்த கேட் மூடியிருப்பதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனால் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அந்த பகு தியில் சுரங்கபாதை அமைப்ப தற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங் கப்பட்டது.

    இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற் கான வரைபடத்தை காண் பித்து பணிகள் தொடங்கிய பின் இப்போது அந்த வரைப டத்தில் உள்ளது போல் இல் லாமல் வளைவாக மாற்றி அமைத்து வருகின்றனர்.

    இத னால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, இந்த பணியை நிறுத்த வேண்டும். எனக்கூறி மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால் பணிகள் நிறுத்தப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாசில்தார் சண்முக சுந்தரம், ரெயில்வே இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×