search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் மறியல்
    X

    சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் மறியல்

    • ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாக புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து சுடுகாடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×