search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rainwater"

    • சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.
    • தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

    இருப்பினும், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.

    இந்நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்," சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

    • 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது.
    • தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மிச்சாங் புயல் சென்னை நகரை புரட்டிப்போட்டு உள்ளது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கொரட்டூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் அப்பகுதி முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி குடியிருப்புகள் வெள்தத்தால் சூழப்பட்டது. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் கொரட்டூர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    குறிப்பாக கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் திக்குமுக்காடினர். பலத்த மழை காரணமாக பட்டாபிராம் ஏரி, ஆவடி ஏரி, அயப்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்து கொரட்டூர் ஏரிக்கு வந்தபோது கொரட்டுர் ஜீரோ பாயிண்ட் நிரம்பி உபரி நீரானது கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது ஏற்கனவே பள்ளமான பகுதி என்பதால் 4 நாட்கள் ஆகியும் தண்ணீர் இன்னும் குறையவில்லை. மழை நின்று 3 நாட்கள் ஆகியும் மழை நீர் வெளியேறாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வடக்கு பகுதியில் 55 முதல் 67 தெருக்கள் மற்றும் மத்திய நிழற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. இன்னும் ஒரு அடி கூட குறையவில்லை. 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 4 நாட்களாக அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.

    தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு பால், உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள். தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.அவர்களுக்கு நிவாரண உதவி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழையால் எங்கள் வாழ்வாதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு முழுவதுமே தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது. உணவுக்கும் தண்ணீருக்கும் மிகவும் கஷ்டப்படுகிறோம். நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வீட்டிற்குள்ளே 5 நாட்களாக அடைபட்டு இருக்கிறோம். கீழே வந்தால் எங்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமாளித்தோம். இனிமேல் என்ன செய்வோம். எங்களுக்கு பால் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாங்கள் இப்படி அவதிப்பட வேண்டுமா? எங்களுக்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாதா? கேட்டால் ஏரியை உடைத்து விட்டோம் என்கிறார்கள். எந்த ஏரியை உடைத்து விட்டார்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் பால், குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    பட்டரைவாக்கம் பால்பண்ணையில் மழைநீர் புகுந்துள்ளதால் 3-வது நாளாக அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம், உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கொரட்டூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் கொரட்டூர் வடக்கு அக்கரகாரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிடிபி காலனி, மேனாம்பேடு மெயின் ரோடு, பட்டரைவாக்கம் பிரதான சாலை பகுதிகளில் மழைவெள்ளம் குறைந்ததால் அங்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ தொற்பேட்டை பகுதியான பட்டரைவாக்கம் பகுதியில் சுமார் 1000- மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டறைவாக்கம் கொரட்டூர் சாலையில் பட்டரைவாக்கம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கம் போல் வாகனங்களை இயக்கப்படுகின்றன.

    இதற்கிடையே இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலையின் உரிமையாளரிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல், மண்டலகுழுத் தலைவர் பி கே மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து இடங்களும் வெள்ளக்காடானது. கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அப்பகுதியில் மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வெள்ள நிவாரண பணிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பூந்தமல்லி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் எங்கள் பகுதியில் மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார சப்ளையும் கொடுக்கவில்லை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள வார்டில் இந்த நிலைமை என்றால் மற்ற வார்டுகளின் நிலை எப்படி இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மழைநீரை உடனே அகற்றி மின் வினியோகம் வழங்க கோரி லஸ்கார்னர் பகுதியில் பொதுமக்கள் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.
    • மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிச்சாங் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
    • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • பன்னம்பாறை வேதக்கோவில் தெருவில் தசரா நேரத்தில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மழைநீர் வடியாமல் உள்ளது.
    • இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வேதக் கோவில் தெருவில் தசரா நேரத்தில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஒரு மாதத்தி ற்கும் மேலாக தேங்கிய மழை நீரில் தான் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் கால்களில் சேற்றுப்புண் ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.

    இது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு களை அதிகாரி களிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டி ருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட பல்வேறு பகுதி களில் மழைநீர் அகற்றும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாநகராட்சிக் குட்பட்ட கார்த்திகேயன் நகர் பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெறுவதையும், வில்வநகர் பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், அதனருகே மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டி ருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் நீர்வரத்தை பார்வையிட்டு, அதனருகே நெடுஞ்சாலை துறை மற்றும் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில பொது மக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வருவாய் த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப் புத்துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்க ளிடம் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கனமழை எற்படும் போது அதனை பொதுமக்களுக்கு எவ்வித பதிப்புக்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் அளவிற்கு அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ சேகரன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரண்யா , மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • புதுவையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் கோபால், சன்.சண்முகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள படுகை அணை, ஏரி மற்றும் குளங்களை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் நீர் வழித்தடத் தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் பயன்பெரும் வகையில் மட்டுமே காப்பீட்டு திட்டம் உள்ளது.

    பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுவை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் பயிர் காப்பீடு திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகளாக மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் மற்றும் மழை பாதிப்புகளுக்கான எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எல்லாவற்றையும் பேசக்கூடிய கவர்னர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். புதுவை அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • மழை வெள்ளம் அதிகளவில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பதுவையில் நேற்று 24 மணிநேரம் பெய்த தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவ மழை அதிகமாக இருக்கும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த வாரம் கூட்டத்தை கூட்டி அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டார்.

    பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, மின் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் நள்ளிரவு முதல் பணியாற்றி வெள்ளப் பாதிப்பை தடுத்துள்ளனர்.தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் வெளி யேற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டதனால் மழை நீர் தேங்கும் பகுதிகள் சீரமைக்கப் பட்டுள்ளது. மேலும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதனால் புதுவை மற்றும் காரைக்காலில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு ள்ளது.

    சங்கராபரணி ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் மழை வெள்ளம் அதிகளவில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை புதிதாக கட்டும் பணி ஜனவரி மாதம் தொடங்கும். மற்ற படுகை அணைகளில் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கடுமையான மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக் கூடங்கள், நகராட்சி சொந்த மான கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு செல்லவும். அங்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    புதுவையில் 84 ஏரிகளில் உள்ள மண்ணை தேவையானவர் எடுத்து செல்லலாம் என்று கூறியதன் காரணமாக தற்போது ஏரிகளில் நீர் அதிக அளவில் தேங்க தொடங்கி உள்ளது. மேலும் மழைக்காலத்தில் நீர் பிடிப்பு பகுதியில் நிறைய தண்ணீரை சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீர்காழியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற நடைபெற்றது.
    • கவுன்சிலர்களுக்கும் ரெயின் கோட் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, வருவாய் ஆய்வாளர்சா ர்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கணக்கர் சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    ரமாமணி (அதிமுக):

    எனது வார்டில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.

    சாமிநாதன் (திமுக): நகராட்சியில் வரி வசூல் முறையாக நடக்கிறதா? எனது வார்டில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    பாலமுருகன் (அதிமுக):

    எனது வார்டில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்களை அழிக்கக்கூடிய கொசு மருந்து களை அடிக்க வேண்டும்.

    சூரியகலா(அதிமுக):

    10-வது வார்டில் கொசு மருந்து அடிக்கவேண்டும்.

    ராமு(திமுக):

    மீன் மார்க்கெட் அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜேஷ்(அதிமுக):

    எனது வார்டில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன சில சமயங்களில் வீடுகளில் புகுந்து உணவை சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றன இதனால் மக்கள் அவதி ப்படுகின்றனர். உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயந்தி பாபு(சுயே.):

    பேசுகையில் எனது வார்டின் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வரும் சாலை சேரும், சகதியுமாக இருக்கு இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    முபாரக் அலி(திமுக):

    தேர் வடக்கு வீதி மற்றும் காமராஜர் வீதிகளில்மக்கள் கூட்டம் அதிகளவு சென்று வருவதால் நாள்தோறும் மூன்று முறை கொசு மருந்து, பிளிசிங் பவுடர் தெளிக்க வேண்டும்.

    ராஜசேகர்(தேமுதிக):

    அனைத்து கவுன்சிலர்களுக்கும் மழைக்காலம் என்பதால் ரெயின் கோட் வழங்க வேண்டும் என்றார்.

    நகராட்சிக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் கடைகளுக்கு வரி விதிக்கவேண்டும்.

    வேல்முருகன்(பாமக):

    எனது வார்டில் மினி மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும்.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் (திமுக):

    சீர்காழி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பன்றிகள் அதிக அளவில் பிடிக்கப்பட்டுள்ளன மேலும் தொடர்ந்து பன்றிகள் சுற்றி திரியும் இடங்கள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தால் உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அந்த பகுதிகளில் விடப்பட்டு வருகிறது.

    சீர்காழி நகரில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் எச்சரித்து விடுவிக்க ப்பட்டுள்ளது.

    மேலும் சில மாடுகள் கோசாலையில் விடப்பட்டுள்ளன.

    நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருப்ப வர் தொடர்பாக கணக்கெடு க்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா:

    சீர்காழி நகராட்சி யில் வரி செலுத்தாமல் சென்றவர்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மீண்டும் வரி கட்ட தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • திருவாடானை அருகே சமத்துவபுரத்தில் தொடக்கப்பள்ளி, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சமத் துவபுரம் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையாக கழிவுநீர் மற்றும் வடிகால் கால்வாய் வசதிகள் அமைக்காததால் தற்போது பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக வீடுகளுக் குள்ளும் வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் குடியிருக்க முடியாமல் அப்பகுதி மக் கள் பரிதவித்து வருகின்ற னர். மேலும் அங்குள்ள குழந்தைள் மற்றும் பெரிய வர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் மாணவர் கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கண்துடைப் பிற்கு மட்டுமே வந்து பார் வையிட்டு செல்வதாகவும் எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாத தால் நேற்று பெய்த கனமழையின்போது தண்ணீர் கிராமத்தை சூழ்ந்தது.
    • பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டி பட்டி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித் தொழிலாளிகள்.

    இங்கு அங்கன்வாடி மையம், அரசு கள்ளர் பள்ளி மற்றும் முத்தால ம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில்கள் உள்ளது. இக்கிராமத்தில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படாத தால் நேற்று பெய்த கனமழையின்போது தண்ணீர் கிராமத்தை சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியா மல் மிகுந்த சிரமப்பட்டன.

    வேறு வழியின்றி ரோட்டின் ஒரு பகுதியை உடைத்து தண்ணீர் வெளியேற்றினா லும் ஆங்காங்கே தண்ணீர் பள்ளிகூடம் மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கனமழை பெய்யும் நேரங்களில் எல்லாம் இதேபோன்ற சூழல் நிலவுவதால் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×