search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encroachment"

    • சாலைப்பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
    • இழப்பீடு வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக பொள்ளாட்சி முதல் காமலாபுரம் வரை விபத்து இல்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக லக்கையன்கோட்டை கிராமத்தில் சுமார் 1 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த னர். இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் உரிய இழப்பீடு தொகையை வாங்கி தருவதாக கூறி சமரசம் செய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்கு வரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பல்வேறு சாலைகளில் அனுமதி பெறாத தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதேபோல் லாஸ்காட்ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள பி.டி.ராஜன் சாலை ஆகிய பகுதிகளிலும் பஸ்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஏரிச்சாலையில் இருந்து வரும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான நெடுஞ்சாலையான அரசு மருத்துவமனை சந்திப்பு சாலையில் உள்ளதங்கும் விடுதிக்கு வரும் அனைத்து பேருந்துகளையும் பிரதான நெடுஞ்சாலையிலேயே நிறுத்துவதால் காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் மற்றும் பிற நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    மகாராஜா என்கிற தங்கும் விடுதியை வாடகை ஒப்பந்தத்தில் எடுத்துள்ள உரிமையாளர் மற்றும் மேலாளர் போக்குவரத்து நெரிசலை தட்டி கேட்பவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசுவதோடு, நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று மிரட்டுகிற தொனியில் பேசுவதாகவும் நாங்கள் நிறுத்தும் வாகனங்களை அகற்ற சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டி வருவதாகவும் உள்ளூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எத்தனை முறை போலீசார் அங்கு நிறுத்த ப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிரதான நெடுஞ்சாலைகளிலேயே பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த தங்கும் விடுதி முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா? கார் பார்க்கிங் வசதி உள்ளதா? என்பதை மாவட்ட காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதுபோன்ற தனியார் ஆக்கிரமிப்பால் மேலும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.

    • ஆக்கிரமிப்பு நிலம் கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
    • இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடி ஆகும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரையில் உள்ள விஸ்வநாதசாமி கோவிலுக்கு சொந்தமான, பட்டுக்கோட்டை , காசாங்கு ளம் கீழ்க்கரை பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 811 சதுர அடி பர ப்பளவு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணை யர் ஞானசேகரன் மற்றும் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமை எழுத்தர் பிரகாஷ் பரம்பரை அறங்காவலர் கட ம்பநாதன், திருக்கோயிலின் செயல் அலுவலர் சுந்தரம் கணக்கர் ரெங்கராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் முன்னிலையில் ஆக்கிரமி ப்பு நிலம் மீட்கப்பட்டு அங்கு நிரந்தர அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் திருக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடிகள் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பொதுப்பணி நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தது.
    • தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி நகரில் பிரதான கால்வாயாக உள்ள ராஜ வாய்க்கால் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பிரிந்து தேனி பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை செல்கிறது.

    பொதுப்பணி நீர்வள த்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிர மிப்புகளால் ராஜவாய்க்கால் அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போய் சாக்கடை போல் மாறி விட்டது. அதன்காரணமாக கால்வாயில் நீர் செல்வது அரிதாகி விட்டது. மேலும் சாக்கடை போல் மாறிய கால்வாய் பகுதியில் ஆக்கிர மிப்பு மற்றும் கழிவுகள் அடைக்கப்பட்டிருப்பதால் மழை பெய்யும் நாட்களில் தேனி நகரில் வழிந்தோடும் நீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ராஜ வாய்க்கால் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நட வடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

    இந்நிலையில் தேனியை சேர்ந்த தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேனியில் உள்ள பிரதான ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடக்கப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, பொதுப்பணி நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தேனி கொட்டக்குடி ஆற்றில் இருந்து தாமரைக் குளம் கண்மாய் பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு வருகின்றன.

    இவற்றில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் கட்டிடங்களுக்கு பின்புறமே எடுக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசவோ, பரபரப்போ ஏற்படுத்த வில்லை. ஆனால் ராஜவாய்க்கால் பகுதி தேனி பழைய பஸ் நிலையத்தின் வழியாக அடியில் செல்வ தால் பழைய பஸ் நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள், மாடியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட், தரை வாடகை கடைகள் போன்றவை அகற்றப்பட்டது. அதனால் தேனி பழைய பஸ் நிலை யத்தின் வழியாக பஸ்கள் வந்து செல்ல அனுமதிக்க ப்படாமல் தற்காலிகமாக பஸ்நிலையம் மூடப்பட்டது.

    இதனால் தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் பஸ்கள் சாலை பகுதியிலே பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதற்கிடையே பழைய பஸ் நிலையத்திற்கு வெளியே தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் தூர் வாரும் பணியும் நடந்தது. இதன்கார ணமாக பொதுமக்கள் மத்தியில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து காட்டு தீ போல் பரவி பரபரப்பை ஏற்படு த்தியது.

    தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டதை பொதுமக்கள் ஆர்வத்துட னும், ஆச்சரியத்துடன் பார்த்து, பரபரப்பாக பேசிவிட்டு சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேனி-மதுரை சாலையில் ராஜவாய்க்கால் செல்லும் தாமரைக்குளம் வரை பாரபட்சமின்றி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
    • முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

    இது கடந்த 1967-ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு மது பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகள் கட்டப்பட்டு வணிக வளாகமாக செயல்பட்டது. குத்தகை முடிந்த பின்னரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

    இந்நிலையில் பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் இன்று காலை வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

    முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பான பெரிய பேனரையும் அங்கு வைத்தனர்.

    • 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது.
    • 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி உள்ளனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம், தைக்கா ல் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான அன்னச்ச த்திரத்துக்கான 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது.

    இதனை அடுத்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமி ப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது அதிகாரிகள் முதற்கட்டமாக 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி யுள்ளனர். மீதமுள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் மறைமுக பாசனம் மூலம் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லோயர்கே ம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், ஆற்றின் அகலம் சுருங்கிக் கொண்டே செல்கின்றது.

    இதனை தடுக்கும் விதமாக பொதுப்பணித்துறையினர் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கம்பம் காமயகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் முல்லைப்பெரியாறு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தின் வடக்குப் பகுதியில் மயானம் அருகே தனிநபர் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் கரையை சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக காமயகவுண்டன் பட்டி வி.ஏ.ஓ. நஜீம்கானிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வி.ஏ.ஓ. ஆய்வு நடத்தினார். அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கரையை சமன்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி னார். பின்னர் பொதுப்பணி த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை யடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்த னர். இது குறித்து பொது ப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    முல்லைப்பெரி யாற்றின் கரையோரங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
    • இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
    • சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராமமக்கள் அறிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளி களுக்கு நடுவில் மயானம் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் மயானம் செல்வ தற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்த தால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.

    ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களின் ஆக்கிரமிப்பு களை திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி,திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி,ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன்,ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமப்பு களை அகற்றினார்.

    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.
    • தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.

    உடன்குடி:

    குகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பல லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா விற்காக பல்வேறு பணிகள் தற்போது தொடங்கப்ப ட்டுள்ளது,

    குலசேகரன்பட்டினத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டு களுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.

    இதுகுறித்து நெடு ஞ்சாலைத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் முறையான பதிலளிக்கப்பட வில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் ஆக்கிர மிப்புகள் அகற்று வதற்காக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் வந்தனர். அப்போது வீடு கட்டி குடியிருந்த குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே குலசேகரன்பட்டினம் போலீ சார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனையடுத்து பல ஆண்டுகளாக நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமாக ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறும் போது பலலட்சம் கூடும்தசரா பக்தர்களுக்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதுவும் விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    • மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை மிக அகலமாக இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது.
    • மேலும் மாணவ- மாணவிகள் பிரதான சாலையை கடக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு வரை அவ்வப்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

    வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் ஏரிச்சாலை வரை லாஸ்காட் ரோடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலைகளில் சாலைகளின் இரு பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தேவையான இடங்களில் சாலை தடுப்புகளை வைக்காமல் இட நெருக்கடி உள்ள சாலைகளில் சாலை தடுப்புகளை வைக்கின்றனர். குறிப்பாக மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை மிக அகலமாக இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. இப்பகுதி உணவகங்கள், சாலையோர கடைகள், அங்கு நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாணவ- மாணவிகள் பிரதான சாலையை கடக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    இதே பகுதியில் தான் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இதனை நேரடியாக கண்டும் காணாதது போல் கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக மூஞ்சிக்கல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் இன்றுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கனரக வாகனங்களை பிரதான சாலையில் நிறுத்துகின்றனர்.

    இதன் காரணமாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் கூட செல்லமுடியவில்ைல. எனவே சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.

    சேலம்:

    சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துவிட்டு அவர்கள் கூறியதாவது,

    சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 56 சென்ட் நிலம் உள்ளது. எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.

    இது குறித்து கேட்டபோது 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து எங்களை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தி.மு.க. பிரமுகர் என்பதால் எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் நட வடிக்கை எடுக்க மாட்டார்கள் என மிரட்டுகிறார்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×