என் மலர்
நீங்கள் தேடியது "நிலம்"
- காலப் போக்கில் வீட்டு விலை ஏறும்போது நம் சேமிப்பின் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
- நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தின் படிகளில் ஒவ்வொன்றாகப் பார்த்துவரும் நாம் இன்று வீடு என்னும் படியில் நிற்கிறோம். எலிவளையானாலும் தனக்கென்று ஒரு தனிவளை வேண்டும் என்று விரும்பாதவர் யார்? சொந்த வீடு என்பது சிலருக்கு வாழ்நாள் கனவாகவே இருக்கிறது.
நம் முன்னோர்கள் சுருக்கமாக "பணத்தை மண்ணில் போடு; இல்லை பொன்னில் போடு" என்று கூறிவிட்டார்கள். அறிஞர் மார்க் ட்வெயினோ "நிலம் வாங்குங்கள்; கடவுள் அதைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்" என்கிறார். மேலும் வீடு என்பது இருப்பிடம்; பாதுகாப்பு; முதலீடு; எனும் எல்லாவற்றையும் தாண்டி அன்றாடத் தேவையும் கூட. ஆனால் இன்று யூட்யூப் போன்ற சமூகத்தளங்களில், கடன் பெற்று வீடு வாங்குவதை விட பொருளாதாரச் சொத்துக்களில் முதலீடு செய்வது சரி என்பது போல செய்திகள் வருகின்றன. ஆனாலும் நம்மில் பலருக்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டின் மீது ஆசை வருவதன் காரணமென்ன?
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் பல நன்மைகள் உண்டு. நாம் தூங்கும்போதும் நமக்காக நம் பணம் வேலை செய்யவேண்டுமெனில் அதற்கான தளம் ரியல் எஸ்டேட். நாம் ஒரு சொத்தை வாங்கி வாடகைக்கு விட்டால், அது நமக்கு மாதாந்திர வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
காலப்போக்கில் கண்டிப்பாக விலை அதிகரிக்கக்கூடியவை என்று தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டை மட்டுமே கூறலாம். விலை சற்று குறைவாகக் கிடைக்கும்போது வாங்கிவைத்துவிட்டு, சிலகாலம் பொறுமையாக இருந்தால் ரியல் எஸ்டேட் விலைகள் கண்டிப்பாக அதிகரிக்கும். விலை மட்டுமல்லாது, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் காலப்போக்கில் அதிகரிக்கிறது. ஆகவே இது பணவீக்கத்துக்கு எதிரான கேடயமாகவும் உள்ளது.
நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு வருமானமும் ஓரளவுக்கு வரிக்கு உட்பட்டது. ஆனால் பழைய வரிமுறையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், ரியல் எஸ்டேட் வருமானம் நமக்கு அதிகபட்ச வரிச் சலுகையை அளிக்கிறது. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், அரசு மானியம், வட்டிக்கும் அசலுக்கும் வரிவிலக்கு போன்ற சலுகைகள் உள்ளன.
ஆனால், ரியல் எஸ்டேட் முதலீட்டை நாடுபவர்கள் அதிலுள்ள அசௌகரியங்களையும் உணர்தல் நலம். வாங்கல், விற்றலில் உடனுக்குடன் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிப்பவர்களுக்கான இடம் இதுவல்ல.
இந்த முதலீட்டிற்கு அதிகப் பொறுமை தேவை. கைச்சொடுக்கில் பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து விடலாம். ஆனால் ரியல் எஸ்டேட்டில் பொருத்தமான சொத்தைத் தேர்ந்தெடுப்பது, தேவையான நிதிகளைச் சேகரிப்பது, ரிஜிஸ்தர் செய்வது மற்றும் உரிமையை மாற்றுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளுமே நிறைய நேரம் எடுப்பவை. பலவிதமான ஆவணங்கள், சட்ட வல்லுநர்களுடனான தொடர்புகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி வருகை ஆகியவை நம்மை சோர்வடைய வைக்கும். மேலும் ரியல் எஸ்டேட்டை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விலையில் வாங்குவது முக்கியம். கையில் பணம் இருக்கிறது அல்லது கடன் கிடைக்கிறது என்பதற்காக இதில் இறங்குவது தவறு.

சுந்தரி ஜகதீசன்
இன்று இந்தியாவில் விலை போகாமல் கிடக்கும் அபார்ட்மென்ட்களில் 20% சென்னையில் இருப்பதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். ஏர்போர்ட் அருகே ஒரு ஸிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட் விலை ரூபாய் 60 லட்சம். அதில் வரக்கூடிய வாடகை ரூ.15000. ஆனால் வீட்டுக்கடனுக்குக் கட்ட வேண்டிய மாதாந்திர இன்ஸ்டால்மென்ட் ரூ.42000; அதுவும் 20 வருடங்களுக்கு. அடுத்த 20 வருடம் நாம் இதே ஊரில் இருப்போமா? நம் வேலை நிலைக்குமா? நிலைத்தாலும் 42000 ரூபாய் இன்ஸ்டால்மென்ட் கட்ட இயலுமா? இப்படியெல்லாம் நம் சிந்தனை செல்வது நியாயம்தானே? மேலும், சில பில்டர்கள் ஐந்தாறு வருடங்கள் இழுத்தடிப்பதும், முறையான பர்மிஷனோ, பத்திரங்களோ இன்றி செயல்படுவதும் நம்மை பயமுறுத்துகிறது. சரி, வீடு வேண்டாம்; நிலம் வாங்கிப் போடலாம் என்றால், நிலத்தின் விலை கைக்கெட்டாமல் பறக்கிறது; நில அபகரிப்பு வேறு அச்சுறுத்துகிறது.
இந்தக் காரணங்களால் சமீப காலங்களில் இளைய தலைமுறையினர் வீட்டை ஒரு பாரமாக, ஒரு வேண்டாத முதலீடாகப் பார்க்கத் துவங்கியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை நிலத்தின் விலை வானத்தின் உச்சிக்கே சென்றதில் வீடு என்பது பல மடங்கு பெருகும் ஒரு நல்ல முதலீடாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அதிலிருந்து கிடைக்கும் வருமானம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் மட்டுமே. வீட்டுக் கடன் வாங்கும்போது டவுன் பேமென்ட்டுக்காக நம் மொத்த சேமிப்பையும் காலி செய்கிறோம். அடுத்த இருபது வருடங்கள் "வேலை நிரந்தரம்தானா; ஒவ்வொரு மாதமும் தவறாமல் இ.எம்.ஐ. கட்ட முடியுமா" என்ற கவலையுடனேயே வாழ்கிறோம்.
ஹோட்டல், சுற்றுலா போன்ற சிறு சந்தோஷங்களை தியாகம் செய்ய நேர்வதோடு, குழந்தைகள் மேற்படிப்பு, நம் ஓய்வுகாலம் போன்ற முக்கிய விஷயங்களுக்கு சேமிக்கவும் பணம் இருப்பதில்லை. ரூ. அறுபது லட்சம் கடன் வாங்கினால் இருபது வருடங்களில் நாம் கட்டும் வட்டியே இன்னொரு அறுபது லட்சத்தைத் தாண்டிவிடும் அபாயமும் உள்ளது. இன்று கட்டப்படும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள் 30 முதல் 40 வருடங்களே நிலைக்கும் என்று சில ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுவது உண்மைதானோ என்ற கவலை இருக்கிறது. நம் பட்ஜட்டுக்குள் வரும் வீடு அனேகமாக புறநகர் பகுதிகளிலேயே அமைவதால் ஆபீசுக்குப் போய் வருவதே பெரிய காரியம் என்றாகிவிடுகிறது. ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டால் வேறு ஊர்களிலோ, ஏன் வேறு ஏரியாவிலோ கூட வேலை தேட மனம் வருவதில்லை. இதனால் நம் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
ஆனால் சென்ற தலைமுறையினர் கூறும் யதார்த்தம் வேறு. வருடா வருடம் வாடகை ஏறும் சூழ்நிலையில் எத்தனை காலம் வாடகை வீட்டில் காலம் தள்ள இயலும்? வாடகை என்பது அடுத்தவர் கைக்குச் செல்லும் பணம். ஆனால் கடன் வாங்கி வீடு கட்டினால், வாடகைக்கு பதில் நாம் கொடுக்கும் இ.எம்.ஐ. நமக்கு சொத்தாகச் சேர்கிறது. மேலும் காலப் போக்கில் வீட்டு விலை ஏறும்போது நம் சேமிப்பின் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.
இப்படி இரு தலைமுறையினரும் தத்தம் வாதங்களில் சரியாகவே இருக்கிறார்கள். அப்படியானால் என்ன செய்யலாம்? வீடு என்பது என்றுமே ஒரு அடிப்படை தேவைதான். ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவை என்று அரசு கூறுவதில் அர்த்தம் உள்ளது.
ஆனால் அதற்காக வேறு எல்லாவற்றையும் தியாகம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிதாக வேலைக்கு சேர்பவர்கள் முதலில் வாடகை வீட்டில் இருந்து தேவையானபோது வீட்டை மாற்றுவது, ஆபீஸ் அருகே குடிபோவது, வாழ்வின் சிறு, சிறு சந்தோஷங்களை அனுபவிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம். எச்.ஆர்.ஏ. வரிவிலக்கும் பெறலாம். நிதானமாக டவுன் பேமென்டுக்கான பணத்தை சேமித்து, பேங்க்கில் கடன் வாங்கி வீடு வாங்கலாம். கூடியவரை வீட்டின் விலையில் 50 சதவிகித அளவு டவுன் பேமென்ட்டாக கொடுக்க முடிந்தால் இ.எம்.ஐ. சுமையாக இருக்காது.
"சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் விலை ஏறிவிட்டது; ஆனால் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற டவுன்களில் இன்னும் கைக்கெட்டும் அளவில் வீட்டு விலைகள் இருக்கின்றன. தற்சமயம் இவற்றில் ஒன்றில் முதலீடு செய்து, வாடகைக்கு விட்டு, வங்கிக் கடனைக் கட்டி விடுவேன். 20 வருடம் கழித்து நான் செட்டில் ஆகப் போகும் நிலையில் இதே வீட்டைப் பயன்படுத்தலாம்; அல்லது இந்த வீட்டை விற்று எனக்குத் தேவையான இடத்தில் வாங்கிக் கொள்ளலாம்" என்று எண்ணுபவர்களும் உண்டு.
நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மீது நம்பிக்கையும், பிரியமும் உள்ளவர் என்றால், கடைகள், அலுவலகங்கள், கிட்டங்கிகள், இண்டஸ்ட்ரியல் ஷெட்கள் போன்ற வணிகச் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இவை இருக்கும் இடம், தரும் வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து ஆறு முதல் எட்டு சதவிகிதம் அளவு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
"இந்த வணிகச் சொத்துக்கள் சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு எட்டாக்கனி" என்றிருந்த காலம் மாறி விட்டது; காரணம் –ஆர்.இ.ஐ.டி. – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்.
இது ஒரு புதிய முதலீட்டு வழி. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பாக செயல்படும் இது, ஏறக்குறைய ஒரு மியூச்சுவல் பண்ட்தான்.
மியூச்சுவல் பண்டில் நாம் முதலீடு செய்யும் பணத்தை பண்ட் மேனேஜர் மொத்தமாக சில பல கம்பெனி ஷேர்களில் முதலீடு செய்கிறார். அதில் வரக்கூடிய டிவிடெண்ட், முதலீட்டு லாபம் போன்றவற்றை நம் முதலீட்டுக்கு தகுந்தாற்போல நமக்கு பிரித்துத் தருகிறார். ஆர்.இ.ஐ.டியில் நாம் முதலீடு செய்யும் பணத்தை அந்தக் கம்பெனி பலவிதமான ஹாஸ்பிடல்கள், ஆபீஸ் காம்ப்ளெக்ஸ், 5 ஸ்டார் ஹோட்டல், மால் போன்ற கமர்ஷியல் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்கிறது. வரக்கூடிய வாடகை வருமானத்தில் செலவுகள் போக மீதி இருக்கும் பணத்தில், 90% அளவு நமக்கு அந்தக் கம்பெனி கொடுக்கவேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதனால் ஒரு நிலையான வருமானம் நமக்குக் கிடைக்கும். மேலும் இந்த ஷேர்கள் சந்தையில் லிஸ்ட் ஆகின்றன. ஷேர் விலை ஏறினால் அதிலும் நமக்கு லாபம் வர வாய்ப்பு இருக்கிறது.
இந்த புதிய முதலீட்டு வழியால் நம் போன்ற சிறுமுதலீட்டாளர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே, கம்ப்யூட்டரை க்ளிக் செய்து ஒரு பெரிய மாலில் கூட நாம் விரும்பும் கடையில் முதலீடு செய்ய முடியும். நாம் நெருங்கவே முடியாதபடி விலை உயர்ந்ததாக இருக்கும் வணிகச் சொத்தில் ஆர்.இ.ஐ.டி.யின் புண்ணியத்தில் வெறும் ரூ. பத்தாயிரம் முதலீட்டில் கூட உரிமை பெறலாம். தங்கத்தில் பேப்பர் கோல்ட் இருப்பது போல, ரியல் எஸ்டேட்டில் இது ஒரு பேப்பர் சொத்து.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்பது போல் நிலம், வீடு, ப்ளாட், கமர்ஷியல் ரியல் எஸ்டேட், ஆர்.இ.ஐ.டி. என்று ரியல் எஸ்டேட் முதலீடுகள் பலவிதமாக உள்ளன. அவற்றில் நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
நீங்கள் எந்த ஊரில் வீடு வாங்க விரும்புகிறீர்கள்? அந்த வீடு என்ன விலை? அதற்காக எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள்?
- பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
- முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது.
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழக அரசு "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் இப்போது, பொதுமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழக அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள போலீஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களும் முழுமையாக காட்டப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த தகவல் அமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நடைமுறையில் வந்துள்ளது.
முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக https://tngis.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறிய முடிகிறது.
தற்போது இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களும் இதில் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வசதிகளை இணையதளத்தோடு மட்டுமல்லாமல், TN-GIS என்ற மொபைல் செயலியாகவும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
- சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தர விட்டது.
இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் மங்கையர்க்கரசி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் அன்ன தானப்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
உடுமலை :
மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
- மதுரை விமான நிலைய விரிவாத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
- டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார்.
அவனியாபுரம்
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கு வதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைக்கான விமானங்கள் வந்தால் ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சுங்கஇலாகா சேவை இயங்கி வருகிறது. இதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கூடுதலாக விமானங்கள் வந்து சென்றால் அதுகுறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
கொரோனா விதி முறைகள் குறித்து மத்திய அரசு விதிகளை பின்பற்ற அறிவித்துள்ளது. அதனை அனைத்து விமான நிலை யங்களிலும் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைபிடிக்க வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகி பேரா சிரியர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் சசிகுமார், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக், கோல்டன் ரவி, அவனி கருப்பையா,சடாச்சாரம், பெருங்குடி முத்துமாரி, முத்துகுமார், சுந்தர் வெற்றி செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
- 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை.
- நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வக்பு வாரிய நிலம் என கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வடுகபாளையம் கிராமத்தில் ராமமூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசுவதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை. இந்த பிரச்சினையால் நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
- 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-
நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
நடப்பாண்டில் மானிய கோரிக்–கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடையும் விதமாக சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த விவசாயத்தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முத்திரை தாள் கட்டணத்தில் விலக்கு இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசியுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டன.
- ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும்
சோழவந்தான்
வாடிப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், சேவை மையம் என ஒருங்கி ணைந்த வளாகம் கட்ட கடந்தாண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக காடுபட்டி கிராமத்தில் சர்வே எண் 566/37 மற்றும் 293/2-ல் அமைந்துள்ள அரசு நத்தம் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வருவாய் துறை மூலம் சர்வே பணி செய்து கொடுக்க காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் உள்ள வட்ட அளவையர் பிரிவில் சர்வே பணிக்குறிய தொகையான ரூ.1600-ஐ இ-சலான் மூலம் கடந்தாண்டு நவம்பர் 14-ல் செலுத்தப்பட்டது.
ஆனால் இதுவரை அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெறா மல் 4 மாதங்களாக சர்வே பிரிவினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தென்கரை குறுவட்ட அளவையர் சந்திரா தலைமையில் காடுபட்டி அரசு நத்தம் சர்வே எண். 566/37 மற்றும் வடகாட்டுபட்டி மந்தைகளம் சர்வே எண் 293/2-ல் உள்ள 1 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி நிலத்தை மீட்டனர்.
அப்போது ஊராட்சி தலைவர் ஆனந்தன், யூனியன் பொறியாளர் பூம்பாண்டி, மேற்பார்வை யாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனி ருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முத்துபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கி ணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- நில உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
- 15-ந்தேதி மேலச்செவல் உள்ளிட்ட ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நில உரிமையாளருக்கு இழப்பீடு
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா நகல், வில்லங்கச் சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலமெனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள்
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழுமடை, தோட்டாக்குடி, தருவை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் முகாம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) புதுக்குடி, மேலத்திடியூர், கஸ்தூரிரங்கபுரம் ஆகிய ஊர்களிலும், 9-ந் தேதி கேசவசமுத்திரம், அ.சாத்தான்குளம், புதுக்குளம், காடன்குளம், திருமலாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, உறுமன்குளம் ஆகிய கிராமங்களிலும், 10-ந் தேதி பத்தமடை, கோவன்குளத்திலும் முகாம்கள் நடைபெறுகின்றன.
13-ந்தேதி பிரான்சேரி, குறவர்குளம், திருவெம்பலாபுரம், 14-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -2, பருத்திப்பாடு, செங்குளம், முனைஞ்சிப்பட்டி.
மூலைக்கரைப்பட்டி- விஜயநாராயணம்
15-ந்தேதி மேலச்செவல், பொன்னாக்குடி, இலங்குளம், 16-ந்தேதி புதுக்குடி, ஆழ்வானேரி, தருவை, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம், உறுமன்குளம், 17-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -1, மூலைக்கரைப்பட்டி, மேலத்திடியூர், கோவன்குளம் ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
20-ந்தேதி கொழுமடை, தோட்டாக்குடி, புதுக்குளம் திருவலாபுரம் 21-ந் தேதி பிரான்சேரி, அ.சாத்தான்குளம், குறவர்குளம், காடன்குளம், திருவெம்பலாபுரம், விஜயநாராயணம் பகுதி -1, கஸ்தூரிரங்கபுரம்,
23-ந்தேதி பத்தமடை, பருத்திப்பாடு, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, இலங்குளம், தெற்கு வீரவநல்லூர் -2 ஆகிய ஊர்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.
- அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் கோவில் மனை, மடம், நிலங்களில் குடியிருப்போர் சங்க கூட்டம் நாகை செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.
தற்போது அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் பகுதி என்பதை மாற்றி வாடகை என்ற பெயரில் மிக அதிகமான தொகை நிர்ணயம் செய்து, அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருகிறார்கள்.
அவ்வாறு நிர்ணயம் செய்த தொகையை கட்ட தவறினால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீடு கட்ட மற்றும் எந்த சலுகைகளும் கிடைக்காது என்றும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சொல்லி வருவதை கைவிட வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலூர் ரவி, அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆடிட்டர் கருணாநிதி, மங்கலூர் பிரபாகரன், முஜிபூர் ரஹ்மான், ரெத்தினம், மருதுராஜேந்திரன், திருமலை உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோவில் மனை மடம் நிலங்களில் குடியிருக்கும் சுமார் 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் நிர்வாகி அன்பன் நன்றி கூறினார்.
- காட்டாம்பூர் கண்மாய் நடுவே நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தல் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பாசனம் பெற்று விவசாயம் நடந்து வருகிறது.
இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் வீட்டுமனை போடப்பட்டு உள்ளது. அதற்கு பாதை இல்லாத காரணத்தினால் கண்மாயின் நடுவே அவர் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் செய்தனர்.
அதன்பேரில் சேர்மன்சண்முக வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இதைத்தொடர்ந்து சேர்மன் சண்முக வடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டது.
திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் ஆய்வு செய்து கண்மாய் நடுவே சாலை அமைக்க முயன்ற தனி நபர் மீது புகார் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாயில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
- கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
- அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.
அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.






