search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waqbu Board"

    • 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை.
    • நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வக்பு வாரிய நிலம் என கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வடுகபாளையம் கிராமத்தில் ராமமூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசுவதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை. இந்த பிரச்சினையால் நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×